Sunday, November 28, 2021

நவராத்திரி வழிபாடு

நவராத்திரிவழிபாடு தோன்றியதுஎப்படி? 

முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று, தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் அல்லலுற்றனர். 

தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை. அனைவரும் இந்த இரு அரக்கர்களையும் கண்டு அஞ்சி நடுங்கினர். இனியும் இப்படியே போனால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள், விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு, என்ன செய்வது என ஆலோசித்தனர்.

ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும் மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.மக்களின் துன்பம் கண்டு சகியாத அவளும் மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலை என ஆனார்கள். அதே போல இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள். அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. 

அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.

அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது. அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். ஏன் ராத்திரி? ஒன்பது பகலில் கொண்டாடலாம் என்று கேள்வி எழுவது சகஜம். அந்நாட்களில் போருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு. மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும்.

அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும், மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.

9 நாட்கள் நிறைவடைந்து 10-வது நாளான விஜயதசமி அன்று அம்பிகையானவள், ஆக்ரோஷத்துடன் அதர்மங்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டி பக்தர்களுக்கு அருள் பாலிப்பதையே இந்த 10 நாட்களின் விரதம் மற்றும் பூஜை குறிக்கிறது.

ஒன்பது நாட்களிலும் தேவிபாகவத பாராயணம் செய்யலாம். சுமங்கலிகளையும், கன்னிப் பெண்களையும் இல்லத்திற்கு வரவழைத்து, அவர்களை தேவியாகவே கருதி தாம்பூலம், பழங்கள், வஸ்திரங்கள், வீட்டு உபயோகத்திற்கு தேவையான பொருட்களை அவரவர் வசதிக்கேற்ப அளித்து மகிழலாம்.

இந்த நாட்களில் கொண்டைக்கடலை, கடலைப் பருப்பு உள்ளிட்ட பல்வேறு பயறு வகைகளுடன் விதவிதமான நைவேத்யங்களை நாளுக்கு ஒன்றாக படைத்து வழிபட வேண்டும். பராசக்தியின் பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாடி அன்னையை ஆராதித்தல் சிறப்பும், மேன்மையும் தரும்.

அம்பிகையை - சக்தி சொரூபத்தை நினைத்து தியானிப்பதால், சகல பாவங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். நவராத்திரி நாட்களில் குடும்பத்தினர் அனைவரும் அதிகாலையிலேயே நீராடி கூட்டுபிரார்த்தனை செய்யுங்கள்.

பூஜையறையைச் சுத்தம் செய்து, கொலு மேடை, பூஜையறையில் “லட்சுமித்தாயே! உன்னருளால் உலக உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்று பிரார்த்தித்து ஐந்துமுகம் விளக்கேற்றி, சாம்பிராணி, பத்தி ஏற்றி வையுங்கள். இதனால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். 

குழந்தைகளுக்கு தெய்வீக விஷயங்களைக் கற்றுக் கொடுங்கள். அபிராமி அந்தாதியில் ஒரு பாடலை மனப்பாடம் செய்யச் சொல்லுங்கள்.

கொலு பார்க்க வரும் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், மலர்ச்சரம் கொடுத்து வழியனுப்புங்கள். . இதனால் நம் இல்லம் செழிக்கும். 

பசுவிற்கு அருகம்புல், அகத்திக்கீரை கொடுத்து, மும்முறை வலம் வந்து வழிபட்டால் மூன்று தேவியை வழிபட்ட பலன்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு, முதியோர்களுக்கு உதவி செய்யுங்கள். இதனால் அம்மன் மனம் குளிர்ந்து வேண்ம் வரம் தருவாள்.

அம்மன் கோயில்களில் விளக்கேற்றுங்கள். மாலையில் விளக்குபூஜை நடத்துங்கள். கன்னிப் பெண்கள் துர்க்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபட்டால் விரைவில் திருமணம்.ஒரு நாள் கும்பிட்டா...ஒன்பது நாள் கும்பிட்ட பலன்: நவராத்திரி ஒன்பது நாட்களிலும் பூஜை நடத்த இயலாவிட்டால் அஷ்டமி திதிவரும் தினத்தன்று மட்டுமாவது அவசியம் பூஜிக்க வேண்டும்.

மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள 18 நாமாவளிகள்

சாரதா நவராத்திரி புண்ணியகாலத்தில் ஜகன்மாதாவான அன்னை பராசக்தியை துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதியாக வழிபடுவது நமது வழக்கத்தில் இருந்து வருகிறது. நவராத்திரி 9 நாட்களிலும் அன்னையை லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, துர்கா அஷ்டோத்ரம், லக்ஷ்மி அஷ்டோத்ரம், சரஸ்வதி அஷ்டோத்ரம் போன்ற அம்பிகைக்கு உகந்த ஸ்தோத்திரங்களால் அர்ச்சனை செய்வதும், பாராயணம் செய்வதும் சிரேஷ்டமாகும். 

நேரம் இல்லாதவர்கள் கீழ்காணும் நாமங்களை சொல்லி, அன்னைக்கு உகந்த செம்பருத்தி,செவ்வரளி, செந்தாமரை, மல்லி போன்ற மலர்களை அம்பிகைக்கு சாற்றி, தங்களால் இயன்ற பழம், பால், பானகம், உணவு வகைகள், சுண்டல் இதில் ஏதாவது ஒன்றை அன்னைக்கு நிவேதனம் செய்து, தூபம் தீபம் காட்டி எளிமையாக பூஜையை செய்யலாம்., நாம் செய்யும் பூஜையானது எளிமையாக இருத்தாலும் ஆத்மார்த்தமாக, மனதை அலையவிடாமல், மனம் ஒன்றி தூய அன்போடு அன்னையை வழிபடுவதே முக்கியமானதாகும்.

துர்காதேவி

ஓம் துர்காயை நம:

ஓம் மகா காள்யை நம:

ஓம் மங்களாயை நம:

ஓம் அம்பிகாயை நம:

ஓம் ஈஸ்வர்யை நம:

ஓம் சிவாயை நம:

ஓம் க்ஷமாயை நம:

ஓம் கௌமார்யை நம:

ஓம் உமாயை நம:

ஓம் மகாகௌர்யை நம:

ஓம் வைஷ்ணவ்யை நம:

ஓம் தயாயை நம:

ஓம் ஸ்கந்த மாத்ரே நம:

ஓம் ஜகன் மாத்ரே நம:

ஓம் மகிஷ மர்தின்யை நம:

ஓம் சிம்ஹ வாஹின்யை நம:

ஓம் மாகேஸ்வர்யை நம:

ஓம் திரிபுவனேஸ்வர்யை நம:

லக்ஷ்மிதேவி

ஓம் மகாலக்ஷ்ம்யை நம:

ஓம் வரலக்ஷ்ம்யை நம:

ஓம் இந்த்ராயை நம:

ஓம் சந்த்ரவதனாயை நம:

ஓம் சுந்தர்யை நம:

ஓம் சுபாயை நம:

ஓம் ரமாயை நம:

ஓம் ப்ரபாயை நம:

ஓம் பத்மாயை நம:

ஓம் பத்மப்ரியாயை நம:

ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம:

ஓம் சர்வ மங்களாயை நம:

ஓம் பீதாம்பரதாரிண்யை நம:

ஓம் அம்ருதாயை நம:

ஓம் ஹரிண்யை நம:

ஓம் ஹேமமாலின்யை நம:

ஓம் சுபப்ரதாயை நம:

ஓம் நாராயணப் பிரியாயை நம:

சரஸ்வதிதேவி

ஓம் சரஸ்வத்யை நம:

ஓம் சாவித்ர்யை நம:

ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம:

ஓம் ஸ்வேதா நநாயை நம:

ஓம் ஸுரவந்திதாயை நம:

ஓம் வரப்ரதாயை நம:

ஓம் வாக்தேவ்யை நம:

ஓம் விமலாயை நம:

ஓம் வித்யாயை நம:

ஓம் ஹம்ஸ வாகனாயை நம:

ஓம் மகா பலாயை நம:

ஓம் புஸ்தகப்ருதே நம:

ஓம் பாஷா ரூபிண்யை நம:

ஓம் அக்ஷர ரூபிண்யை நம:

ஓம் கலாதராயை நம:

ஓம் சித்ரகந்தாயை நம:

ஓம் பாரத்யை நம:

ஓம் ஞானமுத்ராயை நம:

நவராத்திரி நாட்களில் நம் வீட்டிற்கு வருகை தரும் அனைத்து பெண்மணிகளையும், பெண் குழந்தைகளையும் அம்பிகையாக பாவித்து அவர்களுக்கு தங்களால் இயன்ற தாம்பூலம் தட்சிணை தருவது அன்னையின் அருளை பரிபூரணமாகப் பெற்று தரும்.

அனைவரும் நவராத்திரி 9 நாட்களிலும் அன்னையை போற்றி துதித்து, பூஜித்து அவளது பேரருளை பெறுவோமாக.

சர்வம் ஜகதம்பார்ப்பணம் 🙏🙏🙏🙏🙏 

No comments :

Post a Comment