Friday, October 6, 2017

TWO WHEELER / மோட்டார் சைக்கிள்

TWO WHEELER
A two-wheeler is designed and licensed only for two people to travel. If they have a small child they can take it. I find four people travel in one vehicle. Minor children drive motorcycles.

It is quite dangerous. They do not think about the consequences. They want to save a few rupees on autos. There will be loss of life of a dear one or they may have to incur lakhs medically.


Why invite trouble? The worst thing is, grown-up children sit on the petrol tank and if their knees arrest the handlebar the entire family can see Lord Vishnu immediately and without any difficulty. 


The Lord will not come in person with SANGU / CHAKRA to tell individually. He will advise only through well-wishers. It is up to you to take it or leave it. 


When you see people travel like that please advise them as a social service. 


மோட்டார் சைக்கிள் 

இரண்டு பேர் பிரயாணம் செய்வதற்காக உருவாக்கப்பட்டது ஒரு மோட்டார் சைக்கிள். ஒரு சின்னக் குழந்தை இருந்தால் அதையும் தூக்கி செல்லலாம். ஆனால் நான் தினமும் 4 அல்லது 5 பேர் ஒரு வண்டியில் செல்வதைப் பார்க்கிறேன். வயதுக்கு வராத சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஒட்டுகிறார்கள்.

அது அவர்கள் இஷ்டம் என்று என்னால் சும்மா இருக்க முடியவில்லை. அந்த மாதிரி பிரயாணம் செய்வது மிகவும் ஆபத்தானது. பாவம் அவர்கள். அதன் விளைவுகள் தெரியாமல் செல்கிறார்கள். கொஞ்சம் பணம் செலவு செய்து ஆட்டோவில் செல்வது நல்லது. 

ஆபத்து எந்த வழியில் வரும் என்று முன் கூட்டி சொல்ல முடியாது. விபத்து ஏற்பட்டால் மருத்துவ செலவுக்கு பல லக்ஷ ரூபாய் செலவு ஆகும். குடும்பம் கஷ்டப்படும். அடி பட்டவர்க்கு வாழ்க்கை வீணாகும். 

ஏன் கஷ்டத்தை விலை கொடுத்து வாங்க வேண்டும்? இதில் இன்னும் மோசம் என்ன வென்றால், வயது வந்த பெரிய குழந்தைகள் பெட்ரோல் டாங்கில் அமர்ந்து செல்வது. அவர்கள் கால்கள் ஹான்டில்  பாரை தடுத்து விட்டால் அதோ கதி தான். 

குடும்பம் முழுவதும் கூண்டோடு எந்த கஷ்டமும் இல்லாமல் மஹா விஷ்ணுவை பார்க்கப் போகலாம். சங்கு சக்ரத்தோடு மகாவிஷ்ணு வந்து உபதேசம் செய்ய மாட்டார். நம் நல விரும்பிகள் மூலம் சொல்லுவார்.அதைக் கேட்பதும் விடுவதும் நம் இஷ்டம்.

இந்த மாதிரி பிரயாணம் செய்பவர்களை பார்த்தால் தயவு செய்து அவர்களுக்குப் புரியும்படி எடுத்து சொல்ல வேண்டியது நமது கடமை. இல்லையா?

No comments :

Post a Comment