Thursday, November 15, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 901 TO 915

901. PETER ENGLAND, LOUIS PHILIPPE என்றெல்லாம் துணிகளுக்குப் பெயர் வைக்கிறார்கள். "வேல் முருகன்" என்று பெயர் வைப்பதில்லையே.என்ன காரணம்?

902. நமது நாட்டு மக்கள் வழிமுறை தவறா அல்லது நாட்டை ஆட்சி செய்பவர்கள் வழிமுறை தவறா என்று அறுதியிட்டுக் கூறமுடியாத நிலையில் இருக்கிறோம்.

903. அரசியல்வாதி லஞ்சம் கொடுக்கிறார். பொதுமக்கள் அதை வாங்கிக் கொள்கின்றனர். தவறு யார் மீது? லஞ்சம் கொடுத்தது தவறா? அதை வாங்கியது தவறா?

904. ஏன் வண்டு மலரைத் தேடிப் போகிறது? மலர் வண்டை கவர்ந்து இழுக்கிறது. ஏன் மலர் வண்டை கவர்ந்து இழுக்கிறது? அது இயற்கையின் திருவிளையாடல்.

905. பெண்கள் தங்கள் வீட்டை துடைப்பத்தால் கூட்டிய பிறகு குப்பையை மூலையில் குவித்தால், பண்டிகை நாளில் மாத விலக்கு வரும் என்பது நம்பிக்கை.

906. ஒருவர் இளமையில் தனது வாழ்க்கைத் துணையை நேசிப்பது வேறு. அது காதல் எனப்படும். அதுவே முதுமையில் நேசிப்பது வேறு. அது கரிசனம் எனப்படும்.

907. "கர்வால்" என்று ஒரு மருந்து.விலை ரூ 5.ஐந்து சொட்டு இருக்கும்.கொதிக்கும் நீரில் சொட்டு சொட்டாக விட்டு ஆவி பிடித்தால் சளி குணமாகும்.

908. "பசி வந்தால் பத்தும் பறந்து விடும்" என்று சொல்வார்கள்."சளி பிடித்தால் உலகமே வெறுத்து விடும்" என்று சொல்கிறேன்.உங்கள் அனுபவம் என்ன?

909. நமது நாட்டில் நடக்கும் சீர்கேடுகளுக்கு சினிமா தான் காரணம் என்று கூறினால், அதைப் புறக்கணிக்க யாரும் முன்வராதது ஒரு பரிதாபமான விஷயம்

910. தெரியாமல் கேட்கிறேன். தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தாமல் எப்படி ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிக்க போகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.

911. நேர்மையான திறமைசாலி அரசியல் கட்சி ஆரம்பித்தால் மற்றவர் அவரைக் கெடுத்து விடுவர்.அவரே ஒரு கட்சியில் இருந்தால் கட்சி கெடுத்து விடும்.

912. ஒரு சிற்பியின் திறமையில் சிலை உருவாகிறது.ஒரு இயக்குனரின் திறமையில் நடிகர் உருவாகிறார்.யாரை பாராட்டுவது என்று பலருக்கு தெரிவதில்லை.

913. "அரவிந்தா ஸமேதா" தெலுங்கு திரைப்படம் பார்த்தோம். வன்முறை கூடாது என்று உபதேசம் செய்து விட்டு வன்முறையை மிக அதிகமாகக் காட்டும் படம்.

914. ஆளைக் கண்டு மயங்காதே ஊது காமாலை என்பார்கள். அழகுக்கும் நடிப்புக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. நமது மக்கள் அழகில் மயங்குகிறார்கள்.

915. திருமண நாள், பிறந்த நாள், திதி நாள் இவற்றை தவிர மற்ற நாட்களில் நானோ, என் மனைவியோ, குழந்தைகளோ கோயிலுக்கு செல்லும் பழக்கம் கிடையாது.

No comments :

Post a Comment