Friday, July 6, 2018

ரத்தக்கண்ணீர்

எவ்வளவோ கஷ்டங்களுக்கு இடையில் பெண்ணைப் படிக்க வைத்து ஆளாக்கினேன். அவளால் எனக்கு ஒரு பயனும் இல்லையென்று அவள் பெற்றோர் கதறுகின்றனர். பெண்களைத் தங்களுடைய கண்களுக்கு மேலாக நினைத்து வளர்த்த பெற்றோர்கள் இன்று அவள் படும் கஷ்டத்தை நினைத்து ரத்தக்கண்ணீர் சிந்துகிறார்கள்

இப்பொழுது  கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகிறார்கள். நன்றாகப் படித்தும், வேலைப்பார்த்தும், சம்பாதித்தும்  பெண்களுக்கு  தன்னுடைய பணத்தை செலவு செய்யும் சுதந்திரம் இல்லை. பல குடும்பங்களில் பண விவகாரங்களை ஆண்கள் தான் கவனிக்கிறார்கள்.

வீட்டு வேலையும் பார்த்துக் கொண்டு, அலுவலக வேலையும் பார்த்துக் கொண்டு, குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு பெண்கள் படும் கஷ்டத்திற்கு அளவேயில்லை . அதனால் அவர்கள் சிறு வயதிலேயே பலவித நோய்களுக்கு ஆளாகிறார்கள்.

இன்னும் ஆணுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள். பெண்கள், தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, தங்கள் இஷ்டப்படி கையாள முடியவில்லை என்றால்,ஏன் சம்பாதிக்கணும். அவர்கள் கணவனிடம் கொடுத்து விட்டு அனுமதிக்கப் பட்டதை மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள். 

இது உண்மையான  பெண்கள் மேம்பாடா? அந்தக் காலம் போல் மறுபடியும் அடிமையாகத்தான் இருக்கிறார்கள். பெண்களில் பலர் தங்கள் திறமையைக் காட்டுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆண்களில் பலர் அவர்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று தெரியாமல்.

பெண் சுதந்திரம் என்ற பெயரில் தாங்கள் ஏமாற்றப்படுவது கொஞ்சமும் தெரியாமலேயே இன்றைய பெண்கள் கடினமாக உழைப்பது மிகவும் வேதனையான செயல். சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி. இன்றைய இளைஞர்கள் பெண்களின் உழைப்பில் சொகுசு வாழ்க்கை வாழ்வது மிகவும் வேதனையான செயல்.

ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும் , பாடற மாட்டைப் பாடிக் கறக்கணும். இன்றைய  இளைஞர்களுக்கு இந்தப் பாடம் மிக நன்றாகத் தெரிந்து இருக்கிறது. பெண்ணீயம், பெண் சுதந்திரம், பெண் முன்னேற்றம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை. அதில் ஏமாந்து பெண்கள் விட்டில் பூச்சிகளாக விழுகிறார்கள்.

இனி ஆண்டவன் தான் பெண்களையும் அவளுடைய பெற்றோர்களையும் காப்பாற்ற வேண்டும். என்ன கதறினாலும் யாரும் கேட்கப் போவதில்லை என்பது நிச்சயம். இந்தக் குறைபாட்டை போக்க, பெண்களுடைய எதிர்காலத்தைப் பாதுகாக்க, நான் ஒரு வழி சொல்கிறேன். ஆனால் பெரும்பாலோர் இதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

கணவனும் மனைவியும் வேலை பார்த்தால் :

1.இருவரும் ஒரு குறிப்பிட்ட தொகையை பாக்கெட் மணியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

2. எல்லா குடும்ப செலவுகளையும் கணக்கு எழுதி அவர்களுடைய சம்பள விகிதத்தில் பிரித்துக் கொள்ள வேண்டும்.

3. மீதி உள்ள பணத்தை அவர்கள் விருப்பம் போல செலவு செய்யலாம்.

4. கடைசியில் மீதி உள்ள பணத்தை அவரவர் பெயரில் கூட்டுக் கணக்காக முதலீடு  செய்யவேண்டும்.


No comments :

Post a Comment