Sunday, July 8, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 496 TO 510

496. நாட்டின் பொருளாதாரம் மக்கள் கையில் இருக்கிறது. அரசாங்கத்திடம் இல்லை. அரசாங்கம் மக்களின் கணக்குப் பிள்ளை. குடி உயரக் கோன் உயரும்.

497. மக்களால் மக்களுக்காக தேர்ந்து எடுக்க பட்டது அரசாங்கம்.குறை யாரிடம்?பிறரை குற்றம் கூறுவதற்கு முன்னால் தன்னை பற்றி நினைப்பது நல்லது.  


498. 133 கோடி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது சுலபமில்லை. IAS அதிகாரிகள் தான் இந்த நாட்டை நடத்துகிறார்கள் என்பது பலருக்கு புரியவில்லை

499. ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்காக செயல் படும் ஒரு அமைப்பு.அதில் நடக்கும் நல்லது கெடுதலுக்கு அவர்களே பொறுப்பு.வேறு யாரும் இல்லை.


500. சிக்கனமாக வாழணும். வெளி நாட்டுப் பொருள்களை விலக்கணும். வன்முறையை தவிர்க்கணும். பெண்களை மதிக்கணும், பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும். 


501. மக்கள் நேர்மையாக இருக்க வேண்டும். வரிகளை சரியாக கட்ட வேண்டும். லஞ்சம்,ஊழலுக்கு எப்பவும் ஆதரவு தரக்கூடாது.சட்டத்தை மதிக்க வேண்டும்


502. நாடு எனக்கு என்ன செய்தது என்று கேட்பதற்கு முன், நான் நாட்டிற்கு என்ன செய்தேன் என்று கேட்க வேண்டும். அதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.


503. நாட்டில் நடப்பது எதை பற்றியும் கவலைப் பட்டு பலனில்லை.என்னால் எதுவும் செய்ய முடியாது என்று தெரியும்.நான் என் வேலையைப் பார்க்கிறேன


504. 
நேரில் பார்க்காத,பழகாத, திரையில் தெரியும், ஒப்பனை செய்யப்பட்ட சினிமா நடிகர் மீது எப்படி பிரியம் வருகிறது என்று எனக்கு புரியவில்லை.

505. விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும். ஒருவருடைய வயதுக்குத் தகுந்த எண்ணங்கள் வேண்டும். அந்த எண்ணங்களுக்குத் தகுந்த எழுத்து வேண்டும்.


506. செருப்பு [வாழ்க்கை] காலில் எங்கே கடிக்கிறது என்பது அணிந்திருப்பவனுக்குத்தான் தெரியும். செருப்பைச் சரி செய்ய வேண்டும். கால்களை அல்ல.


507. எல்லோரும் பிறக்கும் போதே மூச்சு விடுகிறோம். யாரும் கற்றுத் தரவில்லை. வாழ்க்கையின் நுணுக்கங்களும் அப்படித்தான். தானே கற்க வேண்டும்.


508. சிக்கனம் வேறு, கஞ்சத்தனம் வேறு. பற்பசையை அளவாக உபயோகிப்பது சிக்கனம்.தீர்ந்து போன பற்பசையில் தண்ணீர் ஊற்றி பல் தேய்ப்பது கஞ்சத்தனம்


509. சிரார்த்ததிற்கு மறுநாள் பரனேஹி தர்ப்பணம் செய்ய வேண்டும்.எந்த சாஸ்திரிகளும் மறுநாள் வந்து செய்வதில்லை.முதல் நாளே செய்து விடுவார்கள்


510. ஆங்கிலம், தமிழ், தத்துவம், இறையறிவு, புத்தகம், இசை, அரசியல், மதம், ஜாதி, சினிமா, பற்றி நல்ல கருத்துக்களை வளர்த்துக் கொள்வது நல்லது

No comments :

Post a Comment