Friday, July 24, 2020

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1486 TO 1500

1486. ஸ்ரீராமர் தெய்வம் ஆனால் அவர் மனித இலக்கணங்களுக்கு உட்பட்டவர். ஸ்ரீகிருஷ்ணரும் தெய்வம், ஆனால் அவர் தெய்வ இலக்கணங்களுக்கு உட்பட்டவர்.

1487. நற்சிந்தனைகளை விதைத்து, நல் உறவை உரமிட்டு, மனக் கவலைகளைக் களைந்து, ஆத்ம நட்பை வளர்த்தால், ஆனந்தம் என்னும் பயிரை அறுவடை செய்யலாம்.

1488. கடைசிக் கடலை சொத்தையாக இருந்து விட்டால், அதற்கு முன் உண்ட எல்லாக் கடலைகளின் சுவையும் கசந்து விடுவது போல, நம் சொற்களும் உறவுகளும்.

1489. ஒருவருடைய பிறவி குணத்தை மாற்றவே முடியாது.என் பாட்டி ஒரு பழமொழி சொல்லுவார்கள்."குணம் செத்தால் போகும், ரூபம் சுட்டால் போகும்" என்று.

1490. நமது வாழ்வின் அஸ்திவாரமே நம்பிக்கை தான். ஒருவரது நம்பிக்கை மூடநம்பிக்கை எனில், அவருக்கு இவர் நம்பிக்கை மூடநம்பிக்கையாகத் தெரியும்.

1491. நான் நல்ல நம்பிக்கை, மூட நம்பிக்கை என்று பார்ப்பதில்லை. என்னை பாதிக்கவில்லை என்றால் பின்பற்றுவேன். இல்லையென்றால் பின்பற்ற மாட்டேன்.

1492. ஒருவர் தனது கீழ் உள்ளாடையை நின்றவாறு அணிந்தால் அவர் இளைஞர். உட்கார்ந்து அணிந்தால் அவர் முதியவர். படுத்துக்கொண்டு அணிந்தால் நோயாளி.

1493. குளிக்கும் போது பாதங்களின் மேலும் கீழும் பியூமிஸ் [பமிஸ்] கல்லால் நன்கு தேய்த்து குளித்தால் பாதங்கள் சுத்தமாக நோயின்றி இருக்கும்.

1494. நான் வாழ்க்கையில் நன்கு கற்றுக்கொண்டு தீவீரமாகப் பின்பற்றியது மூன்றே மூன்று வார்த்தைகள் தான்.அவை 1.சிக்கனம் 2.சிக்கனம் 3.சிக்கனம்.

1495. 2017 முதல் இன்று வரை நான் பணத்தைத் தொட்டது கிடையாது. என்னுடைய எல்லா வரவு, செலவுகளையும் என் மகள்/மருமகள் பார்த்துக் கொள்கிறார்கள்.

1496. இந்தியாவில் குற்றவாளி, தான் நிரபராதி என்று நிரூபிக்கவேண்டும். ஆனால் அமெரிக்காவில், குற்றம் சாட்டுபவர் குற்றத்தை நிரூபிக்கவேண்டும்.

1497. அமெரிக்காவில் ஜூரி முறை பின்பற்றப் படுவதால், சட்டமும், மனித நேயமும் கருதப்படுகிறது. இந்தியாவில் சட்டம் மட்டுமே பார்க்கப்படுகிறது.

1498. பிரபலமானவர்களிடம் இருந்து நான் எதிர்பார்ப்பது இரண்டே இரண்டு விஷயங்கள் தான். ஒன்று திறமை. இரண்டு நேர்மையான வாழ்க்கை. உங்களுக்கு எது?

1499. ஒருவர் திங்கட்கிழமை இறந்து விடுகிறார். வியாழன், ஞாயிறு தான் துக்கம் கேட்க வேண்டும் என்பார்கள். என்னால் அதுவரை காத்திருக்க முடியாது.

1500. தயிர் சாதத்தில் மாங்காய், இஞ்சி, பச்சைமிளகாய், மாதுளை, திராட்சை, க்ரேப்ஸ், வெள்ளரி, முந்திரியுடன் கடுகு தாளித்து சாப்பிட்டது உண்டா?


No comments :

Post a Comment