Thursday, July 12, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 541 TO 555

541. என்னுடைய தமிழ் பதிவுகளுக்கு இருக்கும் வரவேற்பு ஆங்கிலப் பதிவுகளுக்கு இருப்பதில்லை. ஏனென்றால் பலருக்கு ஆங்கிலம் தெரியாத காரணம்தான்.

542. எந்த மொழியையும் வெறுப்பதன் மூலம் ஒருவன் தாய்மொழிக்கு நன்மை செய்ய முடியாது. அது மட்டும் அல்ல; அவன் தனக்கே துரோகம் செய்து கொள்கிறான்


543. தாய் மொழிப் பற்று வேறு. உலக அறிவு வேறு. தாய் மொழியை யாராவது இழிவு படுத்தினால் கோபம் கொள்ள வேண்டும். இன்னொரு மொழியைக் கற்பது நல்லது


544. வயது அதிகமானவராக இருந்தால் முடியாது,வேறு வழியில்லை. இளைய தலைமுறையினர் ஆங்கிலம் கற்க முயற்சி செய்ய வேண்டும்.அதனால் நிறைய பலன் உண்டு


545. தமிழர் ஒருவருக்கு தமிழ் அறிந்த அளவு ஆங்கிலம் தெரிய வாய்ப்பில்லை. தாய் மொழியைத் தவிர வேறு ஒரு மொழியை கற்ப்பதால் நஷ்டம் எதுவுமில்லை.


546. தமிழ் தெரியாதவருடன் பேசிப் பழக உதவும். ஆங்கிலத்தில் பேச,புத்தகங்கள் படிக்க முடியும். தாழ்வு மனப்பான்மை விலகும். உலக அறிவு வளரும்.


547. எனக்கு ஆங்கிலத்தில் புலமை கிடையாது.எனக்கு தெரிந்ததெல்லாம்  புத்தகங்களையும், நாளிதழ்களையும் திரும்பத் திரும்ப படித்து அறிந்தது தான்


548. பலர் ஆங்கிலத்தை விரும்புவது இல்லை.அதில் கஷ்டம் ஒன்றும் கிடையாது.படிக்க படிக்க சுலபமாக புரியும்.முயற்சியும் ஆர்வமும் தான் முக்கியம்


549. ஆங்கிலம் படிக்கும் போது புரியாத வார்த்தைகள் வந்தால் அதை உபயோகப் படுத்திய முறையை மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும். பிறகு கஷ்டம் இல்லை.


550. பாதையிலே வெளிச்சமில்லை,பகல் இரவு புரியவில்லை,பாதையும் தெரியவில்லை.ஆயிரம் தான் வாழ்வில் வரும்,நிம்மதி வருவதில்லை.அறிவே வா,அறிவே வா 


551. இளைஞர்களே, மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. முயற்சி திருவினையாக்கும். முயற்சி செய்யுங்கள். வெற்றி நிச்சயம் கிட்டும். வாழ்த்துக்கள்.


552. இதை பற்றி யாரும் கவலை படுவதில்லை. இரண்டு நாட்களுக்கு சமூக வலை தளங்களில் கருத்துக்கள் பரிமாறப்படும்.பிறகு மறக்கப்படும்.ஜெய் ஹிந்த்.


553. முதலில் நான் இந்தியன் என்பார்,பின் தமிழன் என்பார்,இந்த மதம் என்பார்,இந்த ஜாதி என்பார்,இந்தக் கட்சி என்பார், வேற்றுமையில் ஒற்றுமை.


554. உச்ச நீதி மன்றம் அனுமதி இல்லாத போராட்டத்திற்கு தடை விதித்து உள்ளது.போராட்டம் நடத்தும் அரசியல் கட்சி நஷ்ட ஈடு தர உத்தரவு இட்டுள்ளது


555. மற்ற பொது மக்களின் பாதுகாப்பு, சொத்துக்களுக்கு அரசு பாதுகாப்புத் தர வேண்டும். இதை நாம் நன்கு உணர்ந்து பொறுப்பாக செயல் பட வேண்டும்.

No comments :

Post a Comment