Friday, August 17, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 661 TO 675

661. வயதான காலத்தில் முடிந்த வரை தனியாக வாழ்வதே சொர்க்கம். அப்படி முடியாமல் பையனுடன் இருந்தால் அது புழல்.பெண்ணுடன் இருந்தால் அது வேலூர்

662. தாத்தா பாட்டிக்கும் பேரக் குழந்தைகளுக்கும் இடையே பரஸ்பர அன்பின் அளவுகோல்.முதல் குழந்தை 6 வயது வரை,இரண்டாவது 4 வயது,மூன்றாவது 2வயது


663. ஐந்து மணிக்கு காப்பி கிடைக்கும் போது ஏழு மணிக்கு எழுந்திருப்பேன். இப்போது ஐந்து மணிக்கு எழுந்தால் ஏழு மணிக்கு காப்பி கிடைக்கிறது.


664. இந்த உலகத்தில் யாரும் யாரிடத்திலும் சொல்ல விரும்பாத ரகசியம் ஒன்றே ஒன்றுதான். அந்த ரகசியத்தை நான் உங்களுக்குச் சொல்ல விரும்பவில்லை.


665. இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்  பெற்றோர்களிடம் அன்புடன் இருக்கிறார்கள் என்பது உண்மை.ஆனால் சென்ற தலைமுறை போல முழு ஈடுபாடு கிடையாது


666. நமக்கென்று ஒரு குறிக்கோள்,அதற்கென்று ஒரு பாதை,அதை அடைய ஒரு வழி என்று செல்லாமல் வேறு ஒருவன் காட்டும் வழியில் செல்வது மிகவும் ஆபத்து


667. ஆங்கிலம் ஒரு வார்த்தை தெரியவில்லை. ஒரு வரி படிக்க முடிவதில்லை, பேச முடியவில்லை. ஆனால் mother's day, father's day கொண்டாடுகிறோம்.


668. தமிழ், தமிழர் பண்பாடு, தமிழ் வாழ்க என்று கோஷம் போடுகிறோம். பின்பு எங்கே இருந்து எப்படி வந்தது அன்னையர் தினமும், தந்தையர் தினமும்?


669. வெள்ளையனே வெளியேறு என்ற கூக்குரல் இன்னம் கேட்கிறது. இப்போது எதிலும் எப்போதும் வெள்ளையன் செய்வதை சொந்த அறிவில்லாமல் பின்பற்றுகிறோம்


670. அன்னையர் தினமும், தந்தையர் தினமும் ஞாயிற்றுக்கிழமை தான் வருமாம். அன்றுதான் வெள்ளையர்கள் தங்கள் பெற்றோர்களைப் பார்க்கப் போவார்களாம்


671. தந்தையர் தினத்திற்கு மறுநாள் மாமனார் தினம், அன்னையர் தினத்திற்கு மறுநாள் மாமியார் தினம் கொண்டாடுவதாய் தீர்மானிக்கப் பட்டுள்ளது.


672. அன்னையர் தினம்,தந்தையர் தினம் என்று கொண்டாடுவது போல மாமியார் தினம்,மாமனார் தினம் என்று ஏன் அனுசரிப்பது இல்லை என்று சொல்ல முடியுமா?


673. முடிவை வைத்துத்தான் வழி சரியா இல்லையா என்று தீர்மானிக்கவேண்டும். தவறான வழியில் சென்று விட்டு முடிவை நினைத்து வருந்துவதில் பலனில்லை


674. வாழ்க்கையில் இளம் வயதில் நாம் செய்த தவறுகளை நினைத்து வருந்துவதால் எவ்வித பலனும் இல்லை. அவைகளை அழிக்கவோ, மாற்றவோ யாராலும் முடியாது.


675. ஒருவரின் நல்ல குணங்களை பார்த்தால் நல்லவராக தெரிவார். கெட்ட குணங்களை பார்த்தால் கெட்டவராக தெரிவார். எல்லாம் நமது பார்வையில் இருக்கு

No comments :

Post a Comment