Sunday, July 8, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 481 TO 495

481. நான் ஒரு பெரிய அறிவுஜீவியும் இல்லை முட்டாளும் இல்லை. நான் ஒரு சாதாரணமானவன். எனக்குத் தெரிந்த நேர்மையான வழியில் வாழ்க்கை வாழ்கிறேன்

482. வருமானத்தை அதிகமாக்கி செலவை குறைத்தால் சந்தோஷமாக வாழலாம். வரவை கூட்டாமல் செலவை அதிகம் ஆக்கினால் கஷ்டம் வரும். முடிவு அவரவர் கையில்


483. 2017-18 ஆண்டில் ஒரு இந்திய பிரஜையின் சராசரி ஆண்டு வருமானம் ரூ1,12,000/ அல்லது மாதம் ரூ10,000/.இதற்குள் ஒரு குடும்பம் வாழ முடியுமா?


484. நாம் வளர்த்த செடி மரமாகி நமக்கு நிழலும் மற்ற பலன்களை அள்ளி அள்ளித் தருகின்றன. மனிதர்கள் அப்படியில்லை. அவர்கள் ஆறறிவு படைத்தவர்கள்.


485. ஒரு பெரிய கல்லை உடைக்க சுத்தியால் பலமுறை அடிக்க வேண்டும்.எந்த அடியில் உடைந்தது என்று சொல்ல முடியாது.வாழ்க்கையில் பொறுமை முக்கியம்.


486. பறவை கிளையில் அமரும்போது கிளை வலுவாக இருக்கிறதா என்று பார்ப்பதில்லை. திறமைசாலியும் முயற்சியில் வெற்றி பெறுவோமா என்று யோசிப்பதில்லை


487. உண்மையில் ஒரு திரைப்படத்தை உருவாக்குபவர் அதன் இயக்குநர். அவர் படும் கஷ்டங்களுக்கு அளவில்லை. ஆனால் அவரை பலரும் நினைப்பது கிடையாது.


488. ஒரு சாதாரண கல், சிலை ஆவதற்கு உளியிடம் எவ்வளவு அடி வாங்குகிறது. அதைப் போல, வாழ்க்கையில் நல்ல மனிதன் ஆக, சோதனைகளை சந்திக்க வேண்டும்.


489. அரசியலை பற்றி மூச்சுவிடாமல் முழங்குகிறார்களே, அப்படி என்ன மாற்றம் வந்து இந்த திருநாடு முன்னேறப் போகிறது மக்களின் மனோபாவம் மாறாமல்?


490. மதம், ஜாதி ஒற்றுமையைப் பற்றி எழுதாமல் வேற்றுமையைப் பற்றி எழுத எழுத மக்களிடையே துவேஷம் தான் அதிகமாகும் என்பது என் தாழ்மையான கருத்து


491. இறைவனை ஏமாற்றினால் அதிக விலை கொடுக்கும் படி இருக்கும். நடப்பது ஒரு காரணத்திற்காக நடக்கிறது. அவனல்லால் இப்புவி மீதே அணுவும் அசையாதே


492. பெயர் வைப்பதில்ஆணுக்கு அன் விகுதி,பெண்ணுக்கு இ விகுதி,கடவுள் பெயர்,சுருக்கமாக, கேட்பதற்கு இனிமையாக இருக்கவேண்டும் என்பது சாஸ்திரம்

493. புத்தகம் படிப்பதில் உள்ள ஆர்வம் மிகக் குறைந்து விட்டது. சிறிய கட்டுரையைக் கூட  படிப்பதில்லை. இது விஞ்ஞான வளர்ச்சியால் வந்த கோளாறு.


494. நாட்டில் நமது தினசரி வாழ்க்கையில் நல்லதும், கெட்டதும் நடக்கின்றன.நல்லதை நாம் பாராட்ட வேண்டும்.கெட்டதை புறக்கணிக்கத் தெரிய வேண்டும்


495. இன்று  நல்ல எண்ணங்களுடன் நல்ல செயல்கள் செய்ய வேண்டும் என்று தினமும் காலையில் உறுதி எடுத்து கொண்டு அதைத் தவறாமல் பின்பற்றவெண்டும்.

No comments :

Post a Comment