Tuesday, September 11, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 721 TO 735

721. ஆரம்பம் லைப்பாய். பிறகு ஹமாம், மார்கோ, மெடிமிக்ஸ், மைசூர் சாண்டல், அப்புறம் பியெர்ஸ், கடைசியில் டவ். எனது வாழ்க்கையில் முன்னேற்றம்

722. இந்தத் தலைமுறைப் பெண்களில் பலர் வேலைக்கு செல்லும் காரணத்தினால் தங்கள் தாயார்,மாமியாரிடம் வீட்டு வேலைகளில் உதவி எதிர்பார்ப்பது சரியா?

723. மதத்தையும், ஜாதியையும் இந்த நாட்டை விட்டு ஒழிக்கவே முடியாது. பிறகு எதற்கு  அதைப்பற்றி பதிவுகள் போட்டு துவேஷத்தை வளர்க்க வேண்டும்?

724. சாதாரண சாக்லேட் உடலுக்கு நல்லதல்ல. ஆனால் டார்க் சாக்லேட் உடலுக்கு நல்லது. சாப்பிடுவது கொஞ்சம் கஷ்டம். மிகவும் கசப்பாக இருக்கும்.

725. எந்த ஒரு கருத்தையும் அழகாக, சுவையாக, கோர்வையாக, ஆணித்தரமாக, புரியும்படி,சுலபமான வார்த்தைகளில் எழுதினால் எல்லோரும் விரும்புவார்கள்.

726. ஸெல் போனில் அலாரம் வைப்பது போல, ஆட்டோ கால் முறையை கண்டு பிடித்தால், நம்மை நேரில் அறுப்பவர்களிடம் இருந்து தப்பிக்க வழி கிடைக்குமே.

727. ஒன்றிரண்டு துணிகளை மட்டும் துவைக்கும் படி வாஷிங் மஷிணை ஏன் இன்னமும் கண்டு பிடிக்கவில்லை.தினம் துவைக்கலாம்.செலவும், இடமும் குறையும்

728. ஹையா, வாஷிங் மெஷின் வந்து விட்டது. இனிக் கவலை இல்லை. தினம் துணிகளைத் துவைத்து அணிவதற்கு பதிலாக, வாரம் ஒருமுறை துவைத்தால் போதும்.

729. நான் என்னுடைய கடமைகளைச் செய்கிறேன். மனைவி, குழந்தைகளுக்காக உருகுவது, ஏங்குவது, தவிப்பது, வெறுப்பது இல்லை. இறைவனை நினைப்பது நல்லது.

730. சமூகத்தில் 90% நல்லவர்கள்.அவர்கள் 10% நபர்களை நல்லவர்களாக மாற்றுவதற்கு பதில்,10% பேர் மற்றவர்களை கெட்டவர்களாக மாற்றிவிடுகிறார்கள்.

731. தன்னுடைய குடும்பத்தில் உள்ள எல்லோரிடமும் அன்பு, பாசம், காதல், மரியாதை, பயம், கண்டிப்பு எல்லாம் சம அளவில் காட்ட வேண்டும். முடியுமா?

732. எனக்கு பிடித்த பழம் வாழைப்பழம். அது எளிமையானது, இனிமையானது, மலிவானது, ஆரோக்கியமானது. உங்களுக்கு எந்த பழம் மிகவும் பிடிக்கும்?

733. சாதாரணமாக பெண் குழந்தை அம்மா ஜாடையிலும், ஆண் குழந்தை அப்பா ஜாடையிலும் இருக்கும் என்பார்கள். மாறி இருந்தால் அதிர்ஷ்டம் என்பார்கள்.

734. அமெரிக்காவில் நாய்களுக்கு தேவையான பொருட்களுக்கு தனி கடை உண்டு. ஏராளமான பொருட்கள். உ-ம் ரெயின் கோட்டு,சாக்ஸ்,ஷாம்பூ. வயிற்றெரிச்சல்

735. அமெரிக்காவில் ஜனாதிபதியையே கிண்டல் செய்து எழுதுகிறார்கள். யாரும் எதுவும் கண்டு கொள்வதில்லை. அவரவர் வேலையை அவரவர் பார்க்கிறார்கள்.





No comments :

Post a Comment