Friday, May 18, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 331 TO 345

331. இன்னொருவர் மீது கல்லை ஏறிய வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கி நிற்கிறது. அவருக்கு மாலை போட வேண்டும் என்கிற எண்ணம் எப்போது வருமோ?

332. பிறருடைய வளர்ச்சியைப் பார்த்து நாமும் வளர முயற்சி செய்ய வேண்டும். அதைவிட்டு பொறாமை பட்டால் நமக்கு வீணாக குடல் வியாதி தான் வரும்.

333. புரட்டாசி மாதம் ப்ரதமை முதல் அமாவாசை வரை  மஹாளய பக்ஷம். தகப்பனார் இல்லாதவர்கள் அவரையும் மற்ற பித்ருக்களையும் தினமும் வணங்க வேண்டும்.

334. திருநெல்வேலி பக்கம் மோர்க் குழம்பு வேறு விதமாக சமைப்பார்கள். அதன் சுவை பிரமாதமாக இருக்கும். நீங்கள் அதை ருசித்து இருக்கிறீர்களா?

335. எந்த மதத்தையும் யாரும் பாதுகாக்கத் தேவையே இல்லை. அதுவே தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்.மற்ற மதத்தினரை தூண்டாமல் இருந்தால் மிக நல்லது.

336. நம் நாட்டில் ஹிந்துக்கள், கிருஸ்தவர்கள், முஸ்லிம்கள் வாழ்வதைப் போல மற்ற நாடுகளிலும் வாழ்கிறார்கள். அங்கு மதப் பிரச்சினை இருக்கிறதா?

337. மதத் துவேஷிகள், சாதி வெறியர்கள் நூத்துக்கு இரண்டு பேர். இவர்களால் இந்த சமூகத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவே முடியாது

338. பிராமண சமூகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல விஷயங்கள் நிறைய உள்ளன. ஆதலால் அவர்களை வெறுக்காமல் நல்ல உறவை வளர்க்க வேண்டும்.

339. நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளும் பழக்கம் வேண்டும். நமது பலம் மற்றும் பலவீனத்தை நாம் நன்கு அறிந்து வைத்து இருக்க வேண்டும்.

340. தினமும் உணவு உண்ண சாதத்தை தட்டில் இட்ட உடன் இறைவனை வணங்கி நன்றி சொல்லி பிறகு உண்ண வேண்டும். எவ்வளவு பேர் இதைப் பின்பற்றுகிறார்கள்?

341. வயதான ஒரு தம்பதி கடமைகளை முடித்த பின் இவ்வுலகில் தாங்கள் இருவர் மட்டுமே இருப்பதாக நினைத்து சந்தோஷமாக வாழ்ந்தால் அது ஒரு சொர்க்கம்.

342. தாய், தந்தை, ஆசிரியர், மாமனார், மாமியார், அண்ணா, மன்னி, பெரியோர் இவர்கள் அருளுவது ஆசீர்வாதம். மற்றவர் தருவது வாழ்த்துகள் மட்டுமே.

343. மருந்து மாத்திரைகளை தண்ணீருடன் தான் சாப்பிட வேண்டும். பால், டீ, காப்பி போன்ற பானங்களில் உள்ள ரசாயனப் பொருட்கள் மருந்தை பாதிக்கும்.

344. யாரும் நம்மை தவறாக பேசும்படி வைத்து கொள்ளக்கூடாது. அப்படி பேசி விட்டால் உடனே உயிரை விட்டு விட வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.

345. கர்நாடக இசை, தமிழ் திரைப்பட இசை, ஹிந்தி திரைப்பட இசை இவைகளில் எதையுமே ரசிக்க தெரியவில்லை என்றால் வாழ்க்கை வாழ்வதின் அர்த்தம் என்ன?



No comments :

Post a Comment