Saturday, July 18, 2020

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1471 TO 1485

1471. ஒவ்வொருவருக்கும் குலதெய்வம் உண்டு.அந்த தெய்வத்தை தினம் தொழ வேண்டும். நேரில் சென்று தரிசித்தால் கஷ்டங்கள் தீரும் என்று சொல்வார்கள்.

1472. தானம் பலனை எதிர்பார்த்துச் செய்வது. தர்மம் ஸ்வபாவமாக பகவத் ப்ரீதியாகச் செய்வது. ஸ்வபாவம் என்றால் இயற்கையான குணம் என்று பொருள்.

1473. சென்னையில் வானிலை ஜனவரி மாதம் மட்டும் சுகம்.மற்ற பதினொரு மாதங்கள் நரகம். ஹைதராபாத்தில் மே மாதம் மட்டும் நரகம். மற்ற பதினொரு மாதங்கள் சுகம்.

1474. மெட்ரோ வாட்டரை குடுவையில் அடைத்து மினரல் வாட்டர் என்று குறைந்த விலையில் விற்கிறார்கள்.நல்ல தரமான கம்பனி குடிநீரை மட்டும் வாங்கணும்.

1475. அப்பளம்,வடாம்,சிப்ஸ் போன்றவற்றை உணவுக்கு பக்கவாத்யமாக சாப்பிட்டால், காய்கறிகளின் அளவு குறைந்து ஆரோக்கியம் கெடும் என்பது என் எண்ணம.

1476. தத்துவங்கள், உபதேசங்கள், அறிவுரைகள் ஆகியவற்றை யாரும் இப்போது விரும்புவது இல்லை. பொழுதுபோக்கு அம்சங்களுக்கே வரவேற்பு மிகவும் அதிகம்.

1477. தலையில் நிறைய முடி உள்ளவர்கள் எப்போதும் லைட் கலர் சீப்பையே உபயோகப் படுததவேண்டும். அப்போது தான் சீப்பில் அழுக்கு நன்றாகத் தெரியும்.

1478. எல்லோரும், குறிப்பாக 60 வயதானவர்கள் இரவு 7 மணிக்குள் அல்லது படுக்கப் போவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் இரவு உணவை சாப்பிடுவது நல்லது.

1479. ஆண்டவன் நமக்குள்ளே ஆத்மான்னு ஒரு காமெரா வச்சி ரெக்கார்ட் பண்றான்.நாம பண்ற அக்கிரமத்துக்கு வட்டியும் முதலுமா ஒருநாள் வாங்கிடுவான்.

1480. ஒரு பொருள், நமக்கு அதிகமாகக் கிடைக்கக் கிடைக்க, அதன் மீது விருப்பம் குறையும் என்பது பொருளாதாரத்தில் ஒரு தியரி. இதில் பணம் சேருமா?

1482. தனது தாய், தந்தையரைக் காப்பாற்றுபவன் கெட்டவானாய் இருந்தாலும் நல்லவனே. அப்படிக் காப்பாற்றாதவன் நல்லவனாய் இருந்தாலும் கெட்டவனே.

1483. வசதியான பெண் கவரிங் நகை அணிந்தால் அது தங்கம் எனக் கருதப்படும். வசதி இல்லாத பெண் தங்க நகை அணிந்தாலும் அது கவரிங் என்றே கருதப்படும்.

1484. வெளிநாட்டு திரைப்படங்களைப் போல, 1.30 மணி நேரத்தில் ஒரு திரைப்படத்தை எடுத்து, செலவை குறைத்து, டிக்கெட்டின் விலையையும் குறைக்கலாமே.

1485. ஒரு சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்ட காலம் உண்டு.கடின உழைப்பாலும்,சிக்கன வாழ்க்கையாலும், நேர்மையான எண்ணங்களாலும் நிம்மதியாய் இருக்கிறேன்.




No comments :

Post a Comment