Wednesday, July 11, 2018

மாமியார் தினம், மாமனார் தினம்

1. இதைப் படித்து விட்டு என்னைப் பலர் ஒரு முட்டாள் என்று நினைக்கலாம். பரவாயில்லை. அதற்காக நான் இதை எழுதாமல் இருக்கப் போவதில்லை.

2. அன்னையார் தினம், தந்தையர் தினம் என்று வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் அவர்களை நினைப்பது போல அந்த தினங்களைக் கொண்டாடுகிறோம்.


3. அன்னையர் தினமும், தந்தையர் தினமும் ஞாயிற்றுக்கிழமை தான் வருமாம். அன்றுதான் வெள்ளையர்கள் தங்கள் பெற்றோர்களைப் பார்க்கப் போவார்களாம்.


4. வெள்ளையனே வெளியேறு என்ற கூக்குரல் இன்னம் கேட்கிறது. இப்போது எதிலும் எப்போதும் வெள்ளையன் செய்வதை சொந்த அறிவில்லாமல் பின்பற்றுகிறோம்


5. தமிழ், தமிழர் பண்பாடு, தமிழ் வாழ்க என்று கோஷம் போடுகிறோம். பின்பு எங்கே இருந்து எப்படி வந்தது அன்னையர் தினமும், தந்தையர் தினமும்?


6. ஆங்கிலம் ஒரு வார்த்தை தெரியவில்லை. ஒரு வரி படிக்க முடிவதில்லை, பேச முடியவில்லை. ஆனால் MOTHER'S DAY, FATHER'S DAY கொண்டாடுகிறோம்.


7. நமக்கென்று ஒரு குறிக்கோள்,அதற்கென்று ஒரு பாதை, அதை அடைய ஒரு வழி என்று செல்லாமல் வேறு ஒருவன் காட்டும் வழியில் செல்வது மிகவும் ஆபத்து 


8.அன்னையர் தினம், தந்தையர் தினம் என்று கொண்டாடுவது போல மாமியார் தினம், மாமனார் தினம் என்று ஏன் அனுசரிப்பது இல்லை ? அவர்கள் எந்த விதத்திலும் தாய், தந்தைக்கு குறைந்தவர்கள் இல்லை. 


9. தாய் தந்தை குழந்தைகளுக்கு செய்வது அவர்களுடைய பெற்ற கடமை. ஆனால் மாமனார், மாமியார் செய்வது தியாகம். இதை யாரும் உணருவது இல்லை. அது ஒரு துரதிர்ஷ்டம். 

10. 25 வருடங்கள் ஒரு மகனையோ, அல்லது மகளையோ கஷ்டப் பட்டு வளர்த்த பின் அதனால் கிடைக்கும் பலனை அனுபவிக்காமல், ஒரு பெண்ணிடமோ, பையனிடமோ தாரை வார்த்துக் கொடுக்கிறார்கள். 


11. நீங்கள் இருவரும் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவியுங்கள் என்று கூறுவது மட்டும் இல்லாமல் தன்னுடைய சொத்தில் பங்கும் கொடுப்பது சாதாரண தியாகம் இல்லை.


12. ஆனால் நாம் அவர்களை நினைப்பது இல்லை. அவர்களுக்கு என்று ஒரு தினம் ஏன் கொண்டாடக் கூடாது?. நமக்கு கொஞ்சமும் நன்றி, விசுவாசம் இல்லை.


13. தந்தையர் தினத்திற்கு மறுநாள் மாமனார் தினம், அன்னையர் தினத்திற்கு மறுநாள் மாமியார் தினம் கொண்டாடுவதாய் தீர்மானிக்கப் பட்டுள்ளது

No comments :

Post a Comment