Thursday, September 7, 2023

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1936 to 1950.

1936. அவமானப்படும் போது  வாழ்க்கை வெறுத்தாலும் அடுத்த நொடியில் இருந்துதான் நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது.


1937. எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீங்களும் அதே பாதையில் அவர்கள் பின் செல்லாதீர்கள். உங்களுக்கான பாதையை நீங்கள் தேர்ந்தெடுங்கள்.


1938. அடுத்தவரோடு ஒப்பிட்டு உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே. உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே.


1939. எத்தனை கைகள் நம்மை கைவிட்டாலும், நமது நம்பிக்கை நம்மை கை விடாது.


1940. இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதீர்கள். கனவுகள் தோன்றுவது இருளில் தான்.


1941. சந்தேகத்தை எரித்துவிடுங்கள். நம்பிக்கையை விதைத்துவிடுங்கள். மகிழ்ச்சி தானாகவே மலரும்.


1942. எனக்கு ஒளியாக நீயிருப்பதால்இருளைபற்றிய கவலை எனக்கில்லை இறைவா.


1943. துன்பம் நம்மை சூழ்ந்த போதும் மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்.


1944. அடுத்தவரோடு ஒப்பிட்டு உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே.


1945. பல முறை முயற்சித்தும் உனக்கு தோல்வி என்றால் உன் இலக்கு தவறு. சரியான இலக்கை தேர்ந்தெடு.


1946. வேதனைகளை ஜெயித்துவிட்டால் அதுவே ஒரு சாதனைதான். உன்னால் முடியும் என்று நம்பு. முயற்சிக்கும் அனைத்திலும் வெற்றியே.


1947. எந்த சூழ்நிலையையும் எதிர்த்து நிற்கலாம். தன்னம்பிக்கையும் துணிச்சலும் இருந்தால்.


1948. எல்லாம் தெரியும் என்பவர்களை விட என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே வாழ்வில் ஜெயிக்கின்றார்.


1949. கடிகார முள் எப்போதும்  ஒலிப்பது  போல் இறை நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தால் அதுவே எல்லாவற்றையும் தரும்.


1950. தவறான பாதையில் வேகமாகச் செல்வதை விட, சரியான பாதையில் மெதுவாகச் செல்வது சிறந்தது.




No comments :

Post a Comment