Wednesday, December 18, 2019

சிரிப்பு வெடிகள் - 3

1) "நம்ம டீச்சருக்கு என்ன ஆச்சு ?"

"ஏன் கேக்கறே"

"திருக்குறளை போர்டுலே எழுதிட்டு, அவங்களே இதை எழுதினது யார்'னு கேக்கறாங்க !!"

**************

2 ) நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு இருக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கறீங்க..?

சும்மா இருங்க சார்.., எக்ஸ்யாம்-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே இருக்கான்..!!!

*********************

3) உன் பேரு என்ன..?

" சௌமியா "

உங்க வீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..?

தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க., பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.

*****************

4) உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?

சுவிஸ்சர்லாந்து..

எங்கே ஸ்பெலிஂக் சொல்லுங்க..

ஐயையோ.. அப்படின்னா " கோவா "

*****************

5) ( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா வாங்க கடைக்குச் போறான். )

கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..

வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பீட்ஸா வாங்க  அனுப்புவாங்க...!?? அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்புனா.

****************

6) நடிகர்: இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு மக்களுக்கு பொதுசேவை பண்ணலாம்னு இருக்கேன்..

நிருபர் : நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே அது மக்களுக்கு பண்ற பொதுசேவை தானே.

******************

7) டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க மாத்திரை..

மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை கொடுக்கணும் டாக்டர்..

டாக்டர்: இது அவருக்கில்லை... உங்களுக்கு..

******************

8. ஒரு கணவனும் அவர் மனைவியும் ஹோட்டலில் ஏழாவது மாடியில் அறை எடுத்துத் தங்கினர். சிறிது நேரத்தில் கணவன் ரிஸப்ஷனுக்குப் போன் செய்தார்.

ரிசப்ஷன்: வணக்கம் சார், என்ன வேணும்?

கணவர்: எனக்கும் என் மனைவிக்கும் பயங்கர சண்டை சார். அவ ஜன்னல் வழியாக வெளியே குதித்து விடுவேன் என்று என்னை பயமுறுத்துகிறாள் சார்.

ரிசப்ஷன்: சார் அது உங்க சொந்த விஷயம், நான் என்ன பண்ண முடியும் சார்?

கணவர்: முட்டாள், ஜன்னலைத் திறக்க வரவில்லை, அதுதான் போன் பண்ணினேன். சீக்கிரம் சரி பண்ணுங்க.


No comments :

Post a Comment