Thursday, July 12, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 556 TO 570

556. மனைவி உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பது போல, நாமும் மனைவிக்கு உண்மையாய் இருக்க வேண்டும். அதுவே மனைவிக்குக் கொடுக்கும் பரிசு

557. கோபம் ஒருவரை சிந்திக்க விடாது. வாழ்வில் எந்தக் காரணத்திற்காகவும் கோபப்படக் கூடாது. மன வேற்றுமைக்கும், பிரிவினைக்கும் இதுவே காரணம்.


558. நேர்மையாக இருப்பவர்களுக்கு சோதனை மேல் சோதனை வரும். அதற்காக அவர் நேர்மையை கை விட்டுவிடக் கூடாது. அந்த நேர்மையே அவரைக் காப்பாற்றும்.


559. நேர்மையாக வாழ்வது கடினம். நேர்மையாக வாழ்ந்து என்ன சாதித்தோம் என்று யாரும் நினைக்கக் கூடாது. நேர்மையாக வாழ்வதே பெரிய சாதனையாகும்.


560. பணம் நாம் வாழ்வதற்கு மிக முக்கியம். ஆனால் பணம் தான் வாழ்க்கை அல்ல. வாழ்வின் அர்த்தமே வேறு. அந்த வாழ்க்கையை ரசிக்கத் தெரிய வேண்டும்


561. ஒருவருக்கு ஒருவர் அன்பாலும், ஆதரவாலும், அரவணைப்பினாலும் ஒற்றுமையாக வாழ வேண்டும். நல்லதை வரவில் வைப்போம், கெட்டதை செலவில் வைப்போம்.


562. பின் ஏன் ஒருவருக்கு ஒருவர் வெறுப்பு, விரோதம், புகைச்சல் என்று எனக்கு விளங்க வில்லை. எல்லா ஜாதிகளிலும் கருப்பு ஆடுகள் இருக்கின்றன.


563. என்னை பொருத்தவரை ஜாதி என்பது உணவு மற்றும் வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்டது. எல்லோருக்கும் மரபு அணுக்கள் ஒன்றுதான். மாற்றமில்லை.


564. பழம் தானாக கனிய வேண்டும்.தடியால் அடித்து அல்ல.ஆன்மீகம் ஒருவருக்கு தானாக வரவேண்டும். சொல்லிக் கொடுத்து அல்ல.இறைவனை உணர்வது ஆன்மீகம்


565. இறைவனைப் பற்றிய ஞானமும் பக்தியும் வரவேண்டும் என்றால், ஆசைகளைத் துறக்க வேண்டும், பிற ஜீவன்கள் மீது குறையாத அன்பு செலுத்த வேண்டும்.


566. ஞானம் என்பது பல ஆன்மீக புத்தகங்களை படிப்பதாலும், ஞானிகள் அறிவுரையை கேட்டு நடப்பதாலும் வருகிறது.பக்தி இறைவனை தியானிப்பதால் வருகிறது


567. இறைவனை அடைவது தான் ஆன்மீகத்தின் ஒரே குறிக்கோள். அது சுலபமல்ல. அதற்கு இறைவனைப் பற்றிய ஞானமும், இறைவனிடம் மிகுந்த பக்தியும் வேண்டும்


568. ஆன்மீகம் என்பது கதைப் புத்தகங்களைப் படித்து விட்டு அதை மற்றவர்களுக்குச் சொல்வது அல்ல. அது உணர்வு பூர்வமாக இறைவனை பற்றி சிந்திப்பது


569. ஆன்மீகம் சம்பந்தமாக கடைகளில் நிறைய புத்தகங்கள் விற்க படுகின்றன. கற்று தெளிந்தவரை கலந்து ஆலோசித்து நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும்


570. இளம் வயதில் தன்னுடைய கடமைகளைச் செய்ய வேண்டும்.ஆன்மீகம் வயதான பிறகு.அதை அடைய நிறைய ஆன்மீகப் புத்தகங்களைப் படித்துத் தெளிய வேண்டும்.

No comments :

Post a Comment