Wednesday, July 4, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 451 TO 465

451. விவாதம் அறிவாளிகள் இடையே நடைபெறுவது. வாக்குவாதம் அறிவு இல்லாதவர்கள் இடையே நடைபெறுவது.விவாதம் பலன் தரும்.வாக்குவாதம் விரோதம் வரும்.

452. எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடாது. நிதானமாக இருக்க வேண்டும். எதையும் விலகி நின்று பார்க்கத் தெரிய வேண்டும். மனம் ஒரு நிலைப் படும்.


453. பிரபலமானவர்களைப் பற்றி எழுதினால் தானும் பிரபலமாகி விடலாம் என்று சிலர் எழுதுகிறார்கள். அது தவறு. சமுதாய முன்னேற்றம் தான் முக்கியம்.

454. ஒரு திரைப்படம் பார்த்த பிறகு, நடிகர்களைப் புகழாமல் கதை, திரைக்கதை, இயக்கிய விதம் பற்றிப் பேசுவது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமாகும்.


455. நாட்டில் வன்முறை, கற்பழிப்பு, ரௌடித்தனம், எல்லாம் அதிகம் காணப் படுகிறது. இதற்குக் காரணம் சினிமா, குடிபழக்கம், சமூக வலைதளம் ஆகியவை.


456. இந்தியக் கலாசாரத்தின் ஆணிவேர் குடும்பம். அதன் முக்கியத்துவம் தற்போது நிராகரிக்கப் படுகிறது.மேல் நாட்டு நாகரீகம் பின் பற்ற படுகிறது


457. வாழ்க்கையின் தரம் வாழ்வதில் உள்ளது. நாம் இறக்கும் வரை கற்கிறோம். வாழ்க்கையை, பிறரிடம் கற்பதோ, பிறருக்கு கற்பிப்பதோ, இயலாத காரியம்.


458. யாரும் அழுக்கான உடைகளை அணிவதில்லை. அதை போல் நம் வாழ்வில் உள்ள அழுக்கை மறக்க வேண்டும். நல்லதை பேச வேண்டும், நல்லதை செய்ய வேண்டும்.


459. சங்கீதம் தெய்வீகம். அது பயிர்களை வளர்க்கிறது. மனிதனின் மன அழுத்தத்தைப் போக்குகிறது. சுகமான சங்கீதத்தை ரசிக்க வேண்டும். அது ஒரு கலை


460. வாழ்க்கை என்பது புரியாத புதிர்.நேற்று சரி என்று பட்டது இன்று தவறாக இருக்கிறது.நாளை எப்படியோ?நன்கு யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.


461. ஒவ்வொரு தடவையும் அவள் சூடான எண்ணையில் பூரியைப் போடும் போது,எண்ணை அவள் கையைச் சுட்டு விடுமோ,என்று மனம் பதை பதைக்கும்.பூரி வேண்டாமே.


462. படிக்காமல், உழைக்காமல், நேர்மையாக சம்பாதிக்காமல், குடும்பத்தைக் காப்பாற்றாமல், நாட்டை, மக்களை, விதியை, இறைவனை திட்டுவது வீண் வேலை.

463. தமிழில் கவிதை எழுதுவது சுலபமல்ல. இலக்கணம் தெரிய வேண்டும். நிறையப் படிக்க வேண்டும். பயிற்சி வேண்டும். கடும் சொல் தவிர்க்க வேண்டும்.


464. காதல்' ஒரு அழகான சொல்.'காசு' அதுவும் ஒரு அழகான சொல்.பலர் ஒன்றை விரும்பி மற்றதைத் தொலைக்கிறார்கள். இரண்டும் முக்கியம்.நிதானம் தேவை


465. பெரும்பாலோர் வாழ்க்கையில் முதல் தடவை சரியான முடிவு எடுக்காமல் கோட்டை விட்டு விட்டு இரண்டாவது சந்தர்பத்திற்குக் காத்திருக்கிறார்கள்


No comments :

Post a Comment