Tuesday, July 10, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 526 TO 540

526. எதிர்ப்பு வேறு போராட்டம் வேறு. நாம் செய்வது போராட்டம். நல்ல கல்வியும் வளர்ப்பு முறையும் தான் நம்மை சரியான வழியில் போகத் தூண்டும்.

527. கதாசிரியர், ஒரு கதையில் ஒரு கதாபாத்திரம் மோசமானவர் என்று கூறினால் போதும். அவர் பேசும் மோசமான வார்த்தைகளை எழுத வேண்டிய அவசியமில்லை.


528. சாதி, மத உணர்ச்சிகள் இருப்பதில் தவறில்லை. வெறி கூடாது.அவர்கள் பரமாச்சாரியாரின் "தெய்வத்தின் குரல்" படிக்கும் படி கேட்டு கொள்கிறேன்


529. என்னால் வழி மட்டும் தான் காட்ட முடியும். போய்ச் சேர வேண்டிய இடத்திற்கு போவது உன் வேலை. அதற்கு மேல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது.


530. அதைத் தொடர்ந்து "கடை அடைப்பு" என்ற போராட்டம் நடக்கும்.எல்லோரும் தங்கள் கடைகளை மூட வேண்டும்.மூடாத கடைகளின் மீது கல் வீச்சு நடக்கும்


531. வன்முறை அதிகம் ஆனால் போலீஸ் முதலில் எச்சரிக்கை, பின் தடியடி,தண்ணீர் வீச்சு, கண்ணீர்புகை, துப்பாக்கி சூடு நடத்துவார்கள்.இது தேவையா?


532. இது கட்சி அரசியலால் வருவது. இரு கட்சிகள் ஒருவரை ஒருவர் ஜன்ம விரோதிகளாக பார்க்கிறார்கள். அதனால் எந்த போராட்டமும் அமைதியாக நடக்காது.


533. இடையில் வன்முறை எப்படி வந்தது? சமூக விரோதிகளின் மேல் பழி போடுவது சரியில்லை. அவர்கள் எப்படி வந்தார்கள்? வன்முறைக்கு நாமே பொறுப்பு.


534. நம் கோரிக்கையை அரசு முன் வைப்பதுடன் நம் கடமை முடிந்தது. அதை ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் அரசின் முடிவு. அது நாம் தேர்ந்தெடுத்த அரசு


535. அமைதியான முறையில் நம் எதிர்ப்பை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். ஜப்பானில் கறுப்புப் பட்டை அணிந்து வேலையைத் தொடர்ந்து செய்வார்கள்.


536. ஒரு தரம் அதிக மார்க் வரும், இன்னொரு தரம் குறையும். ஒரு பதிவு விரும்பப்படும், மற்றொரு பதிவு விரும்பப் படாது. யூ டேக் இட் ஈஸி கண்ணா.


537. 1.தேர்தலுக்கு முன்பே கூட்டணி இருந்தால் அதில் பெரிய கட்சியை அழைக்க வேண்டும். 2.இல்லையெனில் பெரும்பான்மைக் கட்சியை அழைக்க வேண்டும்.


538. ஒரு தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத போது ஆளுநர் சட்டப்படி செய்ய வேண்டியது என்ன என்று கூற முடியுமா?


539. வாழ்ந்து காட்டுங்கள்.பிறகு பாருங்கள்  நாட்டின் வளர்ச்சியை,மக்களின் மகிழ்ச்சியை.அது சொர்க்க பூமியாக திகழும்.இது சத்தியம்.முடியுமா?


540. ஒவ்வொரு தொகுதியிலும் கட்சி சார்பில்லாத, எல்லா விதத்திலும் சிறந்த ஒருவரை மக்களே தேர்தலில் வெற்றி பெறச் செய்து அரசாள அனுப்பவேண்டும்

No comments :

Post a Comment