Tuesday, March 17, 2020

ஆடி மாதமும் தாம்பத்தியமும்

ஆடி மாதம் தாம்பத்தியம் தவிர்ப்பதன் விளக்கம்

ஆடி மாதம் புதுமண தம்பதியர்கள் தாம்பத்தியம் கொண்டுவிட்டால், அதிலிருந்து 10 ஆம் மாதமாகிய சித்திரையில் குழந்தை பிறக்கும். சித்திரை கோடையின் வெய்யில் உச்ச கட்டத்தில் இருக்கும். 

இதனால் கோடை சம்பந்தப்பட்ட, அம்மை, சிரங்கு, கட்டி ஆகியன தோன்றுகின்றன. எனவே புதுமண தம்பதியர் தாம்பத்தியத்தில் இணைந்துவிடாமலிருக்க அவர்களை பிரித்துவிடுகிறார்கள். இது ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. 

ஸ்ரீ வராஹிமிஹிரர் தொகுத்த ப்ருஹத்ஜாதகத்தில் இதற்கான விளக்கம் கிடைக்கிறது. ஒரு தாயின் வயிற்றில் இருக்கும். கருவின் மீதும் கிரகங்கள் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. கரு வளரும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிரகம் தனது ஆதிக்கத்தை கரு மீது செலுத்துகிறது. கருவின் 4 ஆம் மாதத்தில் சூரியன் ஆதிக்கம் செலுத்துகிறது.

இதனால் கருவில் எலும்புகள் உருவாகி, நல்ல வளர்ச்சி அடைகிறன. கருவின் 4 ஆம் மாதத்தில் சூரியன் நீசம், பகை போன்ற ஸ்தானங்களை அடையக்கூடாது. இப்படி சூரியன் கெட்டால், கருவின் எலும்புகள் வளர்ச்சி குன்றி, குள்ளம், கூன், கை, கால்களில் எலும்பில் தேவையற்ற வளைவுகள் தலை பெரிதாகி உடல் சிறுத்துப்போவது, போன்ற குறைபாடுகள் உண்டாகின்றன.

ஆடி மாதம் தம்பத்தியம் கொள்வதால், ஐப்பசி 4 ஆவது மாதமாக அமையும், அப்போது சூரியன் நீசமடைகிறது. எனவே தாம்பத்தியத்திற்கு நம் முன்னோர்கள் ஆடியை தவிர்த்தனர். தாம்பத்தியத்தை தானாகவே தவிர்த்துக்கொள்ளும் அளவுக்கு பக்குவமடையாத, புதுமணத்தம்பதியரை வலுக்கட்டாயமாக பிரித்தனர். தையில் திருமணம் செய்து, தாம்பத்தியம் கொள்வதால், அதன் 4 ஆவது மாதமாக சித்திரை அமையும். சித்திரையில் சூரியன் உச்சம். எனவே கருவின் எலும்புகளின் வளர்ச்சியில் எந்த குறைபாடும் இருக்காது. 

அதுபோல் வைகாசியில் திருமணம் செய்துகொண்டு, தாம்பத்தியம் கொள்வதால், அதன் 4 ஆவது மாதமாக ஆவணி அமையும். ஆவணியில் சூரியன் ஆட்சி. எனவே கருவின் எலும்பு வளர்ச்சி நன்றாக அமையும். எனவே திருமண முஹூர்த்தம் வைப்பதில் இவ்விரு மாதங்களுக்கு முதலிடம் கொடுத்தனர் நம் முன்னோர்கள். 

ஐப்பசி, கார்த்திகை, மாசி ஆகிய மாதங்களுக்குரிய 4 ஆம் மாதம் சூரியன் பகையாவதால் இந்த மாதங்களில் திருமணம் செய்யக்கூடாது என்றனர். 

இப்போது எல்லாம் மாறிவிட்டது. சில சாஸ்த்திர சம்பிரதாய மீறல்களால், எலும்பு குறைபாடுடன், உடல் ஊனமுற்ற குழந்தைகள் பிறந்துவிடுகிறன. இதற்கு முழு பொறுப்பு பெரியோர்களே.

No comments :

Post a Comment