Saturday, October 7, 2017

மனதில் தோன்றிய எண்ணங்கள் 61 TO 75

61. ஒரே எண்ணம், ஒருவரையொருவர் புரிதல், பாராட்டுதல், சந்தித்தல், சந்தோஷித்தல்  அதுவே முகநூல் நட்பு. வாழ்க வளர்க.

62. போதை, பேதை இவை இரண்டையும் தவிர்த்தவன் எந்தக் காரணம் கொண்டும் சோடை ஆக மாட்டான். முயற்சி செய்தால் நிச்சயம் ஒரு மேதையாகி விடுவான்.

63. தாயிற் சிறந்த கோயிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. இந்தப் பொன்மொழியில் நம்பிக்கை உள்ளவர்கள் இப்போ இங்கு அதிகம் இல்லை.

64. வயிறு காலியாகி உணவு வேண்டும் என்பது பசி. வயிறு காலியாகமல் நாக்கு உணவு வேண்டும்  என்பது பசியார்வம். பசி நல்லது பசியார்வம் கெடுதல்.

65. கூட்டுகுடும்பங்களுக்கு முக்கியத்துவம், பெற்றோர் சொல்படி நடப்பது, திறமையாக நடனம் ஆடும் கதாநாயகர்கள், தெலுங்கு சினிமாக்களின் சிறப்பு.

66. மாலை வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்டிருக்கு பூ, வெற்றிலை, பாக்கு,பழம், குங்குமம், சட்டைத்துணி,சுண்டல் கொடுத்து கௌரவிக்க வேண்டும்

67. பட்டாணி, பாசிப் பருப்பு, நிலக்கடலை, காரமாணி, கடலைப்பருப்பு, வெல்லப் புட்டு, எள்பொடி,கொண்டக் கடலை,மொச்சை சுண்டலோடு பூஜிக்கிறோம்.

68. நவராத்திரி ஒன்பது நாளும் கொலுவில்  இருக்கும் துர்கா, லக்ஷ்மி சரஸ்வதி தேவதைகளுக்கு  தினம் பூஜை செய்து அவர்கள் அருளை வேண்டுகிறோம். 

69. ஒரு பெண்ணை / படத்தை பார்க்கும் பொழுது ஏற்படும் ஆபாச எண்ணங்களை தவிர்க்க,வெறுக்க வேண்டும்.கெட்ட எண்ணங்கள் குறையும்.மனம் தூய்மையாகும்

70. ஒரு நாள் முகநூல் நேரம்:40 வயது வரை கிடையாது. 50 வரை 30 நிமிடம், 60 வரை 1 மணி, 80 வரை 2 மணி. ஒவ்வொரு முறையும் 15 நிமிடம் செலவிடலாம்

71. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும். மாக்கள் என்றால் படிப்பு அறிவில்லாதவர்கள். மாக்களை மக்கள் ஆக்குவது படித்தவர்கள் கடமை.அது மனித தர்மம்

72. பொய் என்றால் என்ன என்று கேட்க வேண்டும். உண்மையே பேச வேண்டும். தைரியமும், இக்கட்டான நிலையை சமாளிக்கும் திறனும் ஒருவருக்கு வரும்.

73. தவறு செய்வது சகஜம். மன்னிப்புக் கேட்பது கஷ்டம். சுயகௌரவம்  தடுக்கும். விடக்கூடாது. அதனால் வேற்றுமை அகலும். உறவு நீடிக்கும். வாழ்க 

74. நாம், நம்மைவிட தாழ்ந்தவர்களையும் கஷ்டப்படுபவர்களையும் பார்த்து இரக்கம் கொண்டால், ஆண்டவன் நம் மீது இரக்கம் கொள்வார் என்பது நிச்சயம்

75. ஸ, ஹ, ஷா, க்ஷ, போன்ற எழுத்துக்கள் நடைமுறையில் இருந்து விலக்கப் பட்ட பின் மந்திரங்கள் கற்றுக்கொள்வதும், உச்சரிப்பதும்  கடினம் .



No comments :

Post a Comment