Thursday, October 11, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 811 TO 825.

811. நமது கஷ்டங்களுக்கு நாம் தான் காரணம். ஏதோ ஒரு நிலையில் தெரியாமல் தவறு செய்து விட்டோம்.நமது தவறான எண்ணங்களும் மனோபாவமும் தான் காரணம்

812. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்திற்காகக் கஷ்டப் பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். தீர்வு அவர்கள் கையில் தான் இருக்கிறது. மற்றவரிடம் இல்லை.

813. தந்தை இல்லாதவர்கள் அமாவாசை,தமிழ் மாத பிறப்பு,க்ரஹந காலத்தில் தனது பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால் அவர்கள் ஆசீர்வாதம் கிடைக்கும்

814. தேளுக்கு மணியம் கொடுத்தால் நாழிக்கு நாழி கொட்டும் என்பது முதுமொழி.தகுதி இல்லாதவர்க்கு மணியம் ஏன் கொடுக்கணும்,பிறகு வருத்தப்படணும்.

815. ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம். பல நல்ல செயல்களில் ஒரு கெட்ட செயல். பல கெட்ட செயல்களில் ஒரு நல்ல செயல். எல்லாம் ஒரே விளைவு தான்.

816. நிறைய பொக்கிஷங்கள் இருந்தால் சந்தோஷம். சிறந்த மதங்கள், மொழிகள் இருந்தால் வருத்தப் படுகிறோம், சண்டை போடுகிறோம். மாற்றி யோசியுங்கள்.

817. நம் நாட்டில் பல மதங்களும், சாதிகளும், மொழிகளும் இருப்பதால் தான் நாம் நமக்குள் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன்

818. நாய் மனிதனுடன் நட்பாக இருக்கிறது.ஆனால் நாயுடன் சண்டை போடுகிறது.மனிதன் நாயுடன் நட்பாக இருக்கிறான்.ஆனால் மனிதனுடன் சண்டை போடுகிறான்.

819. 2017 உலக ஜனத்தொகையில் கிருஸ்தவர்கள்238 கோடி,முஸ்லிம்கள்180 கோடி,ஹிந்துக்கள்110 கோடி.ஹிந்து மதத்துக்கு மாற முடியாது.மாற்ற முடியாது.

820. கூந்தல் தலையில் இருக்கும் வரை தான் அதற்கு மதிப்பு,மரியாதை.கீழே விழுந்தால் வேறு பெயர். உணவிலோ,வாயிலோ அகப்பட்டால் அதன் மீது வெறுப்பு

821. நமது உடலில் இருக்கும் ஆத்மா தான் இறைவனுக்கும், நமக்கும் உள்ள ஒரே தொடர்பு. யாராவது கொஞ்சம் வால் ஆட்டினாலும், ஒட்ட நறுக்கி விடுவான்.

822. ஒவ்வொரு வினாடியும் நாம் என்ன செய்கிறோம், என்ன நினைக்கிறோம் என்பதை இறைவனின் பிரதிநிதியால் பதிவு செய்யப் படுவதை அறியாமல் வாழ்கிறோம்.

823. நாற்பது வயதுக்குள் ஒருவர் உணவு பழக்கத்தை கட்டு படுத்தவில்லை என்றால், தானும் கஷ்டப்பட்டு பிறரையும் கஷ்டப்படுத்துவார் என்பது உறுதி.

824. ஒரு பதினாலு வயது சிறுவன் காலை ஒன்பது மணிக்கு இஷ்டமில்லாமல் படுக்கையை விட்டு எழுந்து கண்ணை இடுக்கி கொண்டு முதலில் தேடுவது செல்போன்.

825. உங்கள் கற்பனையில் ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி ஆங்கிலத்தில் அல்லது தமிழில் ஒரு நாலு பாரா எழுதிப் பார்த்தால் பிறகு அதன் கஷ்டம் தெரியும்.

No comments :

Post a Comment