Saturday, April 11, 2020

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1381 TO 1395

1381. எனது வாழ்வில் சோதனையான நேரங்களில் எல்லாம் எனது விழிகளில் சுரக்கும் நீரைத் துடைப்பது நீரே. இறைவனே, உனது திருவடிகளே சரணம், சரணம்.

1382. வாழ்க்கை என்கிற நாடக மேடையில் நீங்கள் எந்தக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாலும் நாடகம் எப்போது முடியும் என்று சொல்ல முடியாது.

1383. பக்குவமடையும் போதுதான் சில விஷயங்கள் புரியும். முப்பது ரூபாய் கடிகாரமும், மூன்று லட்சம் ரூபாய் கடிகாரமும், ஒரே நேரம்தான் காட்டும்.

1384. சில விஷயங்கள் அனுபவித்த பிறகு புரியும். செலவழிக்க வழி இல்லாதபோது பர்சில் நூறு ரூபாய் இருந்தாலும். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான்.

1385. தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும் 30,000 சதுர அடி வீட்டில் வசிப்பதும் ஒன்றுதான். ஆகவே அனைவரிடமும் அன்புடன் பழகுங்கள்.

1386. புண்ணியம் என்பது டெபிட் கார்டு மாதிரி. பணம் கட்டி கார்டு வாங்கி பயன் படுத்துவதைப் போல. நற்செயல்களை செய்து அதற்கான பலன்களை ஏற்பது.

1387. நமது முதுமைப் பருவத்தில் நாம் செய்த பாவங்கள் வரிசை கட்டி வந்து கேள்வி கேட்கும். நாம் செய்த புண்ணியங்கள் அதற்கு தகுந்த பதில் கூறும்.

1388. யாருக்கும் தீங்கு செய்து பாவமூட்டையைக் கட்டி விடக்கூடாது. அப்படி செய்திருந்தால் புண்ணிய காரியங்கள் செய்து சமன் செய்து விட வேண்டும்.

1389. நமது வெற்றியும், தோல்வியும் நமது கைகளில் தான் இருக்கிறது. வெற்றி, தோல்விகளை விட வாழ்க்கையை அனுபவித்து வாழக் கற்றுக் கொள்ளவேண்டும்.

1390. இன்னொருவர் வேதனை அவர்களுக்கு வேடிக்கை. இரக்கமற்ற மனிதர்களுக்கு இது வாடிக்கை. வேதனையை தருவோர் தவறுக்காக தண்டிக்கப்படுவதில் தவறில்லை.

1391. எல்லோருக்கும் தங்கள் கருத்துகளை பிறரை பாதிக்காத வண்ணம் கூற உரிமை உள்ளது. அதை ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் அவரவர் அறிவைப் பொருத்தது.

1392. பூக்களின் நிறம் எதுவாக இருந்தாலும், பூவையின் தரம் எதுவாக அமைந்தாலும் அந்த மலர்ச்சியின் வெளிப்பாடு தருவது ஒருவித மயக்கத்தைத் தான்.

1393. சின்னஞ்சிறு கவிதை தான், ஆனாலும் அதன் வாசம் என் நாசி வரை. வாசிக்கும் போதே அதில் தமிழை சுவாசிக்கிறேன். இன்னும் வாசிக்க யாசிக்கிறேன்.

1394. சட்டத்திற்க்கும், தர்மத்திற்க்கும் புறம்பாக யார் எதைச் செய்தாலும் அது கண்டிக்கக்கூடியது, தண்டிக்கக்கூடியது. இல்லாவிடில் சும்மா இருப்பது சுகம்.

1395. கற்பனைக்கும் அளவு உண்டு. அதற்கு மீறி காட்டப்படும் காட்சிகள், எழுதப்படும் எழுத்துகள் ரசிக்கக் கூடியது அல்ல. கண்டனத்துக்கு உரியது.

No comments :

Post a Comment