Tuesday, July 10, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 511 TO 525

511. பொருளாதாரக் கொள்கையை அடிப்படையாக கொண்டு குடியரசு, தொழிலாளர், ஜனநாயகம் என்ற மூன்று அமைப்புகள் மட்டும் நம் நாட்டில் இருக்க வேண்டும்.

512. ஒரு கட்சியின் தலைவரைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை. அவருக்கு கீழே இருப்பவர்கள் தரும் நெருக்கடி அவர் எடுக்கும் முடிவுகளுக்கு காரணம்


513. ஒரு வேட்பாளர் ரூ100 செலவு செய்தால் ரூ50 கணக்குக் காட்டுவார். மீதி கருப்பு பணம். தேர்தலுக்கு பின் அதை விட பல மடங்கு வாங்கி விடுவார்


514. ஒரு வேட்பாளர் ஒட்டு போடுவதற்கு பணம் கொடுத்தால் அவர் நல்லவர் இல்லை.வெற்றிக்கு பின் உங்களிடம் இருந்தே பல மடங்கு பணம் வாங்கி விடுவார்


515. ஒட்டுப் போடுவதற்கு பணம் கொடுப்பது சரியா அல்லது பணம் கொடுத்தவனுக்கு ஒட்டுப் போடுவது சரியா.இது நம் நாட்டில் தீர்க்க முடியாத பிரச்சனை


516. தேன் எடுத்தவன் புறம் கையை நக்காமல் இருக்கமாட்டான். தேர்தலில் சொந்தப் பணத்தை செலவு செய்தவன் அதை மீட்காமல் விட மாட்டான். அளவு மாறும்


517. தேர்தலில் நிற்கும் வேட்பாளர் யாரையும் பிடிக்கவில்லையா, தயங்காமல் நோட்டா [NOTA] வில் உங்கள் ஓட்டைப் போடுங்கள். அதுதான் சிறந்த வழி.


518. தேர்தலில் நல்லவர்களும், கெட்டவர்களும் வேட்பாளராக நிற்கிறார்கள். கெட்டவர்களுக்கு ஒட்டு போடாதீர்கள். உங்களுக்கு ஏன் அந்த வீண் பாவம்.


519. உங்கள் ஒரு ஒட்டு தான் நாட்டின் விதியைத் தீர்மானிக்கப் போகிறது.நன்றாக யோசித்து முடிவு செய்யுங்கள்.பின்னர் வருந்துவதில் அர்த்தமில்லை


520. உண்மையிலேயே நீங்கள் நாடு முன்னேற வேண்டும் என்று விரும்பினால் கட்சி சார்பாக ஓட்டுப் போடக் கூடாது. வேட்பாளர் நேர்மை, திறமை முக்கியம்


521. நாம் பேசுவதில் வல்லவர்கள்.அதில் மயங்குவதிலும் வல்லவர்கள்.தேர்தலில் வேட்பாளர் பேச்சில் மயங்காதீர்கள்.அவர் வாழ்க்கை தரத்தை பாருங்கள்


522. எவ்வளவோ படித்த,பண்புள்ள,கட்சி சார்பில்லாத நல்ல மனிதர்கள் மக்களுக்காக உழைக்க விரும்புகிறார்கள். அவர்கள் ஏன் நம் கண்ணில் படுவதில்லை.


523. ஏன் நன்கு படித்த, பண்பான, நேர்மையானவர்கள் அரசியலுக்கு வருவதில்லை ? தலை எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆனா நாடு எப்படி உறுப்படும்? 


524. நன்கு படித்த, நேர்மையான, பண்புள்ள, அனுபவப்பட்ட புத்திசாலிகள், அதிகாரத்தில் இருந்தால் தான் நாடும் மக்களும் நல்வழியில் செல்வார்கள்.


525. நாட்டின் பொருளாதாரம் பற்றித் தெரிய வேண்டும்.நோய் நாடி நோயின் குணம் நாடி.எந்தப் பிரச்சனையையும் தீர ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்

No comments :

Post a Comment