Tuesday, November 7, 2017

யார் சிறந்த நடிகர்?

வெற்றி அடைந்து விட்டால் ஒருவர் சிறந்த நடிகர் இல்லை. அது அவரது வியாபாரத் திறமையைக் காட்டுகிறது. அவர் படம் அதிக நாட்கள் ஓடி விட்டால் அவர் சிறந்த நடிகர் இல்லை. அந்தப் படத்தில் மற்றவர்களின் பங்கு இருக்கிறது. 

சிலருக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும். நல்ல இயக்குநர்கள் அவரை நடிக்க வைத்து இருப்பார்கள். நல்ல தயாரிப்பாளர்கள் அவரை உபயோகப் படுத்தி இருப்பார்கள். நல்ல கதையோ, பாட்டோ அந்தப் படத்தின் தரத்தை உயர்த்தி இருக்கும்.


எப்பொழுதும் கதாநாயகனாகவே நடித்து, ஒரு பெண்ணுடன் பல நாடுகளில் காதல் பாட்டுக்கள் பாடி, பத்து பேரை அடித்து வீழ்த்தி, "." வசனம் பேசி, ஊருக்கெல்லாம் நல்லவனாக நடிப்பவர் சிறந்த நடிகர் இல்லை. அவர் ஒரு சிறந்த வியாபாரி. மக்களின் ரசனையை நன்கு புரிந்து கொண்டவர்.


ஒரு திறமையான நடிகர் கதாநாயகன், வில்லன், அப்பா, சகோதரன், இளைஞன், வயதானாவன் என்று பலவிதமான பாத்திரங்களை ஏற்று, இயற்கையாக நடித்து, பல கோணங்களில் அந்தப் பாத்திரத்திற்கு உயிர் ஊட்ட வேண்டும். அவர் நடிப்பைப் பார்த்து மக்கள் உணர்ச்சி வசப் பட  வேண்டும்.


ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். தமிழில் "ஆசை" என்று ஒரு படம். திரு. பிரகாஷ் ராஜ் வில்லனாக நடித்திருப்பார். படத்தில் அவரைப் பார்த்தால் அவரைக் கொலை செய்ய வேண்டும் போல் ஒரு வெறுப்பை உண்டாக்குவார். அதற்குப் பெயர் நடிப்பு.


தனக்காக நடிக்காமல் பாத்திரத்திற்காக நடிக்க வேண்டும். ஓரளவுக்கு தான் நடிக்கும் எல்லாப் படங்களிலும் அப்படி நடிக்கும்  நடிகர் தமிழ் நாட்டில்  திரு பிரகாஷ் ராஜ் ஒருவர் மட்டும் தான். ஹிந்தியில் அநுபம் கெர் .இது என் தாழ்மையான அபிப்பிராயம். உங்கள் அபிப்பிராயம் வேறு மாதிரி இருக்கலாம். அதற்கு நான் என்ன செய்வது?


No comments :

Post a Comment