Friday, October 13, 2023

சிரிப்பு வெடிகள்-19.

1. ரவி : ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன், வெறும் டீ மட்டும் தானா மச்சீ?


ராமு : பின்ன என்ன செய்யணும்?


ரவி : கடிக்க... ஏதாவது?


ராமு : நாய் இருக்கு... அவுத்துவிடவா?


****************

2. உலகத்தையே ஒரு கலக்கு கலக்கனும்னு ஆசை ஆனா, அந்த கரண்டித்தான் எங்க இருக்குனு தெரியல்ல.


******************

                                   

3. ''டேய்..ஓடாதே..நில்ரா..


எதுக்குடா


இவளை தூக்கிட்டு ஓடறே ?''


''நீங்கதானே சார் சொன்னீங்க.


விளையாட்டு விழா ஆரம்பிக்கறதுக்கு முன்னால  , ஜோதியைத் தூக்கிட்டு ஓடணும்னு '' 


****************


4. "(என்ன இவ! இன்னக்கி இட்லில இவ்ளோ ஓட்ட போட்டு வச்சுருக்கா)"


"என்னங்க இடியாப்பம் எப்டி இருக்கு"


"(ஆத்தி இடியாப்பமா இது) சூப்பர் செல்லம்.


*****************


5. ஜோதிடர் : உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால் உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைவாள்.

.

கோபு : யோவ் அது மச்சம் இல்லய்யா 'சூடுய்யா" - அதை வச்சதே என் மனைவி 


***************


6. சார்! நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?


கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா.....?


கல்யாணத்துக்கு முன்னாடிதான் சொல்லுங்களேன்.....


கல்யாணத்துக்கு முன்னாடி, எனக்கு முருகனைத்தான் ரொம்பப் பிடிக்கும்.


அப்போ பின்னாடி.....?


அட, அதை ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வமே இல்லை.....!!!


*****************


7. சத்தியவான் சாவித்திரி தன் கணவனை எமதர்ம ராஜாவிடமிருந்து தன் தந்திர வரங்களால் கடுமையாகப் போராடி மீட்டாள்.


கதையின் கருத்து :--

ஒரு புருஷன பொண்டாட்டிகிட்ட இருந்து எமதர்மனால கூட காப்பாத்த முடியாது.....!!!


*******************

8. மனைவி:

ஏங்க!  உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு என் புத்தியை செருப்பாலத்தான் அடிச்சுக்கோணும்.....!


கணவன்:

செருப்பு இந்தா இருக்கு.....! புத்திக்கு எங்கே போவ!!??


                  *************

9. கணவன்: 

"என்ன சமைச்சிருக்கே? சாணி வரட்டி மாதிரி இருக்கு. நல்லாவேயில்லை".


மனைவி: 

"கடவுளே! இந்த மனுஷன் இன்னும் என்னவெல்லாம் சாப்பிட்டுப் பார்த்திருக்காரோ, தெரியலையே...


                 *************

No comments :

Post a Comment