Saturday, September 1, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 676 TO 690

676. சுய மரியாதை என்பது ஏழைகளுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கு மட்டுமே உள்ள உணர்ச்சி. பணக்காரர்களுக்கு துளியும் கிடையாது என்பது உண்மை.

677. விஷ்ணு சகஸ்ரநாமம் விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களைக் கூறு
கிறது. அதை ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் பாராயணம் செய்வது நமக்கு நல்லது.

678. “பூதப்ருதே நம:” என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் ஆறாவது திருநாமத்தை ஜபிக்கும் அடியார்களுக்கெல்லாம் அரங்கனே நல்ல உணவளித்து விடுவான்.


679. விடுமுறையில், மருமகளை பெற்றோரிடம் அவள் கேட்காமல் அனுப்பினால் அன்பு.கேட்டு அனுப்பினால் அனுதாபம்.கேட்டும் அனுப்பாவிட்டால் அஹங்காரம்.

680. அமெரிக்காவில் ஒருவர் சுற்றுலாப் பயணியாக ஆறு மாதங்கள் வரை தான் தங்க முடியும். மேலும் ஒரு நாள் அதிகம் தங்கினாலும் சிறை தண்டனை தான்.


681. இந்தியாவில் இருந்து அமெரிக்கா போக விரும்பும் நண்பர்கள் மே 15 லிருந்து நவம்பர் 10 வரை தங்குவதற்கு திட்டம் போட்டால் சரியாக இருக்கும்


682. அமெரிக்காவில் ஜூன் 21 / செப் 21 கோடைகாலம். செப் / டிசம்பர் இலையுதிர்காலம், டிசம்பர் / மார்ச் குளிர்காலம்,மார்ச் / ஜூன் வசந்தகாலம்.


683. இப்போது பெண்கள் எல்லோரும் வேலைக்கு போகிறார்கள். மாமியார் / தாயாருடைய உதவியை எதிர்பார்க்கிறார்கள். சரி, அவர்களுக்கு ஓய்வு வேண்டாமா?


684. ஜூன் 21 முதல் செப்டெம்பர் 21 வரை அமெரிக்காவில் கோடை காலம். பள்ளிகளுக்கு இன்றுமுதல் செப் 3 வரை கோடை விடுமுறை. பலர் இந்தியா செல்வர்.


685. குழந்தைகளுக்கு திருமணம் ஆனபிறகு தாய் தந்தையரில்,தாய் மகள் வீட்டுக்கும்,தந்தை மகன் வீட்டுக்கும்,சென்று தங்குவதையே விரும்புகிறார்கள்


686. அநேக குடும்பங்களில் தாய் தந்தையரில் பாதி பேருக்கு மேலும், எல்லாப் பேரக் குழந்தைகளுக்கும் "தமிழ்" என்றால் என்னவென்றே தெரியவில்லை.


687. கவிதைக்கும் உரைநடைக்கும் தனித்தனியாக இலக்கணங்கள் இருக்கின்றன. கவிதையை உரைநடையாகவோ, உரைநடையைக் கவிதையாகவோ, எழுதுவது தவறு.


688. ஆங்கிலத்தில் அல்லது தமிழில் தவறு இல்லாமல், அரசியல், மதம், ஜாதி, சினிமா பற்றி இல்லாமல் நல்ல கருத்தை ஒரு பக்கம் எழுதிப் பாருங்களேன்.


689. தனது வயதுக்கு மீறிய விஷயங்களைப் பற்றி ஒருவர் எழுதும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.அது கத்தி மேல் நடப்பதற்கு சமம் ஆகும்


690. எழுதுவதில் தொடர்ச்சியாக விவரிப்பது [Narration] முக்கியம். அதற்குப் பலமுறை எழுதிப் பழக  வேண்டும். பிறர் எழுதியதைப் படிக்க வேண்டும்.

No comments :

Post a Comment