Thursday, October 11, 2018

நமஸ்காரம் புனிதமானது.

1. நமஸ்காரம் பண்ணுவதின் தத்துவம் சரணாகதி. நமஸ்காரம் பண்ணும் அளவுக்கு தகுதி உள்ள ஒருவரை, எதிர்ப்பது, மரியாதை இல்லாமல் பேசுவது கூடாது.

2. நமஸ்காரம் புனிதமானது. நமஸ்காரம் செய்ய வேண்டிய இடத்தில் வணக்கம் சொல்லிப் பலனில்லை. வணக்கம் சொல்லும் இடத்தில் நமஸ்காரம் செய்வது தவறு

3. தாய் தந்தையை நமஸ்காரம் செய்யும் போது, நமது நெற்றி அவர்களுடைய பாதத்தில் நன்கு படும்படி வைத்து மனப்பூர்வமாக நமஸ்காரம் செய்ய வேண்டும்

4. நமஸ்காரம் கிழக்கு, மேற்கு திசையில் செய்ய வேண்டும். வடக்கு பார்த்து செய்யக் கூடாது. பித்ருக்களுக்கு தெற்கு பார்த்து செய்ய வேண்டும்.

5. அண்ணனின் மனைவி [மன்னி] நம்மை விட வயது குறைந்தவராக இருந்தாலும் அண்ணனுடன் சேர்ந்து நின்று அவர்களை நமஸ்காரம் செய்ய வேண்டியது முறை.

6.திருமணமானவர்கள் முடிந்த வரையில் தம்பதிகளாக, தம்பதிகளை நமஸ்கரிக்க வேண்டும். ஆண் இடது புறமும், பெண் வலது புறமும் இருக்க வேண்டும்.

7. கோயிலில் இறைவனை நமஸ்காரம் செய்யும் போது, துவஜஸ்தம்பத்துக்குப் பின்புறம் தான் நமஸ்காரம் செய்ய வேண்டும். நடுவில் செய்யக் கூடாது.

8. கோயிலில் இறைவனை மட்டும் தான் நமஸ்காரம் செய்ய வேண்டும். வேறு யாரையும் எந்தக் காரணம் கொண்டும் நமஸ்காரம் செய்யக் கூடாது. அது பாபம்.

9. தாய், தந்தை, ஆசிரியர், தெய்வம், மாமனார், மாமியார், அண்ணா, மன்னி தவிர யாரையும் நமஸ்காரம் செய்ததில்லை.எனக்கு செய்வதை விரும்புவதில்லை


No comments :

Post a Comment