Monday, January 6, 2020

கேள்வி, பதில்

"பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா" என்ற படைப்பு புகழ் பெற்றது. அதில் இடம் பெற்றுள்ள கேள்வி, பதில்களிருந்து சில... :

1. எது மனதுக்கு இதமானது ?
தர்மம்.

2. விஷம் எது ?
பெரியவர்களின் அறிவுரையை அவமதிப்பது.

3. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ?
பற்றுதல்.

4. கள்வர்கள் யார் ?
புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.

5. எதிரி யார்?
சோம்பல்.

6. எல்லோரும் பயப்படுவது எதற்கு ?
இறப்புக்கு.

7. குருடன் யார் ?
ஆசைகள் அதிகம் உள்ளவன்.

8. சூரன் யார் ?
கெட்ட வழியில் மனம் செல்லாமல் அடக்குபவன்.

9. தகுதிக்கு மூலம் எது ?
யாரிடமும் எதையும் கேட்காமல் இருப்பது.

10. எது துக்கம் ?
மன நிறைவு இல்லாமல் இருப்பது.

11. உயர்ந்த வாழ்வு எது?
குற்றங்கள் புரியாமல் வாழ்வது.

12. நிலையில்லாதவை எவை ?
இளமை, செல்வம், ஆயுள்.... ஆகியவை.

13. மற்றவர்களுக்கு சந்தோஷம் தருபவர்கள் யார் ?
நல்லவர்கள்.

14. எது சுகமானது ?
அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.

15. எது இன்பம் தரும்? 
நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.

16. எது மரணத்துக்கு இணையானது ?
அசட்டுத்தனம்.

17. விலை மதிப்பற்றது எது?
காலமறிந்து செய்யும் உதவி.

18. இறக்கும் வரை மனதை உறுத்துவது எது ?
ரகசியமாகச் செய்த பாவம்.

19. எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ?
துஷ்டர்கள், சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள்... ஆகியோர் !

20. சாது என்பவர் யார் ?
ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.

21. உலகத்தை யாரால் வெல்ல முடியும் ?
சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.

22. யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?
எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.

23. செவிடன் யார்?
நல்லதைக் கேட்காதவன்.

24. ஊமை யார்?
இனிமையாகப் பேசத் தெரியாதவன்.

25. நண்பன் யார் ?
தவறான வழியில் போகாமல் தடுப்பவன்.

26. யாரை விபத்துகள் அணுகாது ?
மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்.

No comments :

Post a Comment