Thursday, December 6, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 961 TO 975

961. அறிவு என்பது கர்ம பலன்.கொஞ்சம் முயன்றால் படிப்பு வரும்.சலுகைகள் கொடுப்பதால்,அறிவு வராது.கல்வித் தரம் கீழே போகும்.நாடு பின் தங்கும்

962. உடலைப் பிரியும் ஆத்மா, தன்னுடன் கர்ம பலனையும் அடுத்த பிறவிக்கு எடுத்துச் செல்கிறது. அந்தப் பலனைப் பொறுத்து, அடுத்த பிறவி அமைகிறது.

963. தாய் இல்லாமல் ஒரு பெண் குழந்தையை தந்தை தனியாக வளர்ப்பதும், தந்தை இல்லாமல் ஒரு ஆண் குழந்தையை தாய் தனியாக வளர்ப்பதும் மிகவும் கஷ்டம்.

964. சரியான முறையில் குழந்தைகளை வளர்க்கா விட்டால்,பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுத்து தப்பிக்கலாம்.ஆண் குழந்தைகளிடம் தப்ப முடியாது

965. போதும் என்ற மனமே, பொன் செய்யும் மருந்து. ஆசைக்கு அளவே கிடையாது. அதிக ஆசை, நம்முடைய மன நிம்மதியைும், தைரியத்தையும் கெடுத்து விடும்.

966. திரையில் சினிமாவைப் பார்ப்பது, மனிதனுக்குத் தோன்றும் இயற்கையான ஆர்வம், தூண்டுதல். இதை வைத்து எத்தனை பேர் பிழைப்பு நடத்துகிறார்கள்?

967. கோடி கணக்கில் ஒரு நடிகருக்கு பணம் கொடுக்க அவருக்கு என்ன தகுதி இருக்கிறது, அதனால் நாம் எப்படி பாதிக்கப் படுகிறோம் என்று யோசிக்கணும்

968. முன்னணி இயக்குநர்கள் நல்ல கதையில். புதுமுக நடிகர்களை நடிக்க வைத்து, சிக்கனமாக படத்தை தயாரித்தால் பெரிய நடிகர்கள் கொட்டம் அடங்கும்.

969. அந்தக் காலத்தில் சிவாஜி,எம்ஜிஆர் கோலோச்சிய போது, ஸ்ரீதர்,பாலசந்தர், கோபாலகிருஷ்ணன், முதலியோர் புது முகங்களை வைத்து படம் எடுத்தனர்.

970. எளிமையாக வாழுங்கள், இனிமையாகப் பேசுங்கள், ஆரோக்கியமாக இருங்கள், நிம்மதியாகத் தூங்குங்கள், அதுதான் சிறந்த வாழ்க்கை முறை. வேறு இல்லை

971. முதல் வகுப்பு ரூ4இல் படம் பார்த்த காலம் போய் இப்போது ரூ40இல் பார்க்கலாம்.ஆனால் ரூ400இல் பார்க்கமுடியுமா?ஏழைகள் மதுவை நாடுவார்கள்.

972. தமிழில் மனதை உருக்கும் கதை எழுத யாருமில்லையே? அந்த மாதிரி திரைப்படங்களைப் பார்த்து வருடங்கள் பல ஆயிற்றே. சிறந்த எழுத்தாளர் எங்கே?

973. சினிமாவைப் பற்றி ஒன்றுமே தெரியாமல், இந்த ஜனங்கள் சினிமாப் பைத்தியமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு சிரிக்கத்தான் தோன்றுகிறது.

974. நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது சினிமா நடிகர்களின் மீது மக்களின் பைத்தியம்,மதுவின் மீது உள்ள மோகம்.இதை ஒழித்தால் போதும்

975. செவிடன் காதில் ஊதிய சங்கு என்பார்கள்.நான் ஊதுர சங்கை ஊதி விட்டேன்.காது செவிடா இல்லையா என்று எனக்குத் தெரியாது.உங்களுக்கு தெரியும்.

No comments :

Post a Comment