Sunday, April 14, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1246 TO 1260

1246. நாடகமே இந்த உலகம், நாம் ஆடுவதோ பொம்மலாட்டம் என்று சொல்பவர்களை யாரும் நம்ப வேண்டாம். இங்கு எல்லோரும் கூத்தாடுபவர்களாக பிறப்பதில்லை.

1247. கண்கெட்ட பிறகும் சூரிய நமஸ்காரம் செய்யலாம். தவறுகள் செய்த பிறகும் ஒருவர் திருந்த முடியும். உணர்வுகள் பார்வைகளுக்கு அப்பாற்பட்டது.

1248. காரத் தன்மையையும் அமிலத் தன்மையையும் 1லிருந்து 14 வரை அளப்பது PH FACTOR எனப்படும்.7நடுநிலை. அதற்கு கீழ் அமிலம். அதற்கு மேல் காரம்.


1249. நம் உடலில் காரம், அமிலம் இரண்டில் எது கூடினாலும் ஆபத்து. எல்லாப் பொருள்களிலும் இரண்டும் இருக்கிறது. இரண்டையும் சமமாக உண்ண வேண்டும்


1250. சில வியாதிகளுக்கு சித்தா வைத்தியம்,சில வியாதிகளுக்கு ஆயுர்வேத வைத்தியம், சீரியஸ் வியாதிகளுக்கு ஆங்கில வைத்தியம். இது என்னுடைய வழி.


1251. "ஷிங்கில்ஸ்" என்கிற நோய் கண்ணில் வந்துவிட்டால்,24 மணி நேரத்திற்குள் VALCIVIR என்ற மருந்தை சாப்பிடாவிட்டால், அவருடைய கதி அதோகதிதான்


1252.அன்டிபயாடிக் மருந்துகள் அதிகம் சாப்பிடுவதால் குடலில் நல்ல பக்டீரியாக்களை கெட்ட பக்டீரியாக்கள் அழித்து பலவித குடல் நோய்கள் வருகிறது.


1253. அன்டிபயாடிக் மருந்துகள் அதிகம் சாப்பிடுவதால்  உடலில் அந்த மருந்துக்கு எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது. அதனால் வியாதி குணம் அடைவதில்லை.


1254. அன்டிபயாடிக் மருந்துகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நல்ல பக்டீரியாக்களை அதிகரிக்க ப்ரோபயாடிக் மருந்துகள் சாப்பிடுவது நல்லது.


1255. வயதானவர்கள் இரவு உறங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்,அதாவது இரவு ஏழு மணிக்கு முன்,தங்களுடைய இரவு உணவை முடித்து கொள்வது நல்லது


1256. 
நம்ம கடிகாரத்திலேயே நம்மால் நிமிடம் காட்டும் முள்ளை தான் திருப்ப முடியும்.மற்ற இரண்டு முட்களையும் திருப்ப முடியாது.என்னே நம் திறமை!

1257. வீட்டின் வாசல் படியில் மாவிலையை சொருகினால் விசேஷம், யாரும் வரலாம். வேப்பிலையை சொருகினால் கஷ்டம், யாரும் வரக்கூடாது. சிறந்த பண்பாடு


1258. பண்டிகை நாள், பிறந்த நாள், திருமண நாள், சிரார்த்த நாள் ஆகிய நாட்களில் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து இருப்பது சரியல்ல


1259. அன்பு,பாசம்,காதல், அக்கறை,மரியாதை இவை எல்லாம் இருவழிப் பாதை.ஒருவழிப் பாதையல்ல.பலர் இதைப் புரிந்து கொள்வதில்லை.மன வருத்தம் வருகிறது


1260. 
துரோகிகளிடம் கோபம் இருக்காது. கோபப்படுபவர்களிடம் "துரோகம்" நிச்சயமாக இருக்காது. உங்களிடம் கோபப்படுபவர்களையும் கொஞ்சம் நேசியுங்கள்.



No comments :

Post a Comment