Wednesday, December 5, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 946 TO 960

946. சாதகமான ஒரு காரியத்திற்கு என்ன காரணம் என்று நமக்கு நன்றாகத் தெரியும். பாதகமான ஒரு விஷயத்திற்கு என்ன காரணம் என்று தெரியவே தெரியாது.

947. அந்தக் காலத்தில் திரைப்படங்களில் செந்தமிழில் பேசுவது வழக்கம்.ஏனோ எனக்கு செந்தமிழில் பேச, எழுத விருப்பம் இல்லை. காரணம் தெரியவில்லை.

948. ஒரு கவிதை எழுதலாம் என்று என் மனம் நினைத்தால், கவிஞர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்கிற கவலை முதலில் வருகிறது.என்ன செய்வது?

949. மழை பெய்கிறது,வெயில் அடிக்கிறது,பனி கொட்டுகிறது,குளிர் வாட்டுகிறது,காற்று வீசுகிறது,மேகம் நகர்கிறது,மரம் ஆடுகிறது.மனம் களிக்கிறது

950. இருவிழிகளில் பன்னீர் துளிகள் மகிழ்ச்சி, 
கருவிழிகளில் கண்ணீர் துளிகள் வீழ்ச்சி. விழிகளில் துளிகள் வருவது இயற்கை. இடங்கள் தான் வேறு

951. வானத்திலிருந்து பூமிக்கு மழை தாரையாக பொழிகிறது. பூமிதாய் அதை உள்வாங்கி குடிக்கிறாள்.மக்களுக்கு தேவையின் போது அன்புடன் அளிக்கிறாள்.

952. சூரிய பகவான் காலையில் இருந்து மாலை வரை தினமும் தவறாமல் பூமிக்கு வெப்பத்தை அளிக்கிறார். அந்த வெப்பம் இல்லையென்றால் உயிர் நமது இல்லை.

953. புஷ்பத்தை பார்க்கும் போது மனதில் எவ்வளவு பூ பூக்கிறது தெரியுமா? நமது கஷ்டமெல்லாம் காற்றில் தூசியாக பறந்து விடுகிறது என்பது உண்மை.

954. மறக்கலாம் என்றால் முடியவில்லை. நினைக்காமல் இருக்கலாம் என்றால் அதுவும் முடியவில்லை.நினைவை விட்டு போக மாட்டேன் என்கிறாள்.என்ன செய்ய?

955. மயக்கும் அந்தி நேரம். ஆற்றின் கரை. முழு நிலா வானில். பச்சை புல்வெளி. மயக்கும் இசை. தென்றல் சுகம். அதோ அவள் வருகிறாள்.கவலையை காணோம்

956. பூக்கும் என நினைத்தேன்.பூத்தது மட்டுமல்ல,பார்த்து சிரித்தது.சிரித்தது மட்டுமல்ல,அருகில் அழைத்தது.அழைத்தது மட்டுமல்ல,மோகம் தந்தது!!

957. வெகுநேரம் காத்திருந்தது தான் மிச்சம்.எப்போது பார்ப்போம் எனத் தெரியவில்லை.மனம் தவிக்கிறது. ஆர்வம் அதிகமாகிறது. எங்கே இந்த பேருந்து?

958. திருமணத்தில் பெண்ணின் சகோதரன் ஹோமத்தில் நெல்பொரி இடுவதற்கும், கார்த்திகையில் அவள் நெல்பொரி உருண்டை படைப்பதற்கும் என்ன சம்பந்தம்?

959. புடவை கடையில் ஒன்பது கஜ புடவைகள் அதிகம் இருக்காது. இப்போது யாரும் அதை உடுததுவது இல்லை. எப்படி உடுததுவது என்று பலருக்குத் தெரியாது.

960. காற்று மிக வேகமாக வீசினால் நஷ்டம்.மெதுவாக வீசினால் சுகம்.மிதமாக வீசினால் இஷ்டம்.வீசவில்லை என்றால் கஷ்டம்.காற்றுக்கு எவ்வளவு சக்தி.

No comments :

Post a Comment