Sunday, November 29, 2020

சில கருத்துக்கள்

1.  உங்களுக்கு ஒரு சின்ன பரிட்சை.

நீங்கள் உங்கள் வீட்டில் தனியாக இருக்கிறீர்கள். அப்போது கீழ்க்கண்ட செயல்கள் நடக்கின்றன. அவைகளை எந்த வரிசையில் செய்வீர்கள் என்பதை வரிசைப் படுத்தி சொல்லவும்.

1. ஒரு வயதுக் குழந்தை தொட்டிலில் அழுகிறது.

2. அடுப்பில் பால் பொங்கப் போகிறது.

3. பாத் ரூமில் பக்கெட் நிரம்பி வழிகிறது.

4. வாசலில் தபால்காரன் தந்தி கொண்டு வந்திருக்கிறார்.

5. மாடியில் துணிகள் மழையில் நனையும் போல இருக்கிறது.

1, 2, 3, 4, 5 என்று வரிசைப் படுத்தவும்.

பி.கு. சரியான விடை: அவ்வளவு மோசமாக நான் என் வீட்டை வைத்துக் கொள்ள மாட்டேன்.

2. தமிழ் தொலைக்காட்சி சீரியல்களின் தத்துவம்.

இன்று அறுவை தாங்க முடியவில்லை, நாளை கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் மறுநாள் பார்க்கும் போது அதைவிட மஹா அறுவையாக இருக்கும். அதற்கு அடுத்த நாளும் அப்படியே இருக்கும். இதுதான் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களின் தத்துவம்.

3. சூப்பர் ரசம் தயார். 

இன்று எங்கள் வீட்டில் ரசம் செய்வதில் ஒரு புது முயற்சி. 

மூன்று ஸ்பூன் பச்சை நிறம் மாறாத தனியா, இரண்டு ஸ்பூன் ஜிரகம், ஒரு ஸ்பூன் வெந்தையம் தேவையான சிவப்பு மிளகாய் இவை நான்கையும் சிறிதளவு எண்ணை விட்டு, தனித்தனியாக வறுத்து, மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியை பயன் படுத்தி எப்போதும் போல ரசம் தயாரிககவும். சிறிது வெல்லம் சேர்க்கவும். சூப்பர் ரசம் தயார்.

4. வாழ்க்கை

ஒருநாளைக்குக் குறைந்தது பத்து பக்கங்களாவது படிக்காவிட்டாலும், ஒரு பக்கமாவது எழுதாவிட்டாலும், ஒரு பதினைந்து நிமிடமாவது நல்ல இசையைக் கேட்காவிட்டாலும், அரை மணி நேரமாவது நகைச்சுவை, சினிமா போன்ற பொழுதுபோக்கும் நிகழ்ச்சிகள் பார்க்காவிட்டாலும், அவர் தனது வாழ்க்கையை வீண் செய்து விட்டதாகும். 

Saturday, November 21, 2020

எனது உளரல்கள்.

1. யார் புத்திசாலி?

ஐந்தறிவு உள்ள நாய், ஒன்றுக்கொன்று சண்டையிடுகின்றன, ஆனால் ஆறறிவு உள்ள மனிதனுடன் நட்பாக இருக்கின்றன. ஆறறிவு உள்ள மனிதன் ஒருவருக்கொருவர் சண்டையிடுகின்றனர். ஆனால் ஐந்தறிவு உள்ள நாயுடன் நட்பாக இருக்கின்றனர். யார் புத்திசாலி?

2. சிறந்த வழி.

பாவம் செய்யாமல் இருப்பதே புண்ணியம் செய்வதாகும். நாம் செய்வது எல்லாம் புண்ணியம் என்று நாமே நினைத்துக் கொள்ளக்கூடாது. வாழ்க்கையை நேர்மையான வழியில் வாழ்வது தான் முக்கியம். அப்படி இல்லாமல் ஆன்மீக எண்ணங்கள் அதிகமாக இருந்தால், உலக சுக துக்கங்களில் இருந்து விடுபட்டு கோயில் கோயிலாக சென்று இறைவனை வழிபட்டு, கிடைத்ததை உண்டு, காலத்தைக் கடத்துவதே சிறந்த வழி.

3. குழந்தைகளின் எதிர்காலம் 

இப்போது பணத்தின் தேவைகள் அதிகமாகி விட்டதாலும், பெண்களின் கல்வித் தகுதியாலும் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு போகின்றனர். அதனால் குழந்தைகளை சரியாகக் கவனிக்க முடியவில்லை. அவர்கள் பெற்றோரின் அன்புக்கும், அரவணைப்புக்கும் ஏங்குகின்றனர். அதை சரி செய்ய, ஆரோக்கியமற்ற பொருட்களை அவர்களுக்கு வாங்கிக் கொடுக்கின்றனர். இதனால் குழந்தைகளின் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்படுகிறது.

4. செய்திகள்.

பண்டைய காலத்தில் புறா மூலம் செய்திகள் அனுப்பினர். பிறகு தூதுவன் மூலம் அனுப்பினர். பிறகு தபால் மூலம் அனுப்பினர். அதன் பிறகு தொலைபேசி மூலம் கட்டணம் கட்டிப் பேசினர். பிறகு கைபேசி மூலம் அதிக கட்டணம் செலுத்திப் பேசினர். பிறகு கட்டணம் கட்டாமல் பேச வாட்சாப் வந்தது. ஆனால் எல்லோரும் பேசுவதைத் தவிர்த்து மறுபடியும் செய்திகள் அனுப்ப ஆரம்பித்து விட்டனர். ஒருவருடன் ஒருவர் பேசும்போது ஏற்படும் சந்தோஷமும் திருப்தியும் கிடைக்குமா?


Sunday, November 8, 2020

THE TOURIST

A tourist landed at the Chennai Central station. He took an auto to visit various places. Finally, he returned to the station to go to Bangalore. The auto meter showed Rs.200/- He told the driver that the meter started at 25 hence he would pay only 175. The driver objected and demanded 200. The tourist refused and a crowd gathered around them. 

Then the DRIVER told the tourist that he would put him a puzzle and if he answered it correctly then he need not pay. Otherwise, he should pay 200. The TOURIST agreed. The driver told him, "my mother gave birth to a child. It is neither my brother nor my sister. then who else?" The tourist could not answer. He then asked for the answer. The driver said," It is me". The tourist accepted defeat and paid him 200.

He then went to Bangalore. There, he took an auto and went around the city. Finally, he came back to the station to go to Hyderabad. The meter showed Rs/-175. The tourist told the driver that the meter started at 25, so he would pay only 150. The driver objected and a crowd gathered. The TOURIST told the driver that he would put a puzzle and if the driver answered it correctly he would pay 175 otherwise, he would not pay anything. 

He thought that the driver may not know the answer and that he could make a profit. The DRIVER accepted. The tourist told him, "My mother gave birth to a child. It is neither my brother nor my sister, then who else?" The driver could not answer. He accepted defeat and asked for the answer. Then the tourist told him the answer.

" IT IS THE CHENNAI AUTO DRIVER !!!"



Wednesday, November 4, 2020

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1561 TO 1575

1561. அனைத்தும் சத்தியத்திலிருந்தே பிறந்து, உருவாகிக் கடைசியில் சத்தியத்திலேயே ஐக்கியமாகிறது. சத்யம் இல்லாத இடமே இப்பூவுலகில் இல்லை.

1562. பண்டைய முனிவரும், மகரிஷிகளும் உண்மையே பேசு, இனிமையாகப் பேசு, மனதிற்கு ரசிக்காத உண்மையைப் பேசாதே என்றனர்.நம்மால் பின்பற்ற முடியுமா?

1563. ஒருவர் தன்னுடைய கடமைகளைச் செய்து முடித்து, ஞானம் அடைந்து,கடவுளிடம் பக்தி செலுத்த வேண்டும்.ஆசைகளைத் துறக்காமல் இறைவனை அடைவது கஷ்டம்.

1564. நம்முடைய வாழ்க்கையை சரியாக வாழத் தெரியவேண்டும். பலன் இல்லாமல் பேசுவது, பயன் இல்லாத செயல்கள், அதைக் கெடுத்து நாசம் செய்து விடும்.

1565. மனிதரில் பிரிவுகள் உணவு,வாழ்க்கை முறை, நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. வேற்றுமையை மறந்து ஒருவரை ஒருவர் நேசித்து வாழ்வது நல்லது.

1566. சூரியன் கிழக்கே உதிக்கிறான் என்றால் கூட அதை மறுத்துப் பேச நாலு அறிவு ஜீவிகள் இருப்பது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கிறது.

1567. நம் நாட்டுக்கு நல்லது செய்த, செய்கின்ற, செய்யப் போகின்றவர்கள் பலர். அது அவர்கள் வேலை. நாம் என்ன செய்வது என்று சிறிது யோசியுங்கள்.

1568. தத்துவங்கள் கேட்பதற்கு சுவையாக இருக்கும். பசித்தவனுக்குத்தான் பசியின் அருமை தெரியும். முதலில் பசியை போக்குவோம். தத்துவம் பிறகு.

1569. நல்லதை நினைக்கும் போது.நல்லதை பார்க்கும் போது.நல்லதை கேட்கும் போது.நல்லதை பேசும் போது,நல்லதை செய்யும் போது, அது நமக்கு நல்ல நேரம்.

1570. கடமைகளைச் செய்வது,பெற்றோரை சந்தோஷப் படுத்துவது,ஏழைகளுக்கு உதவுவது, இதையெல்லாம் செய்துவிட்டு பிறகு இறைவனை வேண்டுவது சாலச் சிறந்தது.

1571. தினம் காலையில் ஒரு பத்து நிமிடங்கள் உங்கள் பெற்றோருக்காக ஒதுக்குங்கள். அவர்கள் தூக்கம், உணவு, ஆரோக்கியம் பற்றி அன்பாகப் பேசுங்கள். 

1572. எங்கள் குடும்பம் ஒரு கார் [சிற்றுந்து] என்றால், மகள் என்ஜின், மகன் பெட்ரோல், மனைவி இயக்குநர், நான் ஓட்டுனர். வண்டி நன்றாக ஓடுகிறது.

1573. தனது சக்தி,தகுதி,தரம் அறிந்து அதன் படி நடக்கத் தெரிய வேண்டும்.அவை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.புலி புல்லைத் தின்னக் கூடாது

1574. இளமையில் மனம் நட்பை நாடுகிறது. அது அதிக காலம் நீடிக்கிறது. முதுமையில் மனம்  தனிமையை நாடுகிறது.  நட்பு அதிக காலம் நீடிப்பதில்லை

1575. தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள்,நடிகைகள் அழகும் திறமையும் இருந்தும் சினிமாவில் நடிக்க சந்தர்ப்பம் கிடைப்பதில்லை ஏன்?