Wednesday, April 4, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 241 TO 255

241. தற்கொலை செய்து கொள்ள ஒருவருக்கு நூறு காரணங்கள் இருக்கலாம் ஆனால் உயிர் வாழ ஒரு காரணம் போதும். வாழ்வில் வெற்றி உங்களைத் தேடி வரும்.

242. இருட்டு, மூச்சில்லை, கண்தெரியாது, பேச/நகர முடியாது, 9 மாதங்கள் ஆகும். அந்தச் சிறு குழந்தை படும் கஷ்டத்தை விடவா உங்கள் கஷ்டம்?யோசியுங்கள்.

243. தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சகோதரன், சகோதரி, நண்பர், தெரிந்தவர், தெரியாதவர் தன்னை விட வயதானவராக இருந்தால் எழுந்து மரியாதை செய்வது உண்டா?

244. தாய், மனைவி, சகோதரி, மகள் இவர்களைத் தவிர மற்ற பெண்கள் ஆபத்தில் இருக்கும் பொழுது அவர்களுக்கு உதவி செய்ய யாரும் முன் வருவதில்லை ஏன்?

245. நானே ராஜா, நானே மந்திரி, நானே சேவகன். என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்கிறேன். அதை எப்படி வாழ்வதென்று எனக்கு நன்கு தெரியும். ஏன் கவலை?

246. நம் தவறை பிறர் சுட்டி காட்டும் போது உடனே ஒப்புக்கொண்டால், பிறர் தவறை எப்போதும் சுட்டி காட்டாமல் இருந்தால், நமக்கு கோபம் வரவே வராது.

247. ஓய்வுக்குப் பிறகு நமது வருமானம் குறையும். செலவு அதிகமாகும். அதற்கு இப்போதே மாதாமாதம் குறுப்பிட்ட தொகையை சேமித்தால் கஷ்டம் தெரியாது

248. மனைவியின் பெற்றோரை சேர்த்து தாய் தந்தையர் நால்வர். அறுபது வயதிற்குள் அவர்களுக்கு ஆஸ்பத்திரி செலவு காப்பீடு செய்தால் கஷ்டம் தெரியாது

249. இப்போது கல்விச் செலவு மிகவும் அதிகமாக இருக்கிறது. மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை கல்விச் செலவுக்காக ஓதுக்கினால் கஷ்டம் தெரியாது.

250. பிறக்கும் போது சிசு தானே மூச்சு விடுகிறது, வளர்கிறது, அறிவாளி ஆகிறது. பெற்றதற்கு நீ உதவி செய்கிறாய்.பின் எங்கிருந்து வந்தது உரிமை?

251. அமாவாசை,திதி நாளில், மனக் கட்டுப்பாடு முக்கியம்.பித்ருக்கள் காரியம் முக்கியம். அவர்களை பூஜிப்பது முக்கியம்.மற்றவை முக்கியம் இல்லை.

252. ஆறுவது சினம், கூறுவது தமிழ், அறியாத சிறுவனா நீ? மாறுவது மனம், சேருவது இனம், தெரியாத மனிதனா நீ? இறைவனடி நாடு,பேரின்பம் தேடுவாய் நீ.

253. பழகப் பழக பாலும் புளிக்கும் என்ற கருத்தில் ஆண் பெண் உறவில் சுதந்திரம் இருந்தால் கொலை, கற்பழிப்புக் குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டா?

254. அரசியலைப் பற்றி விழுந்து விழுந்து எழுதுகிறார்களே,  "காலுக்கு ஆகாத செருப்பை கழற்றி எறியனும்" என்ற நமது பழமொழி யாருக்குமே தெரியாதா?

255. மேலை நாகரீகத்தைப் பின் பற்றி உணவு, உடை, இருப்பிடம் எல்லாவற்றிலும் மாறி விட்டோம். ஆண், பெண் உறவில் மட்டும் ஏன் இன்னும் மாறவில்லை?



No comments :

Post a Comment