Friday, July 10, 2020

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1456 TO 1470

1456. உலகில் நடப்பது எல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காக நடக்கிறது என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும். அவனல்லால் இப்புவி மீதே ஓர் அணுவும் அசையாது.

1457. அர்த்தபஞ்சகம், அடையப்படும் பிரம்மம், அடையும் ஜீவன், அடையும் வழி, அடைவதால் ஏற்படும் பயன், அடைவதற்கு உள்ள தடைகள் இவற்றைக் குறிக்கும்.

1458. பெற்றோர் காட்டுவது பாசம். மற்றது ப்ரியம். பாசம் நிரந்தரமானது, எதிர்பார்ப்பு இல்லாதது. ப்ரியம் தற்காலிகமானது, எதிர்பார்ப்பு உள்ளது.

1459. முடி, நகம் வேகமாக வளர்கிறது. வேகத்தைக் குறைக்க முடியாது. அறிவு மெதுவாக வளர்கிறது. வேகத்தைக் கூட்ட முடியாது. நம் உடல் நம் வசமில்லை.

1460. வாழ்வில் பல நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. நமக்கு காலம், பொருள், ஆற்றல் விரயம்.

1461. மனைவி வேலைக்குப் போவதால் கணவனுக்கு பல நன்மைகள் உண்டு. அதில் முக்கியமானது அவன் தன் வேலையை எப்போது வேண்டுமானாலும் ராஜினாமா செய்யலாம்.

1462. நமக்கு காலை வணக்கம் சொல்வது கற்றுத் தரப்படவில்லை. அதனால் வழக்கத்தில் இல்லை. காரியம் ஆகவேண்டும் என்றால் வணக்கம் சொல்லுவது பழக்கம்.

1463. தொலைபேசியில் பேசும்போது யார் குறுக்கிட்டாலும் அவரை ஒதுக்குகிறோம்.நேரில் பேசும்போது தொலைபேசி குறுக்கிட்டால் அதை ஏன் ஒதுக்குவதில்லை?

1464. "என்னை ஏன் என்று கேட்க இங்கே ஒரு ஆள் இல்லை" என்று ஒருவர் இளமையில் கூவினால் அது கர்வம். அதையே அவர் முதுமையில் கூறினால் அது பரிதாபம்.

1465. கொரோநாவால் ஏற்பட்ட மிகப் பெரிய நஷ்டம், நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுடைய இறுதிச் சடங்கிற்குப் போக முடியாமல் தடை செய்து விட்டது.

1466. திரைப்படத்தில் பிரச்சனைகள் முடிந்த பிறகு திருமணம் நடக்கிறது. நிஜ வாழ்க்கையில் திருமணம் நடந்த பிறகுதான் பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன.

1467. கடினம் என்றால் செய்ய முடியாதது எனப் பொருள் கொள்ளக் கூடாது. இன்னும் அதிகமாக முயற்சி செய்ய வேண்டும் எனப் பொருள் கொள்ள வேண்டும்.

1468. ஒரு அழகான சிலையை செய்வதற்கு உளி எவ்வளவு அடி வாங்குகிறது? ஒரு தரமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள நாம் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும்?

1469. வருமானத்தை அதிகமாக்கி செலவைக் குறைத்தால் சேமிப்பு அதிகமாகி சந்தோஷம் வரும். சேமிப்பைக் கூட்டாமல் செலவைக் கூட்டினால் கஷ்டம் வரும்.

1470. ஒரு சோப்பு தீரும்போது மீதி உள்ள சோப்பை தூக்கி ஏறியாமல் அடுத்த சோப்பில் ஒட்டிக் கொள்வது என் பழக்கம்.இது சிக்கனமா அல்லது கஞ்சத்தனமா?






No comments :

Post a Comment