Friday, August 11, 2017

*படிச்சுட்டு சிரிப்பீங்களா?*

This did the rounds about an year back. I laughed to my heart's content after reading it again, perhaps inspired by Crazy Mohan!!

லேடீ : உள்ளே வரலாமா டாக்டர்?

டாக்டர் : வாங்க மேடம்.வந்து உக்காருங்க.என்ன பிரச்னைன்னு சொல்லுங்க.
லேடீ : என் பையனுக்கு ஒடம்பு சரியில்லை!
டாக்டர்: பேர் என்னம்மா?
லேடீ : மஞ்சுளா!
டாக்டர் : என்னது ஆம்பளப் பிள்ளைக்கு மஞ்சுளான்னு பேர் வெச்சிருக்கீங்க?
லேடீ : டாக்டர் அது என் பேரு!
டாக்டர் : பையன் பேர சொல்லுங்கம்மா!
லேடீ : குஞ்சு!
டாக்டர்: மொத்தமே அதுதான் பேரா?
லேடீ : இல்லை. அது நாங்க வீட்டுல கூப்பிடுற பேர்!
டாக்டர் : படுத்தாதீங்கம்மா! பையனுக்கு என்ன?
லேடீ : லூஸ் மோஷன்!
டாக்டர் : எப்படிப் போறான்?
லேடீ : அது, கதவத் தொறந்து வெச்சா போதும் டாக்டர், உடனே ஓடிப்போயிடுவான்!
டாக்டர் : அம்மா நீங்க எப்போவுமே இப்படித்தானா!
லேடீ : இல்ல டாக்டர், சுடிதாரும் போடுவேன். இன்னைக்கு சாரி கட்டிருக்கேன்!
டாக்டர் : கடவுளே...அம்மா, பையன் ஆய்...ஆய்… அது எந்தக் கலர்ல போறான்னு கேட்டேன். புரிஞ்சுதா?
டாக்டர் : சரி... சாப்ட்டானா?
லேடீ : இல்ல டாக்டர் நல்லவேளை அதுக்குள்ளே அவன் கைய கழுவி விட்டுட்டேன்!
டாக்டர் : அம்மா, நான் அதக் கேட்கலம்மா. இப்படி என்னை பாடா படுத்தாதீங்க.உங்க வீட்டுல வேற யாரும் இல்லையா?
லேடீ : இல்லைங்க.என் வீட்டுகாரர் துபாய் போய் அஞ்சு வருஷம் ஆச்சு.
டாக்டர்: என்னம்மா இது..பையனுக்கு ரெண்டு வயசு தான் ஆகுது.அவர் ஊருக்குப் போய் அஞ்சு வருஷம்.எப்படி இது?
லேடீ : ச்சீசீ...அவர் இடைல ரெண்டு நாள் ஊருக்கு வந்திருந்தார்.ஒரு பிரச்னைக்காக.
டாக்டர் : ஓஓஓஓ அப்படியா.! சரி,சொல்லுங்க ...
லேடீ : அது ஒரு சொத்துப் பிரச்னை டாக்டர்.
டாக்டர் : அதுக்கு நீங்க வக்கீல்கிட்டதானே போகணும்? இங்க ஏன் வந்தீங்க? நான் பையனுக்கு என்ன பிரச்னைன்னு கேட்டேன்.!
லேடீ : அதுதான் சொன்னேனே, லூஸ் மோஷன்.
டாக்டர் : ஓ சாரி...
லேடீ : அதான் என் பையன சரி பண்ணிடுவீங்களே,அப்புறம் எதுக்கு சாரி?
டாக்டர் : ஐயோ ஆண்டவா.! பையன் சாப்பிட்டானான்னு கேட்டேன்.
லேடீ : இல்லை டாக்டர், காலைல ரெண்டு தடவை பால்தான் குடிச்சான்.
டாக்டர் : சர்க்கரை எவ்வளவு போட்டீங்க?
லேடீ : தாய்ப்பாலுக்கு எப்படி சர்க்கரை போடறது டாக்டர்?
டாக்டர் : ரெண்டு வயசுப் பையனாச்சே, தாய்ப்பால் இன்னுமா கொடுக்கறீங்க?
லேடீ : ஆமாம் டாக்டர்! அவன் அவங்க அப்பா மாதிரி.
டாக்டர் : என்னம்மா இவ்வளவு பச்சையா....
லேடீ :இல்ல டாக்டர், மஞ்சளாப் போறான்!
டாக்டர்: அம்மா! நீங்க பச்சையா பேசறீங்கன்னு சொல்லவந்தேன்!
லேடீ : டாக்டர், நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க.
அவங்க அப்பா அஞ்சு வயசு வரைக்கும் தாய்ப்பால் தான் குடிச்சாறாம். நான் அதைச் சொன்னேன்.
டாக்டர் : ம்க்கும் எனக்கு இந்த இன்பர்மேஷன் ரொம்பத் தேவை.பையன் ஆவின் பால் ஏதும் குடிச்சானா?
லேடீ : இல்லை டாக்டர் நான் ஆரோக்யாதான் வாங்கறேன்.
டாக்டர் : முருகா! ஏம்மா இப்படி சோதிக்கிறே.! உங்க வீட்டுக்காரர் எப்பம்மா வருவார்?
லேடீ : அவர் இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் வருவார்!
டாக்டர் : ம் ...கொடுத்து வெச்சவன்! சரி, நீங்க என்ன சாப்பிட்டீங்க?
லேடீ : வர்ற வழியில தலப்பாக்கட்டி பிரியாணி!
டாக்டர் : ஏம்மா, பையனுக்கு லூஸ் மோஷன், தாய்ப்பால் வேற கொடுக்குறீங்க,பிரியாணி சாப்பிடலாமா?
லேடீ : ஏன் டாக்டர், புல்லு சாப்பிடுற மாட்டுப் பாலே தர்றோம்! அது மட்டும் பரவாயில்லையா?
டாக்டர் : அம்மா! நான் உங்கள மாதிரி மாட்டையெல்லாம் உட்கார வெச்சு அட்வைஸ் பண்ண முடியாது.சரி,உங்க பையன் எத்தனை தடவை போனான்?
லேடீ : எங்க டாக்டர்?
டாக்டர் : ம்! என் தலை மேல...லூஸ் மோஷன் எத்தனை தடவைம்மா போனான்?
லேடீ : அப்படிக் கேட்கலாம்ல்ல, என்ன டாக்டரோ.நாலுதடவை போனான்.
டாக்டர் : தண்ணி மாதிரி போனானா?
லேடீ : இல்ல டாக்டர், சாம்பார் மாதிரி மஞ்சளா.
டாக்டர் : அம்மா இதுக்குமேல நீங்க பேசவே வேண்டாம்.இந்த மாத்திரைய மூனு வேலை தண்ணீல கரைச்சுக் குடுங்க.அப்புறம் இந்த பவுடர.....
லேடீ : பூசிவிடவா டாக்டர்?
டாக்டர் : ம். ஆமாம்,.அதுக்கு முன்னால, அந்த எடத்துல ஃபேர் அண்ட் லவ்லீ கொஞ்சம் பூசிவிடுங்க.சாவடிக்கறீங்களே.! நான் என்ன மேக் அப் கிளாசாம்மா நடத்துறேன்? சுடுதண்ணீல கரைச்சுக்குடுங்கம்மா. ரெண்டு நாள்ல மோஷன் நிக்கலைன்னா,திரும்ப வந்து எங்கிட்ட காட்டுங்க.
லேடீ : டப்பாவுல போட்டு எடுத்துக்கிட்டு வரவா டாக்டர்?
டாக்டர் : அம்மா அங்காள பரமேஸ்வரி
லேடீ : என் பேர் மஞ்சுளா டாக்டர்.
டாக்டர்:உங்கபையன்குஞ்சக்கொண்டாந்துகாமிங்கனுசொன்னேன்.
புரிஞ்சதா?
லேடீ : மோஷன் பின்னாடிதான போகும்,அப்புறம் ஏன் குஞ்சக் காட்டணும்..?
டாக்டர் : அம்மா, உங்க பையன் பேர் அதுதானே!
லேடீ : இல்ல டாக்டர், அது வீட்டுல கூப்பிடுறது.வெளியில ஹ்ரிதிக் ரோஷன்னு கூப்பிடுவோம்.
டாக்டர் : நீங்க லூஸ் மோஷன்னே கூப்பிடுங்க. எனக்கென்ன வந்துச்சு.!
லேடீ : டாக்டர், சாப்பாடு டயட் பத்தி சொல்லலியே?
டாக்டர் : என்ன எங்கம்மா பேச விட்டே நீ?
டாக்டர் : காலைல மூணு இட்லி, மதியம் ஒரு கப் தயிர் சாதம், ராத்திரி ரெண்டு தோசை அல்லது மூணு இட்லி.
லேடீ : அவன் அவ்வளவு சாப்பிட மாட்டான் டாக்டர்.
டாக்டர் : தாயே, இது உங்களுக்கு சொன்னேன். ரோஷனுக்கு மோஷன் நிக்கற வரைக்கும் நீங்க டயட்ல இருக்கணும்.
லேடீ : அப்போ, நைட்டுக்கு வாங்கிட்டு வந்த பார்சல் பிரியாணிய என்ன செய்ய?
டாக்டர் : உங்க வீட்டுல நாய் இல்லைன்னா, வெளியில நர்ஸ் இருக்கும், அதுக்குக் கொடுத்துடுங்க!
லேடீ : ஏன், அவங்க உங்க செட்டப்பா?
டாக்டர் : கடவுளே, கிளம்பும்மா ப்ளீஸ்.
லேடீ : டாக்டர் பீஸ்?
டாக்டர் : நர்ஸ்கிட்ட கொடுத்துட்டுப் போம்மா.
லேடீ : அப்போ செட்டப்புதான்.நான் வரேன் டாக்டர்.
டாக்டர் : வராதம்மா! தயவு செஞ்சு அப்படியே போய்டு!
(நர்ஸ்.. லைட் லாம் ஆஃப் பண்ணுங்க.. ஹாஸ்பிடல் ஒருவாரம் லீவு. )
கண்ணீர் வருகிறமாதிரி சிரிச்சு ரெம்ப நாளாச்சு !!

No comments :

Post a Comment