Monday, December 3, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 931 TO 945

931. மஹாகவி பாரதியாருக்கு, தமிழைத் தவிர சமஸ்கிருதம், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம், பிரென்சு மொழிகள் நன்றாகவும், அரபிக் கொஞ்சமும் தெரியும்

932. வாஷிங் மெஷின் உபயோகிப்பதால் பணம்,தண்ணீர் அதிகம் செலவாகிறது,துணி சீக்கிரம் அழுக்காகிறது,கிழிந்து போகிறது,மனிதனை சோம்பேறி ஆக்குகிறது

933. நாம் பிறர் மனம் வருந்தும்படியான விஷயங்களை ஒருபோதும் பேசுதல் கூடாது. எப்போதும் பிறர் சந்தோஷப்படும் விஷயங்களையே பேசுதல் வேண்டும். பலன் உண்டு.

934. சரியான, நம்பகமான தினசரி பெய்யும் மழை மற்றும் மழை சம்பந்தமான செய்திகளை அறிய வ்வ்வ்.இம்ட்ச்சேன்னை.கவ்.இன் என்ற வலை தளத்துக்குச் செல்லவும்.

935. உங்கள் குழந்தைகளிடம் அவர்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை கூறுங்கள். அவர்கள் எதிர்த்து பேசவில்லை என்றால் உங்களிடம் அன்பு கொண்டவர்கள்

936. தாயாரை பிடிக்கும் என்று கூறினால்,மனைவியை பிடிக்காது என்று அர்த்தமில்லை. ஆங்கிலத்தைக் கற்றால் தமிழை வெறுக்கிறோம் என்று அர்த்தமில்லை

937. துக்கத்தையும், வெறுப்பையும், கோபத்தையும் வெளிப்படுத்த சீதை, கண்ணகி தலைவிரி கோலமாக இருந்தனர். இப்போது பெண்கள் என்ன காரணத்தினாலோ?

938. "உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு" என்பது பழமொழி. சாப்பிட்ட பிறகு ஏன் உறக்கம் வருகிறது என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

939. சாப்பிட்ட பின் இதயம் வயிற்றுக்கு அதிக இரத்தத்தை செலுத்துவதால், மூளைக்கு இரத்தம் குறைந்து, பிராணவாயுவும் குறைவதால் உறக்கம் வருகிறது

940. நடக்கும் போது இதயம் அதிக இரத்தத்தை கால்களுக்கு செலுத்துகிறது. சாப்பிட்ட பிறகு நடந்தால் இதயம் அதிகம் வேலைசெய்து மாரடைப்பு வருகிறது.

941. கொட்டாவி ஒருவருக்கு ஏன் வருகிறது? அவருடைய மூளைக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து, பிராணவாயுவும் குறைவதால் கொட்டாவி வருகிறது

942. நமது நாட்டில், ஆயிரக்கணக்கான ஏழைகள் உணவின்றித் தவிக்கும் போது மதம், சாதி, வழக்கம் என்ற பெயரில் வீண் செலவுகள் செய்வது மிகவும் தவறு.

943. ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன்பு செய்யும் இரத்த பரிசோதனையில் ஒருவர் பாசிடிவ் ஒருவர் நெகடிவ்வாக இருந்தால் திருமணம் செய்ய கூடாது

944. பௌர்ணமி திதியும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் கார்த்திகை தீபம் கொண்டாட வேண்டும்.இந்த வருடம் நவம்பர் 23 ஆம் தேதி.

945. கார்த்திகை மாதம் மாலையில் விளக்கு வைக்கும் போது, வீட்டு வாசலில் அகல் விளக்கு ஏற்ற வேண்டும். மார்கழி மாதம் விடியலில் ஏற்ற வேண்டும்.

No comments :

Post a Comment