Sunday, October 7, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 766 TO 780

766. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007 என்று ஒரு சட்டம் இருப்பதே இன்றய தலைமுறைக்குத் தெரியவில்லை. ஆச்சரியம்.

767. ஒருவர் நேர்மையான வழியில் வாழும் போது எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. தவறான வழியில் செல்லும் போதுதான் கவலைப்பட வேண்டும்.

768. தமிழ்நாட்டில் தமிழ்ப் பற்று அதிகரிக்க திருக்குறளை மு.வரதநாசனார் அவர்கள் உறையுடன் பதிவுகளாகப் போடலாமா என்ற எண்ணத்தில் இருக்கிறேன்.

769. திருக்குறளில் சொல்லப் படாத விஷயமே கிடையாது. இவ்வுலகில் மிகச்சிறந்த நூல் அதுதான். உலகப் பொதுமறை என்று அதைக் கூறுவதில் வியப்பே இல்லை

770. காதலிப்பது இயற்கை. அதில் தவறு எதுவும் இல்லை. அது வயதின் கோளாறு. ஆனால் காதலில் விழுந்த உடன் பெற்றோரின் சம்மதம் வாங்குவது முக்கியம்.

771. திருமணத்திற்குப் பின்பு கணவன் மனைவியின் மனோபாவத்திற்குத் தகுந்தால் போல் வாழ்க்கை அமையும். யாரையும் குற்றம் குறை சொல்லிப் பயனில்லை.

772. ராமாயணம், மஹாபாரதம், திருக்குறள் இவைகளை நன்றாகப் படித்து, மேடைப் பேச்சுத் திறமையும் ஒருவருக்கு இருந்தால் இந்த உலகத்தையே கலக்கலாம்.

773. மஹாபலியை விட பெரிய ஆள் யாரும் கிடையாது. வாமனன் தன்னுடைய சிறிய பாதங்களின் பெருவிரலால் ஒரு சின்ன அழுத்து, இன்னமும் தேடுகிறார்கள்.

774. அதென்னமோ தெரியவில்லை,எனக்கும் மெத்தப் படித்தவர்களுக்கும் ஒத்துப் போவதே இல்லை.நெருங்கிய நண்பர்கள் உட்பட.எனக்கு அறிவு கொஞ்சம் குறைவா

775. எந்த ஒரு பதிவிலும் தான் ஒரு அறிவாளி என்று காட்ட வேண்டிய அவசியமே இல்லை. சமுதாயத்திற்கு என்ன நல்லது செய்கிறது என்பது தான் முக்கியம்.

776. வேறு மொழித் திரை படங்களில் மொழி தெரியாத, காது கேட்காதவர்களுக்கு ஆங்கிலத்தில் சூப் திடிலே போடுகிறார்கள். தமிழ்ப் படங்களில் இல்லை என்?

777. குழந்தைகள் எவ்வளவு படித்திருந்தாலும், உயர்ந்த நிலையில் இருந்தாலும் தாய், தந்தையை விட அறிவுள்ளவர்கள் என்று நினைப்பது தவறான எண்ணம்.

778. திருமணம் செய்து கொடுத்த பிறகு, தனக்கும் தன்னுடைய குழந்தைக்கும் இடையே உள்ள உறவு முடிந்து விட்டது என்று பல பெற்றோர்கள் உணருவது இல்லை

779. பெண்களில் பலர் தங்கள் திறமையைக் காட்டுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள், ஆண்களில் பலர் அவர்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று தெரியாமல்.

780. மந்திரங்கள் அர்த்தம் தெரியாவிட்டாலும், புரியாவிட்டாலும், அதை சரியாக சொன்னால் அதற்குண்டான பலனை கொடுக்கும். எந்த சந்தேகமும் வேண்டாம்

No comments :

Post a Comment