Wednesday, February 6, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1066 TO 1080

1066. சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இருப்பதுதான்; மனசில் ஒன்றும், வாக்கில் வேறொன்றுமாக இருந்தால், அதுவே அசத்தியம் எனப்படும்.

1067. மனத்தில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக நாம் பேசினால் இறைவன் அடுத்த ஜன்மத்தில் பேசும் சக்தியை பறித்து கொண்டு மிருக ஜன்மத்தை தருவார்.


1068. சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றுபடுவது. மனதிலே தோன்றுகிற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வது.நல்ல விளைவுகளை உண்டக்குவது சத்தியம்


1069. பேச்சினாலும், செயலாலும், எண்ணத்தினாலும் உயிரினங்களுக்கு நன்மையை உண்டாக்குவதே சத்தியம் எனப்படும். கெடுதல் செய்வதெல்லாம் அசத்தியமே.


1070. 
மகன்/மருமகனுடன் உலக நடப்பு, மகள்/மருமகளுடன் ஷாப்பிங், பேரன் பேத்திகளுடன் விளையாட்டு, எல்லோருடனும் அரட்டை, சாப்பாடு. அது சொர்க்கம்.

1071. எனக்கு குடும்பப் பாங்கான, வன்முறை, மது அருந்துதல், ஆபாச நடனங்கள் இல்லாத, நல்ல பாடல்கள்,கருத்துடன் கூடிய திரைப்படம் தான் பிடிக்கும்


1072. பணம் ஒரு இடத்தில் நிலையாக நிற்காது. அது சுற்றிக்கொண்டே இருக்கும்.நம் கையில் இருந்தால் சந்தோஷம்.நம்மை விட்டு போய்விட்டால் வருத்தம்.


1073. 
நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்று சொல்வார்கள்.நல்ல குடும்பத்தில் கிடைக்கும் நல்ல விஷயம் அதிகம்.அதைப்பற்றி எழுதுவது சந்தோஷம்.

1074. ஒரு சினிமா ஹீரோவுக்கு உள்ள தகுதிகள் அழகு, வீரம், பாசம், நேர்மை, பரோபகாரம், மது அருந்தாமை, ஒரு நண்பன், ஒரு பெண் மீது காதல். சரிதானே?


1075. 
வரவுக்குள் செலவு செய்து, சேமித்து, தனது குடும்பத்தை சரியான வழியில் நடத்த தெரியாதவர்கள் எல்லாம் மற்றவர்களைக் குறை சொல்வது வேடிக்கை.

1076. அன்பொடு, பரிவோடு, பாசத்தோடு, பிரியத்தோடு, இரக்கத்தோடு ஒருவரை ஒருவர் நேசித்தால், கணவன் மனைவி உறவுக்கு, ஈடு இணை எதுவும் கிடையாது.


1077. என்னிடம் ஏடிஎம் கார்ட், டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட், ஐபோன் எதுவும் கிடையாது என்று நான் சொன்னால் என்னை பற்றி என்ன நினைப்பீர்கள்?

1078. பாதுகாப்பு சிறிதும் இல்லாத சீட்டுக் கம்பெனிகளில் தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை முதலீடு செய்வது பைத்தியக்காரத்தனம்

.
1079. .அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை போல, அதிக வட்டியை நம்பி முதலையே இழப்பது பெரும் வேதனைக்குறியது. பேராசை பெரு நஷ்டம். விதி வலியது.

1080. சேமிப்புகள் செய்ய சிறந்தது வரிசை முறையில்.1.வீடு,நிலம் 2.தபால் நிலையம்.3.அரசு வங்கி.4.தங்ககாசு. 5.ம்யூசுவல் பண்டு.6.பங்கு முதலீடு.




No comments :

Post a Comment