Tuesday, May 15, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 316 TO 330

316. நான் சிக்கன பேர்வழி. கணக்கு எழுதும் போது.வரவுக்கும் செலவுக்கும் மீதிக்கும் ஒரு ரூபாய் வித்யாசம் வந்தாலும் மண்டையை உடைத்து கொள்வேன்.

317. நான் ஒரு சந்தேகப் பேர்வழி. அலுவலக அதிகாரியைப் போல தவறு கண்டு பிடிப்பதில் குறியாக இருப்பேன். அதனால் எனக்கு நெருங்கியவர்கள் குறைவு.

318. நான் டிசிப்ளின் பேர்வழி. வைத்த பொருள் வைத்த இடத்தில் தவறாமல் இருக்க வேண்டும். வேறு இடத்தில் இருந்தால் எனக்கு துளியும் பிடிக்காது.

319. நான் ஜாக்கிரதை பேர்வழி. எதையும் யோசித்து செய்வேன். சிலர் வாழ்க்கை அனுபவிக்க என்பார்கள். அவர்களைப் பார்த்து பொறாமையாக இருக்கிறது.

320. நான் கடிகார பேர்வழி. நேரம் தவறாமை மிக முக்கியம். ஒவ்வொரு வேலையும் நேரப் பிரகாரம் செய்ய வேண்டும். இல்லாவிடில் மண்டை வெடித்துவிடும்.

321. நான் பிடிவாதப் பேர்வழி. செலவு செய்வதிலும், முதலீடு செய்வதிலும் திட்டமிட்ட இலக்கை எப்படியும் அடைந்தே தீருவது என்கிற பிடிவாதம் உண்டு

322. நான் மரியாதைப் பேர்வழி. பெரியவர்களுக்கு மரியாதை காட்ட வேண்டும். கால் மேல் கால் போடுவது, அலட்சியமாகப் பேசுவது எனக்குப் பிடிக்காது.

323. நான் திட்டமிடும் பேர்வழி. தினசரி, வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர மேலும் வாழ்க்கை திட்டங்கள் போட்டு சரி பார்ப்பது எனது நம்பிக்கை.

324. நான் ஒரு எளிமை பேர்வழி. படாடோபமான உடை, வாய்ச் சவடால் பேச்சு, கெட்ட வார்த்தைகளை உரக்க பேசுவது போன்ற நற்குணங்கள் என்னிடம் கிடையாது.

325. நான் ஒரு சமாதானப் பேர்வழி. சண்டை போடுவது எனக்குப் பிடிக்காது. என்மீது தவறு இருந்தால் ஒரு மணி நேரத்தில் சமாதானம் செய்து விடுவேன்.

326. நான் ஒரு சாந்தப் பேர்வழி. கோபமே வராது எனக்கு. சத்தம் போட்டு கத்துவது இல்லை. அவர்களுக்கு அறிவில்லை என்று நினைத்து விட்டு விடுவேன்.

327. நான் ஒரு கூண்டுப் பேர்வழி. எவ்வளவு நாட்கள் ஆனாலும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டின் உள்ளேயே அடைந்து கிடக்க என்னால் முடியும்

328. நான் அதிசய பேர்வழி. ஐபோன், டெபிட் கார்ட், க்ரெடிட் கார்ட், ஏசி கார், ரயில், விமான பயணம் விரும்பாத, செலவு செய்யாத ஜீவராசி நான் தான்.

329. நான் ஒரு உல்லாசப் பேர்வழி. எனது சக்திக்குள், வரவுக்குள் எவ்வளவு சந்தோஷமாக வாழ முடியுமோ அந்த அளவு சந்தோஷமாக இருக்க முயற்சிப்பேன்.

330. நான் சங்கீதப் பேர்வழி. காலையில் ஒரு பாட்டு மனதில் தோன்றி விட்டால் நாள் முழுக்க அதே பாடலை எனது வாய் முணுமுணுத்துக் கொண்டிருக்கும்.


3

No comments :

Post a Comment