Wednesday, September 6, 2017

நம் நாடு முன்னேற என்ன வழி ?


1. நாடு எனக்கு என்ன செய்தது என்று கேட்பதற்கு முன், நான் நாட்டிற்கு என்ன செய்தேன் என்று கேட்க வேண்டும்.

2. மக்களால் மக்களுக்காக தேர்ந்து எடுக்கப் பட்டது அரசாங்கம். குறை யாரிடம்? பிறரைக் குற்றம் கூறுவதற்கு முன்னால் தன்னைப் பற்றி நினைப்பது நல்லது.

3. உங்கள் ஒட்டு தான் நாட்டின் விதியைத் தீர்மானிக்கப் போகிறது. நன்றாக யோசித்து முடிவு செய்யுங்கள். பின்னர் வருந்துவதில் அர்த்தமில்லை.

4. நன்கு படித்த, நேர்மையான, பண்புள்ள, அனுபவப்பட்ட புத்திசாலிகள், அதிகாரத்தில் இருந்தால் தான் நாடும் மக்களும் நல்வழியில் செல்வார்கள்.

5. நாம் பேசுவதில் வல்லவர்கள். அதில் மயங்குவதிலும் வல்லவர்கள். தேர்தலில் வேட்பாளர் பேச்சில் மயங்காதீர்கள். அவர் வாழ்க்கைத் தரத்தை பாருங்கள்

6. உண்மையிலேயே நீங்கள் நாடு முன்னேற வேண்டும் என்று விரும்பினால் கட்சி சார்பாக ஓட்டுப் போடக் கூடாது. வேட்பாளர் நேர்மை, திறமை முக்கியம்

7. ஒரு கட்சியின் தலைவரைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை. அவருக்குக் கீழே இருப்பவர்கள் தரும் நெருக்கடி அவர் எடுக்கும் முடிவுகளுக்கு காரணம்.

8. தேர்தலில் நல்லவர்களும், கெட்டவர்களும் வேட்பாளராக நிற்கிறார்கள். கெட்டவர்களுக்கு ஒட்டுப் போடாதீர்கள். உங்களுக்கு ஏன் அந்த வீண் பாவம்

9. தேன் எடுத்தவன் புறம் கையை நக்காமல் இருக்கமாட்டான். தேர்தலில் சொந்தப் பணத்தை செலவு செய்தவன் அதை மீட்காமல் விட மாட்டான்.

10. ஒட்டுப் போடுவதற்கு பணம் கொடுப்பது சரியா அல்லது பணம் கொடுத்தவனுக்கு ஒட்டுப் போடுவது சரியா. இது நம் நாட்டில் தீர்க்க முடியாத பிரச்சனை

11. ஒரு வேட்பாளர் ஒட்டு போடுவதற்குப் பணம் கொடுத்தால் அவர் நல்லவர் இல்லை. வெற்றிக்குப் பின் உங்களிடம் இருந்தே பல மடங்கு பணம் வாங்கி விடுவார்

12. ஒரு வேட்பாளர் ரூ100 செலவு செய்தால் ரூ50 கணக்குக் காட்டுவார். மீதி கருப்பு பணம். தேர்தலுக்குப் பின் அதை விடப் பல மடங்கு வாங்கி விடுவார்.

13. மக்கள் நேர்மையாக இருக்க வேண்டும். வரிகளை சரியாக கட்ட வேண்டும். லஞ்சம்,ஊழலுக்கு எப்பவும் ஆதரவு தரக்கூடாது. சட்டத்தை மதிக்க வேண்டும். சிக்கனமாக வாழணும். 

14. பெண்கள் ஆபரணங்களை விலக்கணும். வெளி நாட்டுப் பொருள்களை தவிர்க்கணும். வன்முறையை ஒழிக்கணும்.. பெண்களை மதிக்கணும், பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும். 


முடியுமா உங்களால்?


No comments :

Post a Comment