Thursday, November 2, 2017

GOD IS BEYOND KNOWLEDGE / இறைவன் அறிவுக்கு அப்பால்

GOD IS BEYOND KNOWLEDGE.

Everyone is asking where God is and to show Him to them. God is everywhere, He is shapeless, colourless, odourless, and invisible to the naked eye. Only from our life incidents, we can feel the presence of God. He is beyond our knowledge.

After we get up from bed, we brush our teeth and before taking coffee or tea, we should pray to God for a few minutes. Then we wish ”good morning” to others to develop a cordial relationship. Then we talk about good matters to get peace of mind.

Knowledge can be explained in three ways. 1. Known 2. Unknown 3. Unknowable.

You go to a fruit shop and you see an apple. You know very well that it is an apple. This is KNOWN to you.

But you do not know how many seeds are there inside the apple. This is UNKNOWN to you. You cut the apple and count the seeds. Now the unknown becomes known to you.

But you do not know how many trees, fruits, and seeds those seeds will produce. This is UNKNOWABLE. Whatever the effort you take, you will never know. That is GOD. Let us pray to that God.

இறைவன் அறிவுக்கு அப்பால்.

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக. எல்லோரும் இறைவன் எங்கிருக்கிறான், இறைவனைக் காட்டு என்று கேட்கிறார்கள். எங்கும் நிறைநத இறைவனை எப்படிக் காட்டுவது? அவன் நிறமற்றவன், உருவமற்றவன். நமது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வைத்துத் தான் இறைவனைக் காணமுடியும். இறைவன் அறிவுக்கு அப்பால்.

விடியற்காலையில், பல் துலக்கிய உடன், காப்பி, தேநீர் அருந்து முன்பு இறைவனை தியானிக்க வேண்டும். பிறகு காலை வணக்கம் சொல்வது நல்ல உறவை வளர்க்கும். நல்ல விஷயங்களைப் பேசுவது மன அமைதி தரும்.

இது அறிவு சம்பந்தப் பட்டது. வாழ்க்கையில் ஒரு புரியாத உண்மை மிக எளிதாக புரியவைக்கப் பட்டிருக்கிறது. அதன் அழகில் நான் மெய் மறந்து  விட்டேன். இந்த காலை நேரத்தில் உங்களுக்கு ஒரு நல்ல விஷயம் கூற இதை எழுதுகிறேன்.

அறிவு என்பதை மூன்று விதமாகப் பிரிக்கலாம். 1. தெரிந்தது 2. தெரியாதது 3. தெரிந்து கொள்ள முடியாதது.

நீங்கள் ஒரு பழக் கடைக்குப் போகிறீர்கள். அங்கு ஆப்பிள் விற்கிறார்கள்.

1. உங்களுக்கு ஆப்பிள் நன்றாகத் தெரியும். அது உங்களுக்குத் தெரிந்தது.

2. ஆனால் அந்த ஆப்பிள் உள்ளே எத்தனை விதைகள் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியாது. இது தெரியாதது. அந்த ஆப்பிளை கத்தியால் நறுக்கி உள்ளே உள்ள விதைகளை எண்ணினால் தெரியாதது தெரிந்து விடும்.

3. ஆனால் அந்த விதைகள் எத்தனை ஆப்பிள்களைக் கொடுக்கும் என்பது தெரியாது. இது தெரிந்து கொள்ள முடியாதது. நீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் உங்களால் தெரிந்து கொள்ள முடியாது. அது மனித அறிவுக்கு அப்பாற்பட்டது. அது தான் இறைவன். அந்த இறைவனைத் தினம் பிரார்த்தனை செய்வோம்.



No comments :

Post a Comment