Tuesday, August 11, 2020

சிரிப்பு வெடிகள் - 11

1. தொலைபேசி : சார் இங்க ஒருத்தரச் சுட்டுட்டார்.
காவலர் : சுட்டது யாருன்னு தெரியுமா?
தொலைபேசி : தெரியும் சார்.
காவலர்: யார் சுட்டது?
தொலைபேசி: சுடலை சார்.
*************************

2. நீங்க அடிச்ச கள்ள நோட்டு ஒரிஜினல் மாதிரிதானே இருக்கு. பிறகு எப்படி மாட்டினீங்க?
காந்திக்கு கண்ணாடி போட மறந்துட்டேன்யா!!
**************************

3. மொளச்சி மூணு இலை விடலை..பாவி மக இப்படி பண்ணிட்டாளே"
என்ன பண்ணிட்டா..?"
தொட்டிச் செடியை புடுங்கி போட்டுட்டா…!"
**************************

4. மனைவி: ஏங்க, போன்ல ஃபிரண்டு என்ன பண்றன்னு கேட்டா உள் பாவாடைக்கு நாடா கோத்து கிட்டு இருக்கேன்னா சொல்வீங்க?
கணவன்: இல்லடி , செல்லம் ! அந்தப் பக்கம் அவனும் அதையே செய்யறதா சொல்லிட்டு , வாட் ஏ கோ இன்ஸிடன்ஸ்ன்னு சொல்லி சிரிக்கறான்.
மனைவி: !!!??
**************************

5. "அண்ணே, இந்த ஆத்துத் தண்ணியெல்லாம் எங்கண்ணே போகுது?"
"இதெல்லாம் கடலுக்குப் போகும்"
"திரும்பி வருமாண்ணே?"
"திரும்பி வராது"
"அப்பறம் எதுக்குண்ணே திரும்பி வராத ஆறுகளுக்கு "ரிவர்ஸ்"னு பேரு வச்சுருக்காங்க?"
*****************************

6. அவன்: ஏண்டா, ஒரு பெண்ணைப்பற்றி தெரியாம எப்படிடா கல்யாணம் பண்ணிக்கிறது?
இவன்: ஏண்டா, ஒரு பெண்ணைப்பற்றி தெரிஞ்ச பிறகு எப்படிடா கல்யாணம் பண்ணிக்கிறது?
****************************

7. கல்யாணத்திற்கு முன் ஒரு பெண் செல்வி. கல்யாணத்திற்குப் பின் அவள் திருமதி.
கல்யாணத்திற்கு முன் ஒரு ஆண் திரு. கல்யாணத்திற்குப் பின் அவன் திரு திரு.
**************************

1 comment :