Sunday, March 29, 2020

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பல ஆச்சரியமூட்டும் சுவாரஸ்யங்களை அதனிடம் சேமித்து வைத்து வருகிறது.

மீனாட்சி அம்மன் கோவிலில் 33,000க்கும் அதிகமான சிற்பங்கள், 4500 தூண்கள், 14 கோபுரங்கள் உள்ளன; அதிலும் முக்கியத்துவம் வாய்ந்த நான்கு கோபுரங்கள் நான்கு திசைகளை நோக்கி உள்ளது நாம் அறிந்ததே.

மீனாட்சி அம்மன் கோவிலின் உள்ளே இருக்கும் ஒரு சுரங்க பாதை மூலம் திருமலை நாயர் அரண்மனையை அடையலாம் என்று ஒரு கதை உண்டு. அது கட்டுக்கதையாக இருக்கக்கூடும் என்று சிலர் கூறுகின்றனர். 

இங்குள்ள ஆயிரம் கால் மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒரே பாறையில் இந்த மண்டபத்தை செதுக்கியுள்ளார்கள் - ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?!!

முற்காலத்தில் மதுரை நகர் கடம்ப மரங்கள் சூழ தான் இருக்குமாம். மதுரையில். ஒவ்வொரு கோவிலுக்கும் 'ஸ்தல விருக்ஷம்' என்று அந்த கோவிலை சிறப்பிக்க ஒரு மரம் இருக்கும். மீனாட்சி கோவிலுக்கு இருப்பது, கடம்ப மரம். இன்று வரை அந்த கடம்ப மரத்தை கோவிலுக்குள் பாதுகாத்து வருகிறார்கள்.

சுந்தரேஸ்வரர் சன்னிதிக்குச் செல்லும் வழியில் ( முக்குறுணி விநாயகரை தரிசிக்கும் பாதை) பிரகாரத்தின் மேற்கூரையில் ஒரு லிங்க ஓவியம் வரையப்பட்டிருக்கும். அது தான் சுழலும் லிங்கம். எந்த திசையிலிருந்து அந்த லிங்கத்தை பார்த்தாலும் லிங்கத்தின் பீடம் நம்மை நோக்கி இருப்பது போலவே தெரியும். இது தான் சுழலும் லிங்கத்தின் மகிமை.

இங்கு 6*7 அடிக்கு ஒரு பெரிய விநாயகர் சிலை உள்ளது. அவர் தான் முக்குறுணி விநாயகர். பிள்ளையார் சதுர்த்தி அன்று முக்குறுணி விநாயகருக்கு 18 கிலோ அரிசியில் பெரிய மோதகம் செய்து படைப்பர்.

மீனாட்சி அம்மன் கோவிலில் 5 இசை தூண்கள் இருக்கின்றன. இதே போல இசை எழுப்பும் தூண்கள் தமிழ்நாட்டில் சுசீந்திரம், திருப்பெருந்துறை, திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் காணப்படுகின்றன.

நடராஜர் பொதுவாக வலது காலை தரையில் வைத்து தன்னுடைய இடது காலை தான் தூக்கி நிற்பது போல எல்லா கோவிலில் இருக்கும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மட்டும் தான் மாற்றி நிற்பார். அதாவது இடது கால் தரையில் பட வலது காலை உயர்த்தி நிற்பார்.

இதற்கு காரணம், சிவ பக்தனான வரகுண பாண்டிய மன்னன் அவன் நடனம் பழகும் பொது அவனுக்கு ஏற்பட்ட கால் வலியை உணர்ந்து, இதுபோல் எந்நேரமும் ஆடும் ஈஸ்வரனுக்கும் வலிக்குமே என்று எண்ணி அவரிடம் கால் மாறி ஆடுமாறு வேண்டிக்கொண்டதால் என்றும் ஓர் கதை உண்டு.

அந்த வரகுண பாண்டியன் வேட்டையாடிவிட்டு திரும்பும் வழியில் ஓர் பிராமணரை அவனின் குதிரை தவறுதலாக மிதித்துக் கொன்றுவிட, அதனால் அவனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை தீர்ப்பதற்காகவே சுந்தரேஸ்வரர் அவனை இந்தக்கோயிலுக்குள் கிழக்குகோபுர வழியாக உட்சென்று மேற்குக்கோபுர வாசல் வழியே வெளியேறுமாறு கூறியதாகவும், அன்று முதல் மன்னனுக்காகவே அந்த பிரம்மஹத்தி தோஷம் இன்னும் கிழக்குக்கோபுர வாசலிலேயே காத்திருப்பதாகவும் ஓர் தகவல். இதனாலேயே சகலரும் கிழக்குகோபுர வழியாக உட்சென்று மேற்குக்கோபுர வாசல் வழியே வெளியேறுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

உலகத்தின் அதியங்களுக்கான புதிய பட்டியலில், பரிந்துரைக்கப்பட்ட 30 இடங்களில் மீனாட்சி அம்மன் கோவிலும் ஒன்று.

சமீபத்தில், இந்தியாவின் இரண்டாவது சுகாதாரமான இடம் என்ற பெருமையை 'SWATCH ICONIC PLACE' விருது மூலம் நம் மீனாட்சி அம்மன் கோவில் பெற்றிருக்கிறது.

அடுத்த முறை மதுரைக்கு வர நேர்ந்தால் கண்டிப்பாக மீனாட்சி அம்மனை தரிசித்து விட்டு அப்படியே இந்த பட்டியலையும் ரசித்துவிட்டு வாருங்கள்.

Thursday, March 26, 2020

வேத பாடசாலையில்

7 வயது முதல் வேத பாடசாலையில் : 

விடியற்காலை ஐந்தரை மணிக்கு எழுந்து, குளித்து விட்டு, ஸந்தியாவந்தனம், ஸமிதானம் முடித்து, ஸ்வாமிக்கு முறை ப்ரகாரம் பூஜை செய்து,

காலை 7:00 மணி முதல் 8:00மணிவரை உபநிஷத் பாராயணம் செய்து,

8:00 மணிக்கு பழையது சாப்பிட்டு,

9:00 மணிக்கு பாடத்திற்கு அமர்ந்து 11:00வரை பாடம் படித்து,

(இதன் நடுவில் வாத்யார் சந்தை சொல்வார்.. அதாவது புதிய பாடத்தைச்சொல்லித்தருவார்..)

அதன் பிறகு பகவானுக்கு நைவேத்யம் செய்து, மாத்தியான்ஹிகம் முடித்து 

12:00மணிக்கு மதிய ஆகாரத்தை சாப்பிட்டபிறகு, ஸமஸ்க்ருத க்ளாஸ் பாடத்தில் அமர்ந்து அதை முடித்து விட்டு, மதியம் உறக்கத்தை தவிர்த்து,

2:00 மணிக்கு வேத பாடத்தை ஆரம்பித்து 4:30 மணிக்கு முடித்து விட்டு, துணிகளை தோய்த்து விட்டு முகத்தை அலம்பி ஸந்தியா வந்தனம், ஸமிதாதானம் செய்துவிட்டு பகவான் பூஜையில் அமர்ந்து அவருடைய அஷ்டோத்ரங்கள் சொல்லிவிட்டு, கிழமைக்கு தகுந்தாற் போல்

1)திங்கட்க்கிழமை: ருத்ரம்,சமகம்,

2)செவ்வாய்: துர்கா சூக்தம், ஶ்ரீ.சூக்தம், 

3)புதன்: விஷ்ணு ஸஹஸ்ரநாமம்,

4) வியாழன்: தோடகாஷ்டகம்,

5) வெள்ளிக்கிழமை: மறுபடியும் துர்கா சூக்தம், ஶ்ரீ.சூக்தம்,

6) சனிக்கிழமை: மறுபடியும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம்,

7)ஞாயிற்றுக்கிழமை: ஆதித்ய ஹ்ருதயம்..

இதை எல்லாம் முடித்து மறுபடியும் வேத பாடத்தை ஆரம்பித்து 9:00 மணிக்கு இரவு ஆகாரத்தை முடித்து விட்டு, மதியம் நடந்த ஸமஸ்க்ருத பாடத்தை படித்துவிட்டு, 10:00மணிக்கு படுக்கைக்கு செல்ல வேண்டும். மறுபடியும் காலை தொடரும். இப்படியாக பாடசாலை ஏழுவருடம் படிக்க வேண்டும்.

விடுமுறை என்றால் சும்மா இருக்க முடியாது. துணி துவைத்தல், தங்கும் இடத்தை சுத்தம் செய்தல், வேத பாடசாலைக்கோ தனி உபயோகத்துக்கோ தேவையான பொருட்களை வாங்குதல், அம்மா, அப்பா , சகோதர சகோதரிகளைச் சந்தித்து அளவளாவுதல் முதலியன நடைபெறும். எல்லாவற்றிற்கும் மேலாக படித்த பாடத்தை சொல்லி நினைவு கூறுதல் நடக்கும்.

நினைவு கூறுவதிலும் ஒரு முறை இருக்கிறது. பதம் பதமாக (சொற்களாக), இரண்டிரண்டாக, ஒரு ஐந்து வரிகளாக (பஞ்சாதி) என்றெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக வேதத்தை , புத்தகம் இல்லாமல், வாய்மொழியாகக் கற்பிப்பர். இதை விடுமுறை தினங்களில் சொல்லிப் பார்ப்பதும், அதை ஆச்சார்யார் (ஆசிரியர்) மேற்பார்வை செய்வதும் “விடுமுறை” நாட்களில் நடக்கும்.

வேத பாடசாலையில் உணவில் சுவைக்கு முக்கியத்துவம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காரணம் நாக்கு சுவைக்கு அடிமையாகி விட்டால் நாக்கில் ஸ்வரம் வராது என்பதால். ( காரம், உப்பு, வெங்காயம், தயிர் அறவே நீக்கப்படும்)

இது தவிர தியானம்,யோகா, பிராணாயாமம் பயிற்சிகளும் உண்டு.

முதல் ஆண்டு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே தீபாவளி மற்றும் பூணூல் பண்டிகைகளுக்கு மூன்று நாட்கள் மட்டும் விடுமுறை உண்டு. ஊருக்கு சென்று வரலாம். இரண்டாண்டு முடித்த மாணவர்களுக்கு பண்டிகை விடுமுறை கிடையாது.

தற்காலத்தில் தான் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் விடுமுறை தருகிறார்கள். அனைத்து மாணவர்களுக்கும் வாரம் மாத வருட தேர்வுகள் உண்டு. இதில் எழுத்து தேர்வு சொல் (ஸ்வரம், அக்ஷர சுத்தி) செய்முறை தேர்வுகள் அடங்கும். அப்படி எல்லாம் படித்ததை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு வாழ்நாள் பூராவும் வாழவேண்டும்.

Monday, March 23, 2020

ஆட்டத்தைத் துவங்குங்கள்..!

இப்போதெல்லாம் 50 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று பலர் கற்பனை செய்து கொள்கிறார்கள். 50 வயதிலேயே ரிட்டயர்மென்ட் மனநிலையை நோக்கி பயணிக்கற பலரை இப்போது பார்க்க முடிகிறது.

50 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கறோம். 10,000 கி.மீ வண்டியை ஓட்டுங்க, அதுக்கப்பறம் வண்டி ஸ்மூத்தா இருக்கும் என்பார்கள்..... 50 வயதும் அப்படிதான்..... பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸ்தான்..!!

50 வயதுக்கு மேல் செய்ய வேண்டிய சில அவசியமான விஷயங்கள்.

1. புதியதை தேடுங்கள்: சிலர் “பார்ன் வித் ஏ சில்வர் ஸ்பூனாக” இருக்கலாம். 50களில் வாழ்க்கையில் ஓரளவு செட்டில் ஆகியிருந்தால் இந்த உந்துசக்தி குறைந்து போகும். சோம்பேறித்தனம் அதிகமாகும். எனவே புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான ஒன்றைக் கையிலெடுங்கள். உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளக் கூடிய ஒன்றைச் செய்யுங்கள்.

2. இளைஞர்களோடு பழகுங்கள்: 50 வயதுக்கு மேற்பட்ட ஆட்களோடு உட்கார்ந்து அங்கிள் அசோசியஷனை உருவாக்காதீர்கள். உங்களை விட வயதில் குறைவானவர்களோடு பழகுங்கள்..! உங்களுக்கு 25 வயதில் இருந்த உற்சாகம், அவர்களிடம் இருக்கும், அந்த எனர்ஜி உங்களுக்கும் கிடைக்கும். அங்கிள் அசோஷியனில் உட்கார்ந்தால் இன்னும் வயசாகும்..!

3. அழகாக உடை உடுத்துங்கள்: அழகான உடைகளை தேர்வு செய்யுங்கள்..... காமா சோமா என்று ஒரு காம்பினேஷனில் உடை அணியாதீர்கள்..! 50 வயதில் நரையும் வழுக்கையும் அழகுதான். உலகின் அழகான நிறைய பேரை ஈர்க்கின்றவர்களில் 50+கார்கள்தான் அதிகம்..!

4. பயணம் செல்லுங்கள்: உடனே 50+ ஆட்கள் பத்துபேரை கூட்டிக் கொண்டு கோயில் கோயிலாக கிளம்பிவிடாதீர்கள். இளைஞர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். வித்தியாசமான இடங்களுக்கு செல்லுங்கள். வேறுபட்ட மனிதரோடு உரையாடுங்கள். திசையறியா பயணங்கள் செல்லுங்கள். இல்லையென்றால், 50 வயதில் அங்கிள் ஆன நீங்கள், 60 வயதில் கிழவனாகி விடுவீர்கள்..!

5. நிறைய படியுங்கள்: மூளைக்கு தீனிபோட, நிறைய படியுங்கள். தேர்வு செய்து படியுங்கள்..! புதிய நவீன சிந்தனையாளர்களின் புத்தகங்களை வாசியுங்கள். அவர்கள் பேச்சை கேளுங்கள். அறிவுப் பகிர்தல் நடக்கும் இடங்களில் எல்லாம் இருக்கும்படியாக பார்த்துக் கொள்ளுங்கள்..!

6. இளமையில் தத்துவப் பாடல்களைக் கேட்டால் மனது நல்ல வழியில் செல்லும். முதுமையில் காதல் பாடல்களைக் கேட்டால் மனது இளமையாக இருக்கும்.

மேற்சொன்ன விஷயங்களை செய்தால் 50+ ஆரோக்கியம் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. மூளையும் மனசும் சரியாக இயங்க ஏற்பாடு செய்துவிட்ட பிறகு ஆரோக்கியத்தில் என்ன பிரச்சனை வரப் போகிறது..?

எப்போதுமே முதல் இன்னிங்கசை விட இரண்டாம் இன்னிங்கஸ்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கறது..... நீங்கள் 50+ காரராக இருந்தால் தாமதிக்காதீர்கள்...!இது உங்கள் ஆட்டம்.....ஆட்டத்தைத் துவங்குங்கள்..!


Friday, March 20, 2020

RANDOM THOUGHTS 766 TO 780

766. In spite of Lord Rama's advice, why did Sri Sita go to the forest with him leaving her aged MIL instead of taking care of her?

767. Women are under the wrong impression that it is financial freedom if they are free to spend on household expenses. It is not so.

768. Whenever I receive any gift say gold, silver, laptop, I-phone, etc, I always give them to my son. What am I going to do with them?

769. In the case of women's employment, their capability to earn is given by their parents but the benefit is received by the husband.

770. Is it not a pleasure to tease the women and to enjoy the false anger in their face, be it a mother, sister, wife, daughter or DIL?

771. It is natural for women to get angry when they are criticized. Why men go to their support instead of just enjoying the situation?

772. LAW means Love After Wedding. To get the graduation, it looks, it will take a lifetime. People wonder when they will get a degree.

773. A successful marriage basically requires falling in love many times always with the same person but not with any other person.

774. Everyone tries to succeed. Sometimes things may go wrong. Sometimes one may fail. Then, one should have a spouse to put the blame.

775. When I write condemning women, there is a big hoe and cry. When I write in support of women there is complete silence. How come?

776. Intelligence and arrogance are close cousins. I miss some friends who are intelligent. However, I am saved from their arrogance.

777. The basis of life is belief. It may be positive or negative. Without belief, there is no life. Belief comes out of life situations.

778. To my knowledge, I find most of the parents of a couple are not on friendly terms and they are always at loggerheads. Any reason?

779. A male chauvinist would have had a bitter experience with females. A female chauvinist would have had a bitter experience with males.

780. The possessive attitude of the parents towards their children leads to all problems. They should see reason and accept reality.

Tuesday, March 17, 2020

ஆடி மாதமும் தாம்பத்தியமும்

ஆடி மாதம் தாம்பத்தியம் தவிர்ப்பதன் விளக்கம்

ஆடி மாதம் புதுமண தம்பதியர்கள் தாம்பத்தியம் கொண்டுவிட்டால், அதிலிருந்து 10 ஆம் மாதமாகிய சித்திரையில் குழந்தை பிறக்கும். சித்திரை கோடையின் வெய்யில் உச்ச கட்டத்தில் இருக்கும். 

இதனால் கோடை சம்பந்தப்பட்ட, அம்மை, சிரங்கு, கட்டி ஆகியன தோன்றுகின்றன. எனவே புதுமண தம்பதியர் தாம்பத்தியத்தில் இணைந்துவிடாமலிருக்க அவர்களை பிரித்துவிடுகிறார்கள். இது ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. 

ஸ்ரீ வராஹிமிஹிரர் தொகுத்த ப்ருஹத்ஜாதகத்தில் இதற்கான விளக்கம் கிடைக்கிறது. ஒரு தாயின் வயிற்றில் இருக்கும். கருவின் மீதும் கிரகங்கள் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. கரு வளரும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிரகம் தனது ஆதிக்கத்தை கரு மீது செலுத்துகிறது. கருவின் 4 ஆம் மாதத்தில் சூரியன் ஆதிக்கம் செலுத்துகிறது.

இதனால் கருவில் எலும்புகள் உருவாகி, நல்ல வளர்ச்சி அடைகிறன. கருவின் 4 ஆம் மாதத்தில் சூரியன் நீசம், பகை போன்ற ஸ்தானங்களை அடையக்கூடாது. இப்படி சூரியன் கெட்டால், கருவின் எலும்புகள் வளர்ச்சி குன்றி, குள்ளம், கூன், கை, கால்களில் எலும்பில் தேவையற்ற வளைவுகள் தலை பெரிதாகி உடல் சிறுத்துப்போவது, போன்ற குறைபாடுகள் உண்டாகின்றன.

ஆடி மாதம் தம்பத்தியம் கொள்வதால், ஐப்பசி 4 ஆவது மாதமாக அமையும், அப்போது சூரியன் நீசமடைகிறது. எனவே தாம்பத்தியத்திற்கு நம் முன்னோர்கள் ஆடியை தவிர்த்தனர். தாம்பத்தியத்தை தானாகவே தவிர்த்துக்கொள்ளும் அளவுக்கு பக்குவமடையாத, புதுமணத்தம்பதியரை வலுக்கட்டாயமாக பிரித்தனர். தையில் திருமணம் செய்து, தாம்பத்தியம் கொள்வதால், அதன் 4 ஆவது மாதமாக சித்திரை அமையும். சித்திரையில் சூரியன் உச்சம். எனவே கருவின் எலும்புகளின் வளர்ச்சியில் எந்த குறைபாடும் இருக்காது. 

அதுபோல் வைகாசியில் திருமணம் செய்துகொண்டு, தாம்பத்தியம் கொள்வதால், அதன் 4 ஆவது மாதமாக ஆவணி அமையும். ஆவணியில் சூரியன் ஆட்சி. எனவே கருவின் எலும்பு வளர்ச்சி நன்றாக அமையும். எனவே திருமண முஹூர்த்தம் வைப்பதில் இவ்விரு மாதங்களுக்கு முதலிடம் கொடுத்தனர் நம் முன்னோர்கள். 

ஐப்பசி, கார்த்திகை, மாசி ஆகிய மாதங்களுக்குரிய 4 ஆம் மாதம் சூரியன் பகையாவதால் இந்த மாதங்களில் திருமணம் செய்யக்கூடாது என்றனர். 

இப்போது எல்லாம் மாறிவிட்டது. சில சாஸ்த்திர சம்பிரதாய மீறல்களால், எலும்பு குறைபாடுடன், உடல் ஊனமுற்ற குழந்தைகள் பிறந்துவிடுகிறன. இதற்கு முழு பொறுப்பு பெரியோர்களே.

Saturday, March 14, 2020

இதுவும் கடந்து போகும்

ஒரு ஊரில் மக்கள் மத்தியில் புத்தர் பேசத் தொடங்கினார். ஒரு குரல் அவர் பேசுவதை இடைமறித்தது. தொடர்ந்து புத்தரை நோக்கி “புத்தரே நாங்கள் உங்களைப் போன்ற எத்தனையோ ஞானிகளைச் சந்தித்தும், அவர்களது பிரசங்கங்களை கேட்டும் விட்டோம். ஆனால் எங்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. இப்போதும் எங்களுக்கு பிரச்சனை இருக்கிறது. எங்களுக்கு மட்டுமல்ல இவ்வுலகில் உள்ள அனைவருக்குமே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதனால் எல்லோருடைய சிக்கலும் தீரும்படியாக, அனைத்து மனிதர்களுடைய வாழ்விலும் பிரகாசம் தெரியும்படி மந்திரங்களைச் சொல்லித் தாருங்கள்.

நாங்கள் மனப்பாடம் செய்து எல்லோருக்கும் சொல்லத்தக்க அளவில் சிறியதாக இருக்க வேண்டும். நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான மந்திரத்தை சொல்லுங்கள். உங்களைக் குருவாக ஏற்றுக்கொள்கிறோம்” என்றது அக்குரல்

மௌனமாக சிரித்த புத்தர் “இதுவும் கடந்து போகும்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். அந்த கணமே அக்கூட்டம் ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்தது

புத்தரின் மந்திரத்தை மனசுக்குள் அசைபோட்டது. நன்றாகப் படித்திருந்தும். பணம் சம்பாதிக்க முடியாமல் தாழ்வு மனப்பான்மையால் உழன்று கொண்டிருந்த இளைஞனுக்கு தன்னம்பிக்கையைத் தந்தது அந்த வார்த்தை

“இதுவும் கடந்து போகும்” என்ற வார்த்தையால் என்னுடைய நிலை கண்டிப்பாக மாறிவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. இம்மந்திரத்தைத் தினந்தோறும் உச்சரித்து இன்னமும் எனக்கு வேண்டிய பலம் பெற்றுக்கொள்வேன்” என்று உரக்கச் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்

“இம்மந்திரத்தால் என்னுடைய நீண்ட கால நோய் கண்டிப்பாகத் தீர்ந்துவிடும். இனிமேலும் எனக்கு இந்நிலை தொடராது. இது மிகவும் நல்ல மந்திரம் என்று கூறிச் சென்றான்” நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தவன்

“இந்த பணம் தொடர்ந்து என்னுடன் இருக்காது என்பதைப் புத்தர் எனக்கு இம்மந்திரத்தின் மூலம் புரிய வைத்துவிட்டார். இனி இந்தப் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன்” என்று கூறிச் சென்றான் பணக்காரனாக இருந்தவன்

அடுத்து இருந்த அழகான பெண் “என்னுடைய அழகு எப்போதும் என்னுடன் வராது என்பதை இம்மந்திரம் எனக்குப் புரிய வைத்துவிட்டது” என்று கிளம்பினாள்

கடைசியாக, தினந்தோறும் உழைத்து ஓடாய்த் தேய்ந்த பெண்மணி கிளம்பும் போது “இத்தனை நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். மரணம் வரையிலும் உழைக்கத்தான் வேண்டியிருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த மந்திரத்தின் மூலம் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. என்னுடைய நிலையும் மாறிவிடும்” என்று நம்பிக்கையுடன் சென்றார்

நண்பர்களே, தோல்விகள் தழுவும்போது “இதுவும் கடந்து போகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள். சோர்ந்துவிட மாட்டீர்கள். நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்வில் வரும்போது ‘இதுவும் கடந்து போகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் இருக்கும்போது அவர்களை கொளரவிப்பீர்கள். அவர்கள் விலகும்போது பாதிப்படைய மாட்டீர்கள்

எத்தனையோ மனிதர்களை மாற்றிய இந்த உன்னத சொல் உங்கள் வாழ்விலும் இனி ஒளி ஏற்றும். “இதுவும் கடந்து போகும்” என்பதை உறுதியுடன் நம்புங்கள். கண்டிப்பாக மாறிவிடும்

தோல்வியைச் சந்திப்பவர்கள், நோயில் இருப்பவர்கள், சிக்கலில் மாட்டியவர்கள், திசை தெரியாமல் இருப்பவர்கள், அனைவரும் தினமும் இதை மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள்

வெற்றி நிச்சயம்.

Wednesday, March 11, 2020

RANDOM THOUGHTS 751 TO 765

751. Where there is a will, there is a way. Where there is a way, there is light. Where there is light, there is happiness. There is God.

752. Opposition does not mean opposing everything. Only wrong decisions are to be opposed and welfare decisions are to be appreciated.

753. Indians are more concerned about politics, religion, caste, and cinema rather than hygiene, cleanliness, discipline, and obedience.

754. Earnings in India, earnings anywhere by an Indian resident, and gifts from anywhere are taxable. Earning by an NRI is not taxable.

755. Parents do not appreciate their children openly with them. It is a feeling and not an expression. They do it only to outsiders.

756. People should understand what Khalil Gibran once stated "Your children are not yours though they come through you, not from you"

757. It is advised to share the pleasure and to hide the pain. But people prefer to cry out the pains instead of enjoying the pleasure.

758. Only when we see world cinema, we can understand the local cinema. It is knowledge. No point in evaluating without any knowledge.

759. It is advisable not to go to the doctor without ailment. Better avoid yearly health check-ups. It is like opening Pandora's Box.

760. When I visit a doctor, I wonder some take a long time and some take a little time to finish consultation. What would be the reason?

761. Wine is more appreciated by its age. The young may have energy but more the age more the grace, elegance, knowledge, and wisdom.

762. The sale of the book went sky high since the title "How to Change your Life" was erroneously printed as "How to change your Wife".

763. Good health can bring back the lost wealth. But wealth cannot bring back the lost health. Hence devote more attention to health.

764. I would suggest to the women study well and not to go for employment and to the men to study well and not to marry employed women.

765. Driving a vehicle involves a lot of stress leading to ill health. In India, we can get anything under our nose but not in the US.

Saturday, March 7, 2020

தேவதைகளின் ஆட்சி

நமது ஆயுளில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு தேவதைகளின் கட்டுப்பாட்டில் வாழ்கிறோம். சௌனகர், போதாயனர் உள்ளிட்ட மகரிஷிகள் இதற்கான விதிகளைத் தெளிவாக வகுத்திருக்கிறார்கள். 

குழந்தை பிறந்து 1வது வயது வரை ஆயுர் தேவதை எனப்படும் அக்னியின் ஆட்சிக்குள் அடங்குகிறோம். அந்த ஆயுர்தேவதைக்கு ப்ரீதியாக முதல் வயது பூர்த்தி அடையும்போது ஆயுஷ்ய ஹோமம் செய்வார்கள்.

1வது வயது முதல் 20வது வயது வரை மனிதன் பிரம்மாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறான். அதனால்தான் அந்த குறிப்பிட்ட காலத்தில் அவனுக்கு பிரம்மோபதேசம் செய்யப்படுகிறது. அந்த வயதுடைய இளைஞனை பிரம்மச்சாரி என்று அழைக்கிறார்கள். 

20 வயது முதல் 40 வயது வரை விஷ்ணுவின் ஆட்சி நடக்கிறது. இந்தக் குறிப்பிட்ட காலத்தில் அவன் தானம் செய்வதற்கும், தானம் பெறுவதற்கும் தகுதியாகிறான். கன்யாதானம் வாங்கிக்கொள்ளும் வாலிபனை நாராயண ஸ்வரூபனாக சாஸ்திரம் வர்ணிக்கிறது. 

40 வயது முதல் ருத்ரனின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறான். ருத்ரனுக்கு பல்வேறு ரூபங்கள் உண்டு. 59 வயது முடிந்து 60வது வயது துவங்கும்போது உக்ரரத சாந்தி என்று அழைக்கப்படும் உக்ரரத ருத்ரனுக்கான பூஜையை செய்ய வேண்டும். 

அறுபது வயது முடிந்து விட்டால் மறுபிறவி. இந்திர சபைக்கு போய் திரும்பவும் மறுவாழ்வு. இந்திர சபையில் அனுமதிக்கும் முன் 59 வயதில் உக்ர ரத பிரவேசம்!! இந்திரன் வைக்கும் பரிட்சையில் பாஸ் பண்ண வேண்டும். எல்லா விதமான தொல்லைகளும் உடல் உபாதைகள் உள்பட கொடுக்கப்படும். இந்த ஒரு வருட ரத பயணம் நன்றாக முடிய வேண்டும் என்பதற்காக உக்ர ரத சாந்தி.

60 வயது பூர்த்தி அடைந்து 61 துவங்கும்போது செய்வதை சஷ்டிஅப்த பூர்த்தி சாந்தி என்று சொல்கிறோம். இதில் கௌரீ சமேத ம்ருத்யுஞ்ஜய ஸ்வாமிக்கு விசேஷ பூஜைகளைச் செய்கிறோம். 

69 வயது முடிந்து 70வது வயது துவங்கும்போது பீமரத சாந்தி என்று சொல்லப்படும் பீமரத ருத்ரனுக்கான பூஜையை செய்கிறோம். பீமரத சாந்தியை புரியும்படியாகச் சொல்ல வேண்டும் என்றால் 70ம் கல்யாணம் என்று குறிப்பிடலாம்.

77 வருடம், 7 மாதம், 7வது நாள் அன்று விஜயரத சாந்தி என்று விஜயரத ருத்ரனுக்கு ப்ரீதி செய்யும் விதமாக பூஜைகளை நடத்துகிறோம். 

80 வது வயது முதல் மனிதன் மீண்டும் பிரம்மாவின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறான். 80வது வயதில் செய்யப்படும் பூஜையானது சதாபிஷேகம் என்று அழைக்கப்படுகிறது. இதில் பிரதானமாக பிரம்மா பூஜிக்கப்படுகிறார். 

திருக்கோவிலூர் K.P. ஹரிபிரசாத் சர்மா

Wednesday, March 4, 2020

சின்ன சின்ன சமையல் டிப்ஸ் 106 TO 120

106. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்

107. எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.

108. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.

109. கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.

110. மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது.

111. தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும். தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்.

112. பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால்அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.

113. வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.

114. அடைக்கு அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்.

115. இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன் ''D'' யும், கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம், மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.

116. பழய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.

117. மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.

118. சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.

119. பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.

120. உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும், ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.


Sunday, March 1, 2020

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1366 TO 1380

1366. கதை, கட்டுரை, காதல், கவிதை, கற்பனை, நாடகம், சினிமா இவற்றில் ஆர்வம் கொண்டவர் வாழ்க்கையைத் தொலைத்தவர்களாய் இருப்பார்கள் என்பது சரியா?

1367. பெற்றோர் சொல் கேளாமல், படிக்காமல், கெட்ட சகவாசம், கெட்ட பழக்கங்களைக் கற்று, வாழ்க்கையை வீணாக்கியவர்கள் மேல் இரக்கம் கொள்வது சரியா?

1368. வாழ்ந்த பிறகு புரிகிறது, இன்னும் நன்றாக வாழ்ந்திருக்கலாமோ என்று. அதற்குள் வாழ்க்கை முடிந்து விடுகிறது. வாழும் போதே நன்றாக வாழ்வோம்.

1369. கஷ்டம் வந்துட்டாப் போதும், எல்லாரும் ஓடிவிடுவாங்க. நமது மூளையையும் கைத்திறமையையும் உபயோகித்து மறுபடி முயற்சி செய்ய வேண்டியதுதான்.

1370. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களால் கடவுள் நம்பிக்கையை உருவாக்கவோ கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களால் கடவுள் நம்பிக்கையை அகற்றவோ இயலாது.

1371. கடவுள் பக்தி வருவதும், வராமல் போவதும் அவரவர் நம்பிக்கை."உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாக்கியதே" என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.

1372. கடவுள் நம்பிக்கை உருவாக்கவோ அகற்றவோ இயலாது. நம்பிக்கை, பக்தி அவரவர் மனதில உருவாவது. உள்ளவர்கள் நம்பலாம். இல்லாதவர் விட்டுவிடலாம்.

1373. கவிதை எழுதுவது சுலபமல்ல. முயற்சி செய்வதிலும் தவறில்லை. வராவிடில் முயற்சி செய்வதை விட்டுவிட வேண்டும். பிறரைத் துன்புறுத்தக் கூடாது.

1374. தமிழ் பாடல்களில் எதுகை, மோனையுடன் பல வார்த்தைகள் வந்துவிட்டன. புதிதாக கவிதை எழுதுவோர் வார்த்தைகள் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள்.

1375. கவிதை வேறு உரைநடை வேறு. நல்ல கருத்தை, எளிமையான வார்த்தைகளால், இலக்கணம் தவறாமல், வெண்பா நடையில், நன்கு புரியும்படி சொல்வது கவிதை.

1376. சாம வேதத்தில் தத்-துவம்-அஸி. தத்: அது (அப் பரம் பொருள்), துவம்: நீ(யாக), அஸி:இருக்கின்றாய்."நீ அதுவாக இருக்கின்றாய்" என்று பொருள்.

1377. இளமையில் தத்துவப் பாடல்களைக் கேட்டால் மனது நல்ல வழியில் செல்லும். முதுமையில் காதல் பாடல்களைக் கேட்டால் மனது இளமையாக இருக்கும்.

1378. அறியாமையில் சுகம் கண்டவர்களுக்கு ஆன்ம விடுதலை எப்படிக் கிடைக்கும்? அறியாமையிலிருந்து விடுபட வேண்டும். பிறகு ஆன்மீகம் காண வேண்டும்!

1379. பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஒரு மதகுரு எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து நமக்கு நல் வழி காட்டிய மஹான்.

1380. நேற்று எனக்கும் என் மனைவிக்கும் பெரிய சண்டை. என்ன அவ அடிக்க, அவ என்ன அடிக்க பெரிய சண்டை. அக்கம் பக்கமெல்லாம் கூடி ரொம்ப அவமானம்.