Sunday, December 30, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1006 TO 1020

1006. ஹிந்துக்கள் மட்டும் தான் வாழ்த்துகள் சொல்வது. கிரிஸ்தவர்கள், முஸ்லிம்கள் சொல்வது கிடையாது. வாழ்த்தவும் வேண்டாம், வீழ்த்தவும் வேண்டாம்.

1007. திரு எம்.ஜி.ஆர் அவர்களை நாம் போற்றிப் புகழுகிறோம். மக்களுடைய நன்மைக்காக அரசியலில் அவர் செய்த அரிய சாதனைகளை விளக்கிக் கூற முடியுமா?

1008. கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த வார்த்தையும் அதிக நாளைக்கு நிலைக்காது என்று சொல்வார்கள். தானாக பிழைக்கும் வழி தேடவேண்டும்.

1009. ஒவ்வொருவரும் அரசியலில் ஒரு தலைவரை ஆதரிக்கிறீர்கள். அவர் பதவிக்கு வந்து லஞ்சம்,ஊழல்,ஏழ்மையை ஒழிக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

1010. சரி, போகிறது. நமது நாட்டிற்கு இப்போது தேவை முன்னேற்றம் அல்ல. லஞ்சம் ஊழல் ஒழிய வேண்டும். அதற்கு உங்கள் தலைவர் உறுதிமொழி தருகிறாரா?

1011. என்னை தப்பா நினைக்காதீங்க. மதம், சாதின்னு கட்டிக்கிட்டு அலையுறோமே, நாம் நமது  பெற்றோரின் குழந்தைதான் என்று நமக்கு நிச்சயமாக தெரியுமா? 

1012. எனக்கு என் பெற்றோர்களைத் தெரியாது. அவர்கள் தான், நான் அவர்கள் பிள்ளை என்று சொன்னார்கள். அதை நான் இதுவரை நம்பிக்கொண்டு இருக்கிறேன்.

1013. நான் ஒரு முஸ்லிமாக, கிருஸ்துவனாக இருக்கலாம்.நான் பிறக்கும் போது ஆஸ்பத்திரியில் குழந்தை மாறி இருக்கலாம். இறைவனுக்கு தான் தெரியும்.

1014. தந்தை என்பார், சகோதரன் என்பார், நண்பர் என்பார். மன வேற்றுமை வந்து விட்டால் மமதை வந்துவிடும். உறவுமுறை மறந்து விடும். இதுதான் உலகம்.

1015. நாம் பிறக்கும்போதே நமது வாழ்க்கைப் பாதை இறைவனால் போடப்பட்டு விட்டது. அந்த வழியில் நாம் நடக்கத்தான் செய்கிறோம்.அதை மாற்ற முடியாது.

1016. நமக்கு வருடப் பிறப்பு சித்திரை மாதத்தில். ஜனவரிக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் வாழ்த்து சொல்லாமல் யாரும் இருக்கப் போவதில்லை.

1017. நிஜ வாழ்க்கையில் பேஸ்ட்க்கு அப்புறம் காப்பி வரும். கம்ப்யூட்டர் வாழ்க்கையில் காப்பிக்கு அப்புறம் பேஸ்ட் வருது. ஒண்ணுமே புரியலே.


1018. பெண்கள் அசிங்கமாக உடை உடுத்தக் கூடாது என்ற கருத்தை சொல்ல அவர்களுக்கு அசிங்கமாக உடை அணிவித்து திரைப்படம் எடுத்தால் என்ன செய்யலாம்?


1019. கண்ணாடி துண்டும் கற்கண்டும் பார்ப்பதற்கு ஒரே மாதிரித் தெரியும். சுவைத்துப் பார்த்தால் தான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தெரியும்.


1020. உணவுப் பசி இரண்டு வகைப்படும். ஒன்று வயிறு காலியாகி கேட்பது. இரண்டு நாக்கு வேண்டும் எனக் கேட்பது.முதலாவது நல்லது.இரண்டாவது கெடுதல்.




No comments :

Post a Comment