Sunday, August 8, 2021

அவ்ளோதாங்க வாழ்க்கை!!!

1. முதல் மூன்று  தோசை சாப்டுற வரைக்கும் வேணுமா வேணுமானு கேட்குறாங்க! அஞ்சாவது தோசை சாப்பிடும் போது போதுமா போதுமானு கேக்குறாங்க!! ஏன்?

2. மூக்கும் முழியுமா இருக்கிற பொண்ண விட, நாக்குக்கு நயமா சமைக்கிற பெண்ணு தான் ஆண்களுக்கு தேவை!!!

3. சுடுகாடு சுடுகாடு னு கேவலமா பேசதீங்க அங்க போறதுக்கு அவனவன் செத்துட்டு இருக்கான்!!!

4. ரேஷன் கார்டு படம் 15 வருஷத்துக்கு முன்ன நாம  எப்படி இருந்தோம்னு காட்டுது! ஆதார் 15 வருஷத்துக்கு அப்புறம் எப்படியிருப்போம்னு காட்டுது!

5. வீட்டுக்குள்ளே புருசனை வெளு வெளுன்னு வெளுத்தாலும், வெளியில் புருசனுக்கு பயப்படுற மாதிரி நடிக்குறதுல, எங்களை அடிச்சிக்க முடியாது!!!

6. உப்பு திண்ணா தண்ணி குடிச்சுதான் ஆகணும் -பழமொழி. கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகணும்-புது மொழி.

7. பட்டுச்சேலை கட்டுனா எல்லா பொண்ணுக்கும் எடுப்பா தான் இருக்கும்! ஆனா அதை வாங்கித்தர புருசனுக்கு தான் கடுப்பா இருக்கும்!!

8. மாசத்துக்கு ஒரு நாள் தான் சம்பளம் தராங்க! ஆனா வேலை மட்டும் தினமும் தராங்க!!

9. கவனிக்கப்படாமல் இறந்தவர்களுக்கு செய்யும் "திதியும்" இறந்த பின் அரசாங்கம் தரும் "நிதியும்" பயனற்றது..!!

10. வசதி இல்லாதவன் ஆடு மேய்க்கிறான்! வசதி  இருக்கிறவன் நாய் மேய்க்கிறான்!!

11. யாரோ பெத்த புள்ளயை கல்யாணம் பண்ணி காலம் முழுக்க சோறு போடும் அந்த உயர்ந்த உள்ளம் தான் ஆண்.

12. கல்யாணம் ஆன பின் ஒன்னு அடி விழும்!  இல்ல, முடி விழும்!! அவ்ளோதாங்க வாழ்க்கை!!!

13. எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருந்தா பிரஷர் வரும்னு சொல்றாங்க எதையும் சாப்பிடலைன்னா அல்சர் வரும்னு சொல்றாங்க. 

No comments :

Post a Comment