Monday, December 10, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 976 TO 990

976. கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது தான் வாழ்க்கை. விட்டுக் கொடுத்தால் தான் கட்டிக் கொள்ள முடியும். சுதந்திரம் கூடாது

977. "கனியிருப்பக் காய்கவர்ந் தற்று" என்றார் திருவள்ளுவர். ஆனால் இப்போதெல்லாம் காயைத் தான் எல்லோரும் விரும்புகிறார்கள் கனி இருக்கும்போது.

978. அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் கூறினார்: மக்களுடைய அரசு, மக்களால் ஆன அரசு, மக்களுக்கான அரசு இந்தப் பூமியில் என்றும் அழிவதில்லை

979. அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு நிதி நிலையை அடிப்படையாக வைத்தால், நமது திறமைசாலிகள் பெரும் பணக்காரரை பரம ஏழையாகக் காட்டி விடுவார்கள்.

980. அரசின் சலுகைகளை பெறுவதற்கு சாதியை அடிப்படையாக வைத்தால், நமது திறமைசாலிகள் வாழ்க்கையில் முன்னேற சிறிதும் முயற்சி செய்ய மாட்டார்கள்.

981. இந்தப் பருவகாலத்தில் சென்னையில் இது வரை 68 செமீ  மழைக்கு பதிலாக 34 செமீ  மழை தான் பெய்துள்ளது. வரும் காலத்தில் தண்ணீர் பஞ்சம் வரும்.

982. ஆங்கிலத்தில் ஒரே உச்சரிப்பு உள்ள இரு வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் உண்டு. அது இடத்திற்கு ஏற்றபடி மாறும். அது ஆங்கிலத்தின் சிறப்பு

983. ஒரு தாய், தனது குழந்தைகளை பாரபட்சமில்லாமல் நடத்த வேண்டும். அதிலும் மூத்தவரை மதிக்க வேண்டும். மற்றவர்கள் அவரை மதிக்க செய்யவேண்டும்.

984. என் பாட்டி சொல்வார்கள், "கழுதை விட்டை கை நிறைய" அதாவது உபயோகம் இல்லாத பொருட்கள்  அதிகம் இருப்பதால் யாருக்கும் எந்தவித பலனும் இல்லை.

985. நமது திரைப்படங்களும் பத்திரிகைகளும், தொலைக்காட்சியும் நமக்குக் கூறுவது இதுதான்."எதையும் அசிங்கமான எண்ணத்தோடு பார்க்காதீர்கள்"என்று

986. மனிதன் மலம், மாட்டுச் சாணம், கழுதை விட்டை, குதிரை / யானை லத்தி, ஆட்டுப் புழுக்கை.பொருள் ஒன்று வார்த்தைகள் பல.ஆஹா,தமிழின் அழகே அழகு

987. மாடு, ஆடு, கோழி, வாத்து, பன்றி,மீன் முதலிய வீட்டுப் பிராணிகளை வளர்த்து குடிசைத் தொழிலாக லாபம் சம்பாதிக்க முயற்சி செய்தால் பலனுண்டு.

988. சாராயக் கடைகளிலும் சினிமா தியேட்டர்களிலும் கூட்டம் அலை மோதுகிறது யார் சொன்னார்கள் மக்கள் கஷ்டப் படுகிறார்கள் என்று?சும்மா காதுல பூ

989. குடும்பம் முன்னேறினால், நாடு முன்னேறும். குடும்பம் முன்னேறாவிட்டால் குடும்பம், நாடு இரண்டுமே முன்னேறாது. பல குடும்பங்கள் ஒரு நாடு.

990. அறிவுள்ளவன் நாம் சொல்வதை ஒப்புக்கொள்ள மாட்டான். அறிவில்லாதவன் நாம் சொல்வதை புரிந்து கொள்ள மாட்டான். இருவரிடமும் பேசுவது வீண் வேலை.

No comments :

Post a Comment