Monday, January 14, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1021 TO 1035

1021. ஒரு மனிதனைக் கொன்று தோலை உரித்தால் எவ்வளவு வேதனைப் படுவீர்கள், அதேபோல ஒரு பிராணியைக் கொன்று தோலை உரித்தால் அதுவும் வேதனைப் படும்.

1022. புது வருட ஆரம்பத்தில் முதலில் தாய் தந்தையை வணங்குங்கள். பிறகு இறைவனை வணங்குங்கள். பிறகு விரோதம் பாராட்டாமல் அனைவரையும் வாழ்த்துங்கள்.


1023. ஸமஸ்க்ரித ஸ்லோகங்களின் அர்த்தம் தெரிந்தால் நல்லது. தெரியாவிட்டால் இறைவனுக்கு அதன் அர்த்தம் தெரியும். நாம் சரியாகச் சொன்னால் போதும்.


1024. ஐந்தறிவு நாய் ஆறறிவு மனிதனை நேசிக்கிறது. ஆனால் நாயுடன் சண்டை போடுகிறது. மனிதன் நாயை நேசிக்கிறான். ஆனால் மனிதனுடன் சண்டை போடுகிறான்.


1025. இசை இறைவனின் படைப்பு.இசையில் ராகமும் வரிகளும் முக்கியம்.வரிகள் தெரியாமல் ராகத்தை ரசிக்கலாம்.ராகம் இல்லாமல் வரிகளை ரசிக்க முடியாது.


1026. பாஷை முக்கியமில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி எதையும் ரசிக்கலாம். நமது ரசிப்புத் தன்மை இன்னும் அதிகரிக்கும்.


1027. "பரியேறும் பெருமாள்" போன்ற திரைப்படங்கள் வந்தால் தான் பெரிய பெரிய ஹீரோக்களின் கொட்டமும் அடங்கும். தமிழ்த் திரை உலகமும் பிழைக்கும்.


1028. மொகலாயர்களும், ஆங்கிலேயர்களும் நமது விரோதிகள். கொள்ளை அடித்தார்கள். நமது அரசியல்வாதிகள் உடன்பிறப்புகள். நம்மையே கொள்ளை அடிக்கலாமா?


1029. "வெற்றி நடை போடுகிறது" என்று விளம்பரம் செய்கிறார்கள். வெற்றி நடை போடும் போது எதற்கு வீண் விளம்பர செலவு? எனக்கு ஒண்ணுமே புரியவில்லை.


1030. ஆணும் பெண்ணும் ஒரே பள்ளி, கல்லூரியில் படிப்பது அல்லது தனித்தனி பள்ளி கல்லூரியில் படிப்பது, இரண்டில் எதை நீங்கள் வரவேற்கிறீர்கள்?


1031. "பெண்கள் தற்போது நாகரீகமாக உடை உடுத்துவது அவர்களுடைய தனிப்பட்ட சுதந்திரம்" என்ற கருத்தினை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா இல்லையா?


1032. கல்வியை விட சிறந்த மூலதனம் எதுவும் இல்லை. அதனால் வரும் வருமானம், நிம்மதி, சந்தோஷம் நிலையானது. இதை நன்றாக அறிந்தவர்கள் பிராமணர்கள்.


1033. பிராமணர்களுக்கு படிப்பை தவிர வேறு தொழில் தெரியாது.அது அவர்கள் உயிர்.அதனால் இட ஒதுக்கீடை பற்றி அவர்கள் சிறிதும் கவலைப்படுவது இல்லை.


1034. இட ஒதுக்கீடு என்பது ஒருவரது இயலாமைக்கு அளிக்கப் படும் பிச்சை என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். அதனால் அதை அறவே மறுக்க வேண்டும்.


1035. ஒரு அரசியல் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் தரப்படும் கடன் ரத்து, சலுகைகள், இனாம்கள், வெற்றிக்கு பின் கட்சி செலவா? அரசாங்க செலவா?














No comments :

Post a Comment