Tuesday, September 11, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 706 TO 720

706. எனக்குத்தான் காது கேட்கவில்லை. இறைவா, உனக்கு கூட நான் கதறுவது கேட்க வில்லையா?எப்போது எனக்கு இவ்வுலகத்தில் இருந்து விடுதலை தருவாய்?

707. கடலின் பரிசு மேகம்.மேகத்தின் பரிசு மழை.மழையின் பரிசு தண்ணீர்.தண்ணீரின் பரிசு பூமியின் வளம்.பூமியின் பரிசு விளைச்சல்,நமது சந்தோஷம்.


708. வேற்று மதத்தினரைத் தாக்கி பதிவுகள் போட்டுவிட்டு மதத் துவேஷம் பற்றி கதறி ஒப்பாரி வைக்கிறோம். அதில் என்ன சந்தோஷம் என்று தெரியவில்லை.


709. டிவி விளம்பரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பொருட்கள் தான் அதிகம் இருக்கும். ஆண்கள் பொருட்கள் அதிகம் இருக்காது. ஏன் தெரியுமா?


710.வியாழக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் தான் துக்கம் கேட்க வேண்டும் என்று கூறுவார்கள். ஏனோ எனக்கு அதில் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை.


711. இனி ஆண்டவன் தான் பெண்களையும் அவளுடைய பெற்றோர்களையும் காப்பாற்ற வேண்டும். என்ன கதறினாலும் யாரும் கேட்கப் போவதில்லை என்பது நிச்சயம்.

712. பெண்ணீயம், பெண் சுதந்திரம், பெண் முன்னேற்றம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை. அதில் ஏமாந்து பெண்கள் விட்டில் பூச்சிகளாக விழுகிறார்கள்.


713. ஆண்களின் தனித் தன்மை படிப்பு, உடல் வலிமை. இப்போது பெண்கள் படிப்பில் முன்னேறி இருக்கிறார்கள்.உடல் வலுவில் அவர்கள் முன்னேற வேண்டும்.


714. விருந்தில் கடைப்பிடிக்க வேண்டிய பண்பாடு: விருந்து அளிப்பவர் கடைசியில் உண்ண வேண்டும். விருந்தாளி உண்ண அழைத்த பின்பு உண்ண வேண்டும்.


715. உணவு உண்ணும்போது உதடுகளை மூடிக் கொண்டு உண்ண வேண்டும்.வாயைத் திறந்து கொண்டு உண்ணக் கூடாது. நாக்கை வெளியே நீட்டி உணவைப் போடக் கூடாது


716. ஒரு பதார்த்தம் மிகவும் பிடிக்கும் என்பதாலோ, அதிக ருசியுடன் இருப்பதாலோ அதை அதிகம் உண்ணக் கூடாது. எல்லா உணவையும் சமமாக உண்ண வேண்டும்.


717.தேவைக்கு மேல் உணவை போட்டுக் கொண்டு வீண் செய்யக்கூடாது. உணவு கிடைக்காத எவ்வளவோ ஏழைகளை அப்போது நினைக்க வேண்டும். உணவு இறைவனின் பரிசு


718. ஒரு பதார்த்தத்தை உண்பதில் உள்ள ஆசையை விலக்க வேண்டும். நாவில் இருக்கும் வரை தான் ருசி. தொண்டைக்கு கீழே இறங்கிவிட்டால் அதோ கதி தான்.


719. ஒரு தந்தை குழந்தைகளுக்கு உணவு, உடை, இடம், ஆரோக்கியம், கல்வி கொடுக்கிறார். பின்பு அவர்கள் சம்பாதிக்கும் பணம் அவரை சேர்ந்தது அல்லவா?


720. பெற்றவர்களுக்கு கேட்காமல் உதவி செய்தால் அது அன்பு.கேட்டு உதவி செய்தால் அனுதாபம்.கேட்டும் உதவி செய்யவில்லை என்றால் பூர்வ ஜன்ம பலன்.


No comments :

Post a Comment