Friday, October 5, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 751 TO 765

751. விருந்தோம்பலைப் பற்றி நான் ஒன்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.முதல் நாள் வாழை இலை. இரண்டாம் நாள் வாட இலை. மூன்றாம் நாள் வாடால. சரியா?

752. நான் யாருடனும் சண்டை போட மாட்டேன். போட்டால் பிறகு பேசவே மாட்டேன்.சிலர் என்னுடன் சண்டை போடுவார்கள்.ஆனால் பேசாமல் இருக்க மாட்டார்கள்

753. ஆங்கிலம் வேற்று மொழி. ஹிந்தி இந்திய மொழி. இரண்டும் தெரியாது. ஆனால் ஆங்கில திரைப்படங்களை பார்க்கலாம்,ஹிந்தி படங்களை பார்க்க கூடாது.

754. நமது குழந்தைகளின் தவறுகளை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கோடிக்கணக்கான குழந்தைகளின் தவறுகளை எப்படி இறைவன் ஏற்றுக் கொள்கிறார்?

755. அறிவு பூர்வமாக சிந்திப்பவர்கள் அதிகம் உணர்ச்சி வசப் படமாட்டார்கள். இதய பூர்வமாக சிந்திப்பவர்கள் அதிகம் உணர்ச்சி வசப் படுவார்கள்.

756. விருந்தினர் எல்லோரையும் நன்கு உபசரிக்கும் பழக்கம் எனக்கு உண்டு. என்னை உபசரிக்காத இடத்திற்கு செல்ல நான் கொஞ்சமும் விரும்புவது இல்லை

757. பணக்காரனாகப் பிறந்தாலும் தாழ்ந்த எண்ணங்களைக் கொண்டவர்களும் உண்டு. ஏழ்மையாகப்  பிறந்தாலும் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டவர்களும் உண்டு.

758. நீங்கள் எப்போதும் மகள் நல்லவள் மருமகள் கெட்டவள் என்ற எண்ணத்தோடு பார்த்தால் எல்லாம் தவறாகத் தெரியும். மகளை விட நல்ல மருமகள் அநேகம்.

759. சாதாரணமாக மகள் தன் பெற்றோரிடம்,மருமகள் உங்களை சரியாக கவனித்து கொள்கிறாளா என்று கேட்பது வழக்கம்.ஏன் மகளுக்கு அந்த பொறுப்பு இல்லையா?

760. அரசியல்வாதிகள் பரபரப்பு ஏற்படுத்துவதற்காக ஏதாவது உளறுவார்கள். அதை தவிர்க்க வேண்டும். முக்கியத்துவம் கொடுத்தால் மேலும் உளறுவார்கள்.

761. INTERVENE க்கும் INTERFERE க்கும் என்ன வித்யாசம் என்று ஒரு நண்பர் கேட்டார். INTERVENE என்றால் தலையீடு. INTERFERE என்றால் குறுக்கீடு.

762. ஒரு ஜாதியினரை எல்லோரும் தாக்கி
எழுதுகிறார்கள்.அவர்கள் அதைப்பற்றிக் கவலைப்படுவதே இல்லை.வாழ்க்கையில் முன்னேறுவதே அவர்கள் குறிக்கோள்.

763. நாட்டில் மக்களிடம் தெய்வபக்தி அதிகமாகும் போது கவலையும் அதிகமாகிறது. தர்ம விரோத, சட்ட விரோத செயல்கள் அதிகமாகி விட்டதோ என்ற கவலைதான்

764. நாம் தாய் மொழியைப் பேச்சு வழக்கில் [ஸ்ல்யாஂக்] பேசி எழுதுகிறோம். செந்தமிழில் அல்ல. அதேபோல ஆங்கிலேயர்களும் அப்படித்தான். அது தவறு அல்ல.

765. நாய்களுக்கு ராபீஸ் தடுப்பு ஊசி போடலாம். கர்பத் தடை செய்வது நியாயம் இல்லை. பாவம். அதுவும் இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிருள்ள ஜீவன்.


No comments :

Post a Comment