Thursday, April 4, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1186 TO 1200

1186. ஒருவருடன் உரையாடும் போது என் மனதில் தோன்றும் உண்மையான எண்ணங்களைக் கூறினால் அவர் மனம் வருத்தப்ப்டுமே என்று கூறாமல் விட்டு விடுவேன்.

1187. தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கிறோம். பறவைகள், வீட்டு மிருகங்கள் என்ன செய்யும்?வீட்டு வாசலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வையுங்கள்.


1188. இப்போது எல்லா விருந்தாளிகளும், அவர்களே ஒலாவை ஏற்பாடு செய்து கொண்டு, அவர்களே லக்கேஜை தூக்கிக்கொண்டு, அவர்களே வண்டி ஏறவேண்டியதுதான்.


1189. எண்ணம் நன்றாக இருந்து செயல் தவறாக இருந்தால் தவறில்லை. எண்ணம் தவறாக இருந்து செயல் நன்றாக இருந்தால் தவறு. எண்ணம் மிகவும் முக்கியம்.


1190. 
வயதாக, வயதாக மனம் அமைதியாக இருக்க வேண்டும். மனதை பாதிக்கும் விஷயங்களில் கவனம் செலுத்தக்கூடாது. கெட்ட நினைவுகள் தூக்கத்தை கெடுக்கும்.

1191. கிராமங்களில் கொண்டக் கடலையை வேகவைத்து ப்ளாஸ்டிக் பையில் வைத்துக் கொண்டு பேருந்தில் பயணம் செய்யும் போது சாப்பிடுவார்கள். நகரத்தில்?


1192. அதிக அளவு கணனி மற்றும் கைபேசி உபயோகிப்பதால் கண்ணீர் சுரப்பிகள் பாதிக்கப்பட்டு கண்கள் காய்ந்து போகிறது. பலவித கண் நோய்கள் வருகிறது.


1193. 
கார் பழுதானால் காலம் நின்றுவிட்டது. ஏஸி பழுதானால் எல்லாமே முடிந்தது. வாஷிங் மெஷின் பழுதானால் உயிரே போய்விட்டது. என்ன வாழ்க்கை இது?

1194. 
நாம் ஒரு வீட்டிற்கு விருந்தாளியாக போகும்போது சந்தோஷமாக இருக்கிறது. நம் வீட்டிற்கு யாராவது விருந்தாளி வந்தால் சந்தோஷமாக இருக்கிறதா?

1195. இப்போது பெண்கள் அதிகம் வேலைக்குப் போவதால் அவர்கள் திருமணம் தாமதமாகிறது. அதனால், பையன்கள் திருமணமும் பெண் கிடைக்காமல் தாமதமாகிறது.


1196. 
பெண்கள் திருமணம் தாமதமானால் அவர்கள் குழந்தைகள் டவுன்ஸ் ஸின்ட்ரோம் என்ற மூளை குறைபாடு நோய்க்கு ஆளாகும் என்பது பலருக்குத் தெரியவில்லை.

1197. தினம் அலுவலகம் சென்று, வேலை செய்து, சம்பாதித்து, குடும்பத்தை காப்பாற்றுவது சந்தோஷமா அல்லது ஒழுங்கான ஓய்வு பெற்ற வாழ்க்கை சந்தோஷமா?


1198. கற்பனை நிஜத்தில் இருந்து மிகவும் மாறுபட்டது. கற்பனையில் பிரமாதமாகத் தெரியும் விஷயம் நிஜத்தில் சாதாரணமாக இருக்கும். உண்மை கசக்கும்.


1199. ஒரு பழமொழி உண்டு. காக்கா பறக்கும் போதே தெரியும், இவ்வளவு உயரம் தான் பறக்கும் என்று. காக்கா ஒருபோதும் பருந்தைப் போல பறக்க முடியாது.


1200. தமிழ் மக்கள் ஹிந்தி கற்கக் கூடாது என்ற எண்ணத்தை விட, அகில இந்தியக் கட்சிகள் தமிழ் நாட்டில் காலடி வைக்கக் கூடாது என்பது குறிக்கோள்.


No comments :

Post a Comment